Headline

அதிக மக்களை கவர்ந்த - வீடியோ

0 comments

இந்த வீடியோ உலகம் மற்றும் உயிர்கள் தோற்றம் பற்றியது.

உலகியல் வாழ்வில் மனித குல மேம்பாட்டிற்கான இயற்கையன்னையின் வனப்பும் இறைவனின் கருணையும் இணைந்து எமக்கு கிடைத்த அருங்கலைகள் ஏராளம். மனிதன் பேசவும் எழுதவும் தொடங்க முன்னர் ஆடவும் அதற்கேற்ப இசைக்கவும் தொடங்கி விட்டான். கலைகள் மனிதரின் கவலைகளை மறக்கவும், உலகியலை இறையின்பத்தோடு உய்த்துணர்ந்து அனுபவித்து இன்புறவும் பயன்பட்டு வருகின்றன.


கடலும் காப்பற்ற வில்லையே ஈழத்தமிழரை

2 comments


போர் பீதி காரணமாக இலங்கையில் இருந்து படகில் தப்பி வந்த 6 பெண்கள் உள்பட 9 தமிழர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் 10 பேர் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் மீட்கப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஒரு படகு வந்தது. இதைப் பார்த்த கொத்தபல்லி மண்டலம் சுப்பம்பேட்டை மீனவர்கள்இ காக்கிநாடாவில் உள்ள கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் படகில் விரைந்து சென்றுஇ உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

மீட்கப்பட்டவர்கள் இலங்கையைச் சேர்ந்த சிவராஜ் ஜெகதீஷ்வரன்இ ஓபாக்இ ஏசுதாஸ்இ இந்திரகுமார்இ அமீர்தாஸ்இ நிரஞ்சன்இ கமலாதேவிஇ பாத்திமாஇ பிரசாம்பர்இ சைதா என விசாரணையில் தெரியவந்தது.

அவர்களுக்கு கொத்தபல்லி ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் இந்திரகுமார்இ சைதாஇ பாத்திமா நிரஞ்சன்இ கமலாதேவி ஆகியோரின் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவர்களை தீவிர சிகிச்சைக்காக காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மீட்கப்பட்ட இலங்கை தமிழர்கள் கூறுகையில்இ

போருக்கு பயந்து முல்லைத்தீவு பகுதியில் இருந்து 19 பேர் பத்து நாட்களுக்கு முன்பு 2 படகுகளில் தமிழகம் நோக்கி புறப்பட்டோம். இதில் ஒரு படகில் 9 பேரும் மற்றொரு படகில் 10 பேரும் பயணம் செய்தோம். கடலில் திக்கு தெரியாமல் அலைந்தோம்.


அப்போது காற்று வேகமாக வீசியதால் 9 பேர் வந்த படகு திடீரென கடலில் கவிழ்ந்து மூழ்கியது. அதில் இருந்த 6 பெண்கள்இ ஒரு பெண் குழந்தை உள்பட 9 பேரும் நீரில் மூழ்கினர். கடவுள் செயலால் நாங்கள் தப்பிவிட்டோம். கடலில் மூழ்கிய 9 பேரும் இறந்திருக்கலாம் என நினைக்கிறோம் என்றனர்.


நன்றி
-தமிழ்வின்


இலங்கைக்கு அமெரிக்கா வச்ச ஆப்பு

6 comments


வன்னியில் இடம்பெயர்ந்து ''மக்கள் பாதுகாப்பு வலயத்தில்'' வாழும் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே சிறீலங்காவுக்கான நிதி உதவிகள் அனைத்துலக நாணய நிதியத்தினால் வழங்க இடமளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மோதல் தவிர்ப்பு வலயத்தில் வாழும் மக்களின் பாதுகாப்பை சிறீலங்கா அரசாங்கம் உறுதிப்படுதினால் மட்டுமே அனைத்துலக நாணய நிதியத்தினால் சிறீலங்காவுக்கு வழங்க இருக்கும் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அமெரிக்க அரசாங்கம் ஆதரவளிக்கும் என அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மக்கள் பாதுகாப்பு வலயத்தில் வாழும் மக்களின் பாதுகாப்பு குறித்து சிறிலங்கா அரசாங்கம் மிகக் குறைந்த நடவடிக்கைகளையே எடுத்துள்ளது. இதேநேரம் அப்பகுதியில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்துலக தொண்டு நிறுவனங்களை சிறீலங்கா அரசாங்கம் அனுமதிக்காமை மற்றும் அனைத்துலகக் கண்காணிப்பாளர்களை அனுமதிக்க தவறியுள்ளதாகவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.


மேற்கூறப்பட்ட காரணங்களை முன்வைத்து 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அனைத்துலக நாணய நிதியம் ஊடாக வழங்குவதற்கான காலத்தை அமெரிக்க நீடித்துள்ளது.


தனி ஈழம் அமைத்து கொடுப்பேன் ஜெயலலிதா பேச்சு - வீடியோ

0 comments


இலங்கை மண்ணிலேயே ஈழத் தமிழர்கள் ஈழம் காண்பார்கள்; அது அவர்களின் அன்னை பூமி; அது அவர்களின் உரிமை பூமியும் கூட. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி நான் ஈழம் அமைப்பேன். இலங்கையில் தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னது இந்திய தேசத்திற்கு விரோதமான செயல் அல்ல என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள திருப்பூரில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கைத் தமிழர் பிரச்சினையில், எண்ணற்ற நாடகங்களை அரங்கேற்றி வந்த கருணாநிதி, இன்று ஒரு உண்ணாவிரத காட்சியையும் அரங்கேற்றி முடித்திருக்கிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கையில் நடைபெற்று வரும் சண்டையை நடத்துவதே இந்திய இராணுவம் தான் என்ற குற்றச்சாட்டை உலகெங்கும் இருக்கும் தமிழர்களும், பல்வேறு அமைப்புகளும் தெரிவித்து வரும் நிலையில், கருணாநிதி இன்று நடத்திய உண்ணாவிரத நாடகம் யாருடைய கவனத்தை ஈர்க்க? அல்லது யாரை ஏமாற்ற? உறுதியான நடவடிக்கை எடுக்கிறோம் என்று மத்திய அரசு தனக்கு வாக்குறுதி அளித்ததால், உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதாக கருணாநிதி கூறி இருக்கிறார்.



என்ன உறுதியான நடவடிக்கை? எப்போது அந்த நடவடிக்கை? இத்தனை நாளாக ஏன் இல்லை அந்த நடவடிக்கை?.

இரண்டு நாட்களுக்கு முன்னர், இந்திய தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இந்திய இராணுவம் தங்களுக்கு இந்தப் போரில் என்னென்ன உதவிகளைச் செய்தது என்பதை பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார்.

இலங்கையின் வடபகுதியில் போர் நடைபெறும் இடங்களில் உள்ள விமானத் தளங்களை இந்திய இராணுவம் தான் செப்பனிட்டுத் தந்தது. தற்காப்பு ஆயுதங்கள் அனைத்தும் இந்திய இராணுவத்தால் தரப்பட்டன. போர் பகுதியில் உளவு வேலைகளை செய்யத் தேவையான நவீன கருவிகள் எல்லாம் இந்திய இராணுவம் இலங்கை இராணுவத்திற்கு கொடுத்தது.

வடக்கு இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளைப் பற்றிய அடிப்படை பூகோள தகவல்கள், அதாவது Geographical விவரங்கள் இலங்கை இராணுவத்திடம் இவ்வளவு காலமும் இல்லாமலேயே இருந்தது. அதனால் தான் தமிழர் பகுதிகளில், அதாவது வவுனியா, முல்லைத்தீவு, வன்னிக் காடுகள் போன்ற பகுதிகளில் இலங்கை இராணுவத்தால் இவ்வளவு காலமும் முன்னேறிச் செல்ல முடியவில்லை.

இப்பொழுது, இந்தப் போரில் தான் இலங்கை இராணுவம் இந்திய இராணுவம் அளித்த புலனாய்வு உதவியோடு தமிழர் பகுதிகளைப் பற்றிய பூகோள விவரங்களைப் பெற்று முன்னேறிச் சென்றிருக்கிறது. இலங்கை இராணுவத்தின் எல்லா முன்னேற்றத்திற்கும் இந்திய இராணுவத்தின் உதவி தான் அடிப்படை என்பது உலகறிந்த உண்மை.

இந்தியாவில் இலங்கை இராணுவ வீரர்கள் படை பயிற்சி பெற்றார்கள் என்று இந்திய இராணுவம் இலங்கை இராணுவத்திற்கு இந்தப் போரை நடத்த அளித்த ஒவ்வொரு உதவியையும் பட்டியலிட்டு தெரிவித்தார் கோத்தபாய ராஜபக்ச.

இலங்கை இராணுவத்திற்கு இந்தியா இராணுவ உதவிகளையும் செய்யக்கூடாது. ஆயுதங்களையும் அளிக்கக் கூடாது என்று நான் கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனையோ முறை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறி வந்திருக்கிறேன். பல பத்திரிகைகளில், என்னுடைய வேண்டுகோள் வெளியானது.



பல பத்திரிகைகள் இலங்கை அரசுக்கு இந்திய அரசு செய்யும் இராணுவ உதவிகளை புலனாய்வு செய்து கண்டுபிடித்து செய்தி வெளியிட்டன. அப்போதெல்லாம், மத்திய அரசிடம் இராணுவ உதவிகளை இலங்கைக்கு செய்யாதீர்கள் என்று வலியுறுத்தாத கருணாநிதி, இன்றைக்கு லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் அரசு முகாம்களில் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகி இருக்கும் நேரத்தில், இந்த உண்ணாவிரதம் இருந்ததால் அவர்களுக்கு என்ன உதவி கிடைத்தது?.

இலங்கைப் போரில் மத்திய அரசின் ஈடுபாடு இன்று எல்லோருக்கும் தெரிந்துவிட்ட நிலையில், தேர்தல் களத்தில் காங்கிரசோடு கைகோர்த்து நின்றால், தனக்கு ஏற்படப்போகும் அவமானகரமான தோல்வியை நினைத்து, மக்களின் கவனத்தை திசை திருப்ப கருணாநிதி இன்றைக்கு ஒரு உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றினார் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

இலங்கைத் தமிழர்களை காக்க தனி ஈழம் தான் ஒரே தீர்வு. தனி ஈழம் அமைத்தே தருவேன் என்று நான் பேசியதற்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச, இந்திய அரசு தங்களுக்குச் செய்த உதவிகளையெல்லாம் பட்டியலிட்ட போது, கருணாநிதி அதைக் கண்டுகொள்ளவில்லையே! ஏன்?.

வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி, இந்தியாவில் இருந்து தூதுவர்களை ராஜபக்சவுடன் பேச்சு நடத்த கடந்த வாரம் அனுப்பினார்களே, அவர்கள் ஏன் போர் நிறுத்தத்திற்கு வழி செய்யவில்லை? போரை நடத்துவதே இவர்கள் தானே!


எனவே தான் சொல்லுகிறேன், போரை நடத்தும் அரசாங்கம் கருணாநிதி பங்கேற்றிருக்கும் இந்திய மத்திய அரசாங்கம். இன்றைக்கு திடீரென்று கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது தமிழக மக்களை ஏமாற்றத் தான்.

தேர்தல் களத்தில் ஈழப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவாகி இருப்பதால், மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்க கருணாநிதி நடத்திய மோசடி செயல் திட்டம் தான் இந்த உண்ணாவிரதம்.

இன்று அதிகாலை 4:00 மணியில் இருந்து தமிழர்கள் வாழும் பகுதிகள் மீது இலங்கை இராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தியதாக கொழும்பில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. 6:00 மணி நேரம் நடைபெற்ற அந்தக் கொடூரத் தாக்குதலை இந்த உண்ணாவிரத நாடகம் உலகின் பார்வையில் இருந்து மறைத்துவிட முடியாது.

மனிதாபிமான அடிப்படையில் செய்ய வேண்டிய உதவிகளை இந்த நேரத்தில் கூட இந்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்காக அறிவிக்கவில்லை. சார்க் அமைப்பின் சக உறுப்பு நாடான இலங்கையை தனது செல்வாக்கைக் கொண்டு நிர்பந்தித்திருக்க வேண்டிய இந்தியா, தமிழர் நலனில் பாரா முகமாக இவ்வளவு காலமும் இருந்துவிட்டது. அந்தக் களங்கத்தைப் போக்க கருணாநிதி நடத்தும் இந்த நாடகம் ஈழத் தமிழர்களுக்கு எந்தப் பயனையும் தராது.



மாறாக, கருணாநிதி மத்திய அரசை நிர்ப்பந்தித்து உடனடியாக இலங்கைத் தமிழர்களைக் காக்க போர் நிறுத்தம் செய்யட்டும். இந்தியாவில் இருந்து யாரையெல்லாம் அனுப்பி இலங்கையில் மக்களுக்கு உதவ முடியுமோ அவர்களையெல்லாம் அனுப்பட்டும். இலங்கைத் தமிழர்களுக்கு தனி ஈழம் அமைத்துத் தருவேன் என்று பிரகடனம் செய்ததற்காக என் மீது சிறிலங்கா அரச தலைவர் ராஜபக்சவின் இராணுவச் செயலாளர் கடும் கோபம் கொண்டு பதில் அளித்திருக்கிறார்.

இலங்கையில் இல்லாமல் வேறு எங்காவது ஜெயலலிதா ஈழம் அமைக்கட்டும் என்று கோத்தப்பாய ராஜபக்ச கூறி இருக்கிறார். ஈழத் தமிழர்கள் அவர்கள் மண்ணிலேயே ஈழம் காண்பார்கள். அவர்கள் அன்னை பூமி அது. அவர்களது உரிமை பூமி அது.

இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி ஈழம் அமைப்பேன். அங்கு இப்போது அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களுக்காக எல்லா உதவிகளையும் செய்வது நாங்கள் அமைக்க இருக்கும் மத்திய அரசின் தலையாய கடமையாக இருக்கும் என்று உறுதி கூறுகிறேன். தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னதைப் பற்றி காங்கிரஸ் மத்திய மந்திரி, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கபில்சிபில், இது தேச விரோத கருத்து, தேசவிரோத செயல், பொறுப்பற்ற செயல் என்று கூறி இருக்கிறார்.

கபில்சிபிலுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தனி ஈழம் அமைப்போம், தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நான் சொன்னது எந்த இந்திய சட்டத்திற்கு எதிரானது? இந்தியாவை துண்டாடி தனி ஈழம் அமைப்போம் என்று நான் சொல்லவில்லையே!

இலங்கையில் தனி ஈழம் அமைத்துக் கொடுப்போம் என்று தானே நான் சொன்னேன். அது எப்படி தேச விரோதச் செயலாகும். எந்த சட்டத்தில் அப்படி சொல்லக்கூடாது என்று இருக்கிறது. கபில்சிபிலுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நான் சொல்லிக் கொள்வேன். தேசபக்தியில் எனக்கு நீங்கள் யாரும் பாடம் சொல்லித் தர தேவையில்லை. நான் அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் தேசியவாதி தான். எனது தேசப்பற்றில் குறை கண்டுபிடிக்க முடியாது. களங்கம் கற்பிக்க முடியாது.

கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் முடிந்த பிறகு, இலங்கை அரசு ஓர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இலங்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் போர்நிறுத்தம் போர் விமானங்களை இனிமேல் பயன்படுத்தமாட்டார்களாம். பெரிய பீரங்கிகளை பயன்படுத்தமாட்டார்களாம். பெரிய துப்பாக்கிகளை பயன்படுத்தமாட்டார்களாம்.

இலங்கைத் தமிழர்கள் செத்துமடிவார்கள் என்பதற்காக அதை எல்லாம் நிறுத்தி வைத்துவிட்டார்களாம். ஆனால், அங்கே விடுதலைப் புலிகள் இலங்கைத் தமிழர்களை பிடித்து வைத்து இருக்கிறார்களாம். ஆகவே, விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுவதற்காக சிறிய ரக துப்பாக்கிகளை மட்டும் பயன்படுத்த போகிறார்களாம். இது என்ன நாடகம்? இது என்ன கேலிக்கூத்து? இதை எப்படி போர் நிறுத்தம் என்று சொல்ல முடியும்? இந்த அறிவிப்பை பார்த்து கருணாநிதி அவசர அவசரமாக உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இந்தக் கபட நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

தன்னலம் மிகுந்த குடும்ப ஆட்சி, தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஏற்பட்டுள்ள தீமைகளையும், அவலங்களையும், நீங்கள் எல்லாம் வேறு வழியின்றி, வேதனையோடு தாங்கிக் கொண்டு இருக்கிறீர்கள் என்றார் அவர்.

நன்றி
புதினம்.காம்


"அவர்கள் மாடுகள்" - இலங்கை அமைச்சர்

0 comments


மேல்மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின் மூலம் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்த 30 வீதமான மக்கள் மாடுகளுக்கு நிரானவர்கள் என்பது தெளிவாவதாகவும், சோறுக்கு பதிலாக புற்களை உண்ணுபவர்களாகவே கருதப்பட வேண்டுமெனவும் சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

மூன்று தசாப்த காலமாக நீடித்து வரும் யுத்தத்திற்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் மனிதர்களாக கருதப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதேவேளை, ஜனநாயக ரீதியில் தமக்கு விரும்பிய கட்சிக்கு வாக்களிக்கக் கூடிய உரிமை காணப்படும் நிலையில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் இவ்வாறான ஓர் கருத்தை வெளியிட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கே அதிகளவிலான சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்கப்பெற்றன.

இவ்வாறான ஓர் பின்னணியில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தோர் மாடுகளுக்கு நிகரானவர்கள் என அமைச்சர் வெளியிட்ட கருத்து சிறுபான்மை மக்களை கேவலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதென அரசியல் நோக்கர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நன்றி
-தமிழ்வின்


போருக்கு ஆயுத உதவி செய்வது இந்தியாதான் முகர்ஜி - வீடியோ

2 comments


சிங்கள் ராணுவத்திற்கும் , தனி நாடு கேட்டு போராடும் விடுதலை புலிகளுக்கும் கடந்த 30 வருடங்களாக நடந்து வரும் போரில் சில சமயம் ராணுவத்திற்கு பின்னடைவும் சில சமயம், விடுதலைபுலிகளுக்கு பின்னடைவும் ஏற்பட்டு கொண்டு இருந்தது. ஆனால் கடந்த வருடம் ஆரம்பத்தில் சிங்கள அரசாங்கம், ஒரு தலை பட்சமாக போர் நிறுத்த அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு விடுதலை புலிகளின் மீது போர் தொடுத்தது,

கடந்த வருடம் சனவரியில் ஆரம்பித்த இந்த போர் நடவடிக்கை இரண்டு தரப்பிற்கு கடுமையான இழப்புகளை அடுத்து, விடுதலை புலிகளின் பெருவாரியான இடங்களை சிங்கள ராணுவம் கைப்பற்றியது.

சிங்கள ராணுவத்தினை வழி நடத்துவது இந்தியாதான், அதற்கு பொருளாதார உதவி, ஆயுதம், போர் நுணுக்கம், உளவுத்துறை உதவி, போர் வீரர்கள் என பல விதத்தில் சிங்கள அரசுக்கு இந்திய உதவி செய்ததாக பத்திரிக்கையிலும் , தமிழக அரசியல் வாதிகள் கூறிவந்தனர்.


ஆனால் இதை டில்லி வாலாக்களும் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் மறுத்து வந்தனர். சில சமயங்களில் இந்தியாவின் பாதுகாப்பு மந்திரியான A.K அந்தொனியும் இந்தியா சிங்கள ராணுவத்திற்கு உதவில்லை , என்று கூறியிருந்தார். மேலும் இராணுவ அதிகாரிகள் தமிழகம் வரும் போதெல்லாம், ராணுவத்தை கொடுத்து உதவில்லை என்று அறிக்கைவிட்டு சென்றனர். இந்த நிலையில் சிங்கள ராணுவத்தில் இந்திய வீரர்கள் உள்ள தகவலை பல ஆங்கில பத்திரிக்கைகள் வெளியிட்டன.


(In the current war against Tamils in Sri Lanka, the Indian Army is the leader of assaults in the war zones of Sri Lanka.

The Sri Lankan army seems to following the lead of Indian Army closely under heavey guidance to root out Tamils and LTTE alike in the Tamils regions of Sri Lanka. * thanks nowpublic.com)



இதனை அடுத்து வெளியுறவு துறையும், பாதுகாப்பு துறையும் சேர்ந்து ஒப்பந்த படி நாங்கள் ஆலொசனைகள் தான் வழங்கினோம், கனரக ஆயுதங்கள் எதுவும் கொடுக்கவில்லை என்று சொல்லி வந்தது.

தற்சமயம் புலிகளை மிகவும் குறைந்த பரப்பளவிற்கு நெருக்கிவிட்டது. மேலும் உலக அளவில் நெருக்கடிக்கு இந்தியா , சிங்கள அரசாங்கம் இரண்டுமே ஆளாகிவிட்டது.

இந்த ஒரு சூழ்நிலையில் சிங்கள் ராணுவத்தில் இந்தியாவின் பங்கு பற்றி என்.டி.டி.விக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரனாப் முகர்ஜி பேட்டி ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-


சிங்கள ஆரசாங்கம் எங்களது நன்பர்கள், அவர்களுக்கு உதவ வேண்டியது எங்களது கடமை, மேலும் தெற்காசியாவில் தீவிரவாத செயல்களை அடக்கும் பணியில் நாங்களும் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு உண்டு. போராளிகளால் இந்தியாவிற்கும் அச்சுருத்தல்கள் உண்டு இதன் காரணமாக நாங்கள், ஆயித உதவிகள் வழங்கி வந்தோம்.இதனிடையில் புலிகளுக்கு சில அமைப்புகள் பெரிய அளவில் கனரக ஆயிதங்கள், மற்றும் தொழில் நுட்ப உதவிகள் வழங்குவது பற்றி எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனால் சிங்களராணுவத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதோடு, எங்களுக்கு(இந்தியாவிற்கும்) எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இந்த காரணத்தினால் இந்தியா நேரடியாக போராளிகளுடன் போரிடவேண்டிய தேவை ஏற்பட்டு விட்டது. நாங்கள் தீவிரவாத செயல்களை முடக்கு ஒரு நடவடிக்கையாகத்தான் இந்த போரைவழிநடத்தினோம். ஆப்கான் மற்றும் ஈராக்கில் அமேரிக்க ராணுவம் மூக்கை நுழைக்கம் என்றால் நாங்கள் எங்கள் அருகில் உள்ள நட்பு நாட்டின் தீவிரவாத செயல்களை நிறுத்த தீவிரநடவடிக்கைகளின் ஏன் ஈடுபடக்கூடாது

இவ்வாறு என்.டி.டி.விக்கு அளித்த ஒரு பேட்டியில் பிரனாப் முகர்சி சிங்கள போரில் இந்திய பங்கு பற்றி கூறினார்.

நன்றி
-வன்னிநெட்


"எங்கள் முகாரிகள் முரசுகளாக மாறும்"

0 comments




மௌனித்துக் கொண்டவர்களே!
இனிமேல் மனிதத்தைப்பற்றிப் பேசாதீர்கள்.
பேசினால் உங்கள் கருத்தைக் காவிவரும் மொழி களங்கப்பட்டுவிடும்.
எட்ட நின்று வேடிக்கை பார்த்துவிட்டுஇ
ஆதாயம் உண்டென்றால் இனவாத அரசின் செயலை ஆதரித்துஇ
இந்த இனஅழிப்பிற்கு,
“பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்று
முத்திரை குத்திவிட்டு முறுவலித்துக் கொள்ளுங்கள்.

இப்போது முகாரிகள் எங்கள் தேசியமொழியாகிக் கிடக்கிறது.
வலியனை வாழ்த்துவது வழமையானதுதான்…
நாங்கள்தான் முட்டாள்கள் போலும்.
எங்கள் ஒப்பாரிகள்….
உங்கள் செவிப்பறையில் மோத மானிடத் துடிப்புக் கொள்வீர்கள் என்று நம்பி,
ஏமாந்து கொண்டிருக்கிறோம்.
எங்கள் பிள்ளையர்தான் எங்கள் வல்லமைகள் என்பதை சில சமயங்களில்….
பிறழ்வுக்கு உள்ளாக்கிவிடும் தவறைச் செய்கிறோம்
தன்கையே தனக்குதவி எனும் இனம்
பிறன் காலடியில் உயிர்வாழ, கையேந்த சபிக்கப்பட்டது எப்படி?

காலங்காலமாக வாழ்ந்த மண்ணில்,
எத்தனை காலமாக ஏதிலிகளாகக்கப்பட்டு,
இனஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு சிறுகச் சிறுக சீரழிக்கப்பட்டோம்.
எவரேனும் எங்கள் வாழ்வைப்பற்றிக் கவலையுற்றுக் குரல் தந்தீர்களா?
இல்லையே…
உங்கள் நாட்டில் நீங்கள் இன்னொரு இனத்தால் ஒடுக்கப்படுகிறீர்கள் என்று
அறியவில்லை என்று எங்கள் காதுகளில் பூச்சுத்தாதீர்கள்;.
இப்போது நாளாந்தம் எம்மண்ணில்,
துடிக்கத் துடிக்க சாவணைக்கும் உறவுகளின் எண்ணிக்கையை,
ஏதோ உணவுப் பயிருக்கு தீங்கு செய்யும்
பூச்சி, புழுக்களைக் கொல்லும் கணக்கில் போட்டுவிட்டதுபோல்,
துளியும் மனவருத்தமின்றி மெத்தனமாக கதைக்கிறீர்களே தவிர,
அதிலும் கொஞ்சம் நிவாரணப்பணம் தந்துதவ நினைக்கிறீர்களே அன்றி,
நாளாந்தச் சாவுகளையும்,
கைகால் இழப்புகளையும்,
மனநலம் குன்றுவதையும்……
உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று
யாரும் அறைகூவல் செய்யாமல் மழுப்புகிறீர்கள்.
அப்படியாயின்,
எங்கள் தாயக மண்ணில் நடைபெறும் இனஅழிப்பு என்பதை
நீங்கள் எல்லோரும் மௌனத்தின் மூலம் அங்கீகரிக்கின்றீர்களா?

அனைத்துலகமே! போதும்..
உங்கள் மனித காருண்யத்தை நன்றாக உணர்ந்து கொண்டவர்கள்
ஈழத்தமிழர்களாகத்தான் இருக்கமுடியும்.
எங்களுக்கான தொப்புள் கொடி உறவுகள்தான்,
எமக்காக தம் வாழ்வைக் கருக்கி நாளாந்தம் தமை வருத்தி வாழ்கிறார்கள்.
அவர்களின் கூக்குரல் கூடவா எவருக்கும் கேட்கவில்லை.
உலகமெல்லாம் தாவரம், பறவை, விலங்கு என்று
எல்லாவற்றையும் பாதுக்காக்க திரளுங்கள்.
மனிதர்களை அதுவும் ஈழத்தமிழர்களை சீ விட்டுவிடுங்கள்.
எங்களுக்காகக் குரல் கொடுக்கவேண்டாம்.
சரி எங்களை அழிக்கச் சிங்கள அரசுக்கு போர் ஆயுதங்களையாவது வழங்காமல் விடலாம் அல்லவா.
ஐயோ..!! நாற்காலி மனிதர்களே!
நாறும் பிணமாகவும், நாயிலும் கேவலமான வாழ்வானதாகவும்
எங்கள் வாழ்வின்று நலிந்து கிடக்கிறது.
எங்கள் வலிகள் உங்களுக்குப் புரியப் போவதில்லை.
நீங்கள் எவரும் புரிய முயற்சிக்கப்போவதும் இல்லை.
தலையிடியும் காய்ச்சலும் தனக்குத் தனக்னெ;றால் தெரியும் அதன் வேதனை.

உலகே!
ஒரு கண்ணில் வெண்ணையும், மறுகண்ணில் சுண்ணாம்பும் தடவிக் கொண்டிருக்கும்
உன் போக்கு மாறும் காலம் வரும்.
எங்கள் முகாரிகள் முரசுகளாக மாறும்.
எங்கள் வலிகள் வல்லமைகளாக உருவெடுக்கும்.
வேண்டாப் பொருளாக விலக்கப்பட்ட நாங்களே
விலைமதிப்பில்லாத விடுதலைக்குச் சொந்தக்காரர்களாக மாறுவோம்.
சர்வதேசம் கண்ணிழந்த கதையை, ஈழப்புத்தகம் வரலாறாய் வரைந்து கொள்ளும்.
இன்று உலகெங்குமாக வாழும் தமிழ் உறவுகளின்
கண்களில் வழியும் கண்ணீரே தாயகம் மீட்கும் மறவர்களின் காப்பரன் என்று
காலம் உணர்த்தும் பாடத்தை இனிவரும் போராட்டங்கள்
முன்னுதாரணம் ஆக்கிக் கொள்ளும்.
யாரெல்லாம் எங்கள் இனத்தின் வாழ்விற்கு விசமிடுகிறீர்களோ…
வெகுவிரைவில் வெட்கித்துக் கொள்வீர்கள்.

வல்லை சகாரா

நன்றி: வன்னித்தென்றல்


காங்கிரசை வீழ்த்தும்வரை போராடுவோம் - சீமான்

2 comments


இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகி பின்னர் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்து சிறைவாசம் அனுபவித்த இயக்குனர் சீமான் நேற்று நிபந்தனை ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று பிற்பகலில் ஜெயிலைவிட்டு வெளியே வந்த இயக்குனர் சீமானை பெரியார் திராவிடர் கழக தொண்டர்கள் வரவேற்று அழைத்து சென்றனர். அவர் நேராக அரியாங்குப்பம் வந்தார். அங்கு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து இயக்குனர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டம் என்னை விடுதலை செய்துள்ளது. இது தனிப்பட்ட சீமானின் விடுதலை அல்ல. கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி. என் மீது போடப்பட்ட வழக்கு தேவையற்றது. தவறானது.

தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு எதிராக எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம், ஆதரித்து பேசக்கூடாது என்ற சர்வாதிகாரம் இருந்தது. அதை எனது வழக்கு உடைத்தெறிந்துள்ளது.

எங்களுக்கு கிடைக்க வேண்டியது விடுதலை. அது கிடைக்கும்வரை போராடுவோம். ஈழ விடுதலையை யார் அங்கீகரிக்கிறார்களோ, விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க யார் பாடுபடுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிப்போம். தமிழீழத்தை ஆதரிக்கும் இயக்கத்துக்கு ஆதரவு அளிப்போம்.

இதற்காக பலபேர் பல வடிவத்தில் போராடுகிறார்கள். 13 பேர் தீக்குளித்து இறந்துள்ளனர். இந்த சமூகத்தை அதிகம் நேசிப்பவர்களை சமூக விரோதிகள் என்கிறார்கள். இதற்கான போராட்டங்களை நடத்தினால் என் போன்றவர்கள் போராட வேண்டியிருக்காது.

காங்கிரசுதான் இனப்பேரழிவுக்கு காரணம். காங்கிரசை வீழ்த்தும்வரை போராடுவோம். அது யாருக்கு சாதகம், பாதகம் என்று பார்க்கமாட்டோம்.

இலங்கை தமிழர் பற்றி பலரும் பேசும்போது, சோனியாகாந்தி ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. அதற்கு என்ன அர்த்தம்? 1-ந் தேதிக்கு பின்னர் என்னை கைது செய்த இடத்திலிருந்து பிரசாரம் தொடங்குவேன்.

இவ்வாறு டைரக்டர் சீமான் கூறினார்.

நன்றி
-தமிழ்வின்


பென்டகானுடன் ஓபாமா தீவிரம் ஆலோசனை! - வீடியோ

0 comments






இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்க அரசின் பல்வேறு துறை உயர்மட்ட அதிகாரிகளுடன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆலோசனை நடத்தியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.


இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா அரசின் பல்வேறு துறைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையில் அமெரிக்க ராஜாங்க திணைக்களம், பென்டகன் தேசிய பாதுகாப்பு கவுன்சில், யுஎஸ்எய்ட், மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இலங்கை விவகாரத்தை அமெரிக்க அரசு தீவிரமாக கருதுவதையே இந்த அவசர கூட்டம் எடுத்துக் காட்டுவதாக வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவிக்கிறது. அதிபர் ஒபாமா இலங்கை நிலவரம் குறித்து தினசரி ஆராய்ந்து, அவதானித்து வருவதாகவும் வெள்ளை மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி
-வீரகேசரி
tubetamil


பாரதிராஜா, அமீர், சேரன் - பேச்சு வீடியோ

0 comments

தமிழ்த் திரையுலகத்தினர் ஒன்று திரண்டு, திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் என்ற அமைப்பினைத் தொடங்கியுள்ளனர்.



பாரதிராஜா - part 1

பாரதிராஜா - part 2



அமீர் - Part 1


அமீர் - part 2



சேரன்


சினேகன்



முழுமையான தகவலுக்கு நண்பர் உண்மைத் தமிழன் தளத்தில் படிக்கவும்.


கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்கா தயாராகிவருகின்றது!

23 comments


வன்னியில் தமிழ்மக்கள் பெரும் எண்ணிக்கையில் தங்கள் சொந்த வாழ்விடயங்களில் இருந்து இடம்பெயர்வது குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை அடைந்துள்ளது.

ஏப்ரல் 21 ஆம் திகதி அமெரிக்க இராஜாங்க அமைச்சின் பேச்சாளர் ரொபேட் வூட் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், யுத்த சூனிய வலையத்தினுள் குண்டுத்தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. இராணுவ நடவடிக்கை அதிகரிக்கப்படுவதால் பொதுமக்களின் அவலங்களும் அதிகரித்து செல்வதாக நம்பகமான தகவல்கள் எமக்கு நாளாந்தம் கிடைத்துவருகின்றன.

சிறிலங்கா அரசாங்கத்தை யுத்த சூனியப்பிரதேசத்தினுள் மக்களின் நலன்கருதி குண்டுத்தாக்கதல்களை மேற்கொள்ளவேண்டாம் என திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டிக்கின்றோம். அதேவேளை பொதுமக்களை யுத்தசூனியப்பிரதேசத்தில் இருந்து வெளியேற தமிழீழ விடுதலைப் புலிகள் தடைகள் எதையும் விதிக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

ஐ.நா.முகவர்களை அனுமதிக்கவேண்டும் என்ற ஐ.நா.செயலாளரின் நிலைப்பாட்டை அமெரிக்காவும் வலியுறுத்துகின்றது. அதை நாம் பலமாக ஆதரிக்கின்றோம்.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் நோர்வே வெளிவிவகார அமைச்சருடன் சிறிலங்கா நிலவரம் தொடர்பாக விரிவாக ஆராய்ந்துள்ளார். வேறு பல நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்திக்கும்போதெல்லாம் இந்த விடயம்குறித்து விவாதித்துள்ளார்.

அவர் இந்த விடயம் குறித்து யார் யார் உடன் எல்லாம் விவாதித்துள்ளார் என்பது குறித்து என்னால் எந்த தகவல்களையும் வழங்கமுடியாது. அவர் சிறிலங்கா தமிழ் மக்கள் விடயத்தில் மிகவும் அக்கறை கொண்டவராக இருக்கின்றார்.
சிறிலங்கா பிரச்சினைகள் குறிதது நாம் தொடர்ந்தும் நெருக்குதல்களை கொடுத்துவருகின்றோம். நாம் செயற்பட்டே அகவேண்டிய மிகவும் முக்கியமான வெளிநாட்டுக்கொள்கை இது. நாம் தொடர்வோம்.

சிறிலங்கா அரசின் மீது கடினமான ஒரு நிலைபாட்டை அமெரிக்கா எடுக்கவுள்ளது என்பதை இந்த கருததுக்கள் கோடிட்டு காட்டுகின்றது. கடந்தாரம் அமெரிக்க வெளியுறவு தொடர்பான குழுவின் முன் கருத்து வெளியட்டபோது, அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹிலாரி கிளின்டன் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிக் குறிப்பட்டபோது அவர்களை கிளாச்சியாளர்கள், என்ற பதத்திலேயே குறிப்பிட்டுள்ளார். மாறாக பயங்கரவாதிகள் என்று குறிப்பிடவில்லை. இதிலிருந்து ஒபாமாவுடைய நிர்வாகம் சிறிலங்கா அரசாங்கம் தொடர்பான கொள்கையினை புஸ் நிர்வாகத்தைப்போலன்றி அணுகுமுறையினை மாற்றிக்கொள்ள உத்தேசித்திருப்பதும் இதிலிருந்து தெரியவருகின்றது.

இதுகுறித்து நேற்று முன்தினம் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், பாதுகாப்பு வலயம் மீது சிறிலங்கா அரசாங்கத்தின் எறிகணை வீச்சுக்களை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டது. உதவி வழங்கும் அமைப்புக்கள் அங்கு சென்று மக்களுக்கு உதவுவதை சிறி லங்கா அரசாங்கம் தடுக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டது.

இதற்கு முந்திய தினம் வழக்கத்திற்கு மாறான ஒரு நடவடிக்கையில் முல்லைத்தீவு பிரதேசத்தின் செய்மதி நிழற்படத்தினை அமெரிக்கா மிகத் தெளிவாக காட்டக்கூடியவாறு வெளியிட்டுள்ளது.

படத்தின் மீது கிளிக் செய்து படத்தை பெரிதாய் பார்க்கவும்.


those two picture only difference 10 days
(Satellite image shows tens of thousands of Sri Lankan civilians squeezed into the last small strip of land co)

சர்வதேச நிறுவனங்களையும், ஊடகங்களையும் அப்பிரதேசங்களுக்கு செல்லவிடாமல் சிறிலங்கா அரசாங்கம் தடுத்தாலும், அங்கே என்ன நடக்கின்றது என்பதை அமெரிக்காவால் கூறமுடியும் என்பதை சிறிலங்கா அரசாங்கத்திற்கு உணர்த்தவே இவ்வாறு இந்த செய்மதிப்படங்கள் அமெரிக்காவால் வெளியிடப்பட்டுள்ளது எனக் கருதமுடியும். பொது மக்களின் வாழ் விடங்களைக் காடடுவதாக மிகத் தெளிவாக, மிக நெருக்கமான படங்கள் உள்ளன.


நன்றி
-பதிவு.காம்
கார்டியன்.கோ


ஈழ ஆதரவு துண்டு பிரசுரத்தால் 13 மாணவர்கள் கைது!!

0 comments


இலங்கை தமிழர் படுகொலை தொடர்பாக ப.சிதம்பரத்திற்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகித்த 13 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை சட்டக்கல்லூரியில் முதுகலை சட்ட படிப்பு படித்து வருபவர் ராஜீவ் காந்தி (வயது 28). இவர் முத்துக்குமார் எழுச்சி இயக்கத்தின் தலைவராக உள்ளார். சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் மத்திய அமைச்சர் ப.சிரம்பரத்தை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

இவருக்கு ஆதரவாக சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குடி கிராமத்தில் மாணவர்கள் மற்றும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள் 13 பேர் பிரசாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதையும், அதற்கு காரணமான காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக துண்டு பிரசுரத்தை விநியோகித்தனர். அப்போது அங்கு வந்த காங்கிரசார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மீது கல்வீசி தாக்கினர். உடனடியாக போலீசார் பாதுகாப்பாக 13 மாணவர்களையும் அழைத்து சென்றனர்.

பின்னர் ஒவ்வொரு போலீஸ் நிலையமாக மாணவர்களை மாற்றி அழைத்து சென்றனர். நேற்று காலை மாஜிஸ்திரேட்டு வீட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் அனைவரும் 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். 13 பேர் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே வேட்பாளர் ராஜீவ்காந்தி வேட்பு மனுதாக்கல் செய்தபோது அவரது பெயருக்கு காங்கிரசார் ஆட்சேபம் தெரிவித்தனர். ஆனால் அவர்களது புகாரை தேர்தல் அதிகாரி நிராகரித்துவிட்டார். இதற்கிடையே ராஜீவ்காந்திக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்னையில் இருந்து சிவகங்கை சென்றுள்ளனர்.

நன்றி
-நக்கீரன்


"தனித் தமிழீழம் ஒன்றே தீர்வு" ஜெயலலிதாவின் பேச்சு - ஒலி வடிவம்

2 comments




சேலத்தில் பிரச்சாரக்கூட்டத்தில் "தனித் தமிழீழம் ஒன்றே தீர்வு" என்று சூளுரைத்த ஜெயலலிதாவின் உரை

இதுவரை இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டு தனி தமிழ் ஈழ மாநிலம் அமைக்க அதிமுக பாடுபடும் என்று கூறி வந்தார் ஜெயலலிதா. ஆனால் முதல் முறையாக தனி தமிழ் ஈழம் அமைக்க அதிமுக பாடுபடும், உருவாக்கியே தீரும் என்பது மிகப் பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.


புலிகளின் போர்நிறுத்த அறிவிப்பை ஏற்க மாட்டோம் - கோத்தபாய

0 comments


விடுதலைப்புலிகளின் ஒருதலைப்பட்சமான போர்நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக பிபிசி தமிழோசை தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் இன்று ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தனர். ஆனால் இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்துவிட்டது.

இலங்கை மோதல்கள் காரணமாக பெரும் மனித நேய நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ஐ. நா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல சர்வதேச நாடுகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தாம் ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்தத்தை அறிவிப்பதாக விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்தனர்.

ஆனால், இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்து விட்டது.

இது தொடர்பாக தமிழோசையிடம் பேசிய இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இந்த நிலையில் விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் கோருவது அர்த்தமற்றது என்று கூறி அதனை நிராகரித்துள்ளார்.

ஆயுதங்களை களைந்துவிட்டு, தாம் பணயமாக பிடித்து வைத்திருக்கும் பொதுமக்களை விடுதலை செய்துவிட்டு, சரணடைவது ஒன்றே விடுதலைப்புலிகளுக்கு இப்போது உள்ள ஒரே வழி என்றும் அவர் கூறியுள்ளார்.

நன்றி
-வீரகேசரி


நமீதாவால் தமிழக காங்கரஸ் ஏமாற்றம்!!!

2 comments



எக்குத் தப்பாக கவர்ச்சி காட்டி, சிறுசுகளையும் பெருசுகளையும் தப்புத்தப்பாக கற்பனை பண்ண வைக்கும் கோடம்பாக்கம் ஹாட் நமீதாவை எப்படியாவது தேர்தல் களத்தில் இழுத்துப் போட முயன்று வருகின்றனவாம் தமிழக கட்சிகள் சில.

நமீதா நின்றால், நடந்தால், உட்கார்ந்தால்... என எல்லாமே செய்தியாகிவிடுவதாலும், இவர் ஜவுளிக்கடை திறக்கப் போனாலும் மாநாடு கணக்காக கூட்டம் கூடி விடுவதாலும், அவரது கவர்ச்சி இளைஞர்களின் ஓட்டுக்களை லபக்கென்று பறித்துவிடும் என்று திட்டம் தீட்டிய காங்கிரஸ், நமீதாவிடம் நேரடியாகவே டீலிங்கில் இறங்கியுள்ளது.

ஆனால் டைம் இல்லை என்று நிர்வாகிகளையும் சூட்கேஸ்களையும் திருப்பி அனுப்பிவிட்டாராம்!

இதுகுறித்து நமீதா கூறுகையில், பிரச்சாரத்துக்கு என்னை காங்கிரஸ்கட்சி அழைத்தது உண்மைதான். ஆனால் நிறைய படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திட்டேன். அதனால நேரமில்லேன்னு சொல்லிட்டேன். பணத்தைவிட கமிட்மெண்ட்தான் எனக்கு முக்கியம், என்றாராம் பக்கா டிப்ளமாட்டிக்காக.

நமீதா இப்போது தமிழில் மட்டுமல்ல, தெலுங்கு, மலையாளத்திலும் 'செம ஹாட் மச்சி' என்று கலக்கி வருவதால், அவரை பிரச்சாரத்துக்கு கட்சி தலைமை அழைத்திருக்கும். அவர் வந்திருந்தால் மக்களை கூடுதலாக கவர்ந்திழுத்திருக்க முடியும், என்கிறார் காங்கிரஸ் நிர்வாகி.
நன்றி
-தட்ஸ்தமிழ்


இந்தியாவின் நிலை பற்றி - மகிந்தவின் செயலாளர்

0 comments


சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இந்திய உயர்மட்டக்குழு நடத்திய பேச்சுக்களின் போது போர் நிறுத்தம் தொடர்பாக பேசப்படவே இல்லை என சிறிலங்கா அரச தலைவரின் செயலாளரும் இந்தப் பேச்சுக்களில் கலந்துகொண்டவருமான லலித் வீரதுங்க தெரிவித்திருக்கின்றார்.
வன்னி நிலை தொடர்பாக அவசரப் பேச்சுக்களை நடத்துவதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது சிறப்புப் பிரதிநிதிகளாக இந்திய வெளிவிவகாரத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரை நேற்று கொழும்புக்கு அனுப்பிவைத்தனர்.

வன்னியில் தொடரும் போரால் அப்பாவிப் பொதுமக்கள் அதிகளவில் கொல்லப்படுவது தொடர்பான இந்தியாவின் கவலையை சிறிலங்காவிடம் வெளிப்படுத்தும் இவர்கள், உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுப்பார்கள் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் நேற்று சுமார் 90 நிமிட நேரம் நடைபெற்ற இந்த உயர்மட்டப் பேச்சுக்களின் விபரங்கள் எதுவும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படாமையால், இந்தியா போர் நிறுத்தத்துக்கான அழுத்தத்தைக் கொடுத்ததா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. இந்தியத் தரப்பினர் இது தொடர்பாக எதனையும் கூறவில்லை.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை கொழும்பில் உள்ள ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க, இந்தியத் தரப்பினர் போர் நிறுத்தம் தொடர்பாக பேசக்கூட இல்லை எனத் தெரிவித்திருக்கின்றார்.

இப்பேச்சுக்களில் அரச தலைவர் மகிந்தவுக்கு உதவியாக லலித் வீரதுங்கவும் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவுப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்குவது போன்ற விடயங்கள் தொடர்பாகவே இந்தியத் தூதுக்குழுவினருடன் முக்கியமாகப் பேசப்பட்டதாகவும் அதற்கான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியத் தரப்பினர் அக்கறை காட்டியதாகவும் லலித் வீரதுங்க மேலும் தெரிவித்தார்.

நன்றி
- புதினம்.காம்


4 நாட்களுக்குள் யுத்தம் நிறைவுக்கு வரும் - கோத்தபாய

0 comments


இன்னும் நான்கு நாட்களுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்தம் நிறைவுக்கு வரும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை பாதுகாக்கும் விசேட இராணுவ நடவடிக்கைகளை படையினர் மோதல் தவிர்ப்பு வலயத்தின் வடபகுதியின் ஊடாக ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவம் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை எனவும், படைவீரர்களது ஆயுதங்கள் மட்டுமே யுத்த களத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மோதல்களினால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக புலிகள் மேற்கொண்டு வரும் பிரச்சாரம் உண்மைக்குப் புறம்பானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யுத்த சூனிய பிரதேசத்திற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் செல்ல அனுமதியளிக்கப்பட வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கையை கோத்தபாய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.


நன்றி
-செய்தி.காம்


இலங்கை பிரச்சினை சாதாரணமானது - ராகுல்காந்தி

7 comments


அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி இன்று கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


அப்போது அவர், ‘’விடுதலைப்புலிகள் இயக்கம் என்பது அப்பாவிகளை கொல்லும் இயக்கமாகும். அந்த இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அது ஒரு தீவிரவாத இயக்கமாகும்.

முன்னாள் பிரதமரும் எனது தந்தையுமான ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது விடுதலைப்புலிகள்தான். அப்பாவி மக்களை அவர்கள் கொன்று வருகிறார்கள்.

இலங்கை பிரச்சினை மிகவும் சாதாரண ஒரு பிரச்சினை ஆகும். இலங்கை தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும். அவர்களுக்கு உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும்.

அவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படக்கூடாது. இதற்கான முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களின் உரிமைகள் கிடைக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பாடுபடும். அவர்களின் துயரை துடைப்பதுதான் எங்களின் தலையாய கடமை, இதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபடும்’’ என்று தெரிவித்தார்.

நன்றி
-நக்கீரன்


ஹிலாரி கிளின்டன் பிரபாகரனை மீட்க முயற்சி!!! - ர.வி

0 comments


மக்கள் மண் சாப்பிட நேரிட்டாலும் விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்தப்பட மாட்டாதென பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்தின் ஒட்டு மொத்த உதவிகளும் நிறுத்தப்பட்டால் கூட போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியில் முன்னெடுக்கப்பட்டுள்ள மனிதாபிமான மீட்புப் பணிகள் எந்த காரணத்திற்காகவும் கைவிடப்பட மாட்டாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.


அமெரிக்காவின் ஹிலாரி கிளின்ரன் உள்ளிட்ட சர்வதேச முக்கியஸ்தர்கள் பிரபாகரனை மீட்க முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நல்ல மனிதர்கள் யார் ? பாவிகள் யார் என்பதனை உலகம் விரைவில் உணர்ந்து கொள்ளும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இடம்பெயர் மக்களை பாதுகாப்பது குறித்து சர்வதேச சமூகம் அக்கறை காட்டவில்லை எனவும் பிரபாகரனை பாதுகாப்பதற்கு அதிகளவு முனைப்பு காட்டி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

நன்றி
-வன்னிநெட்


உண்ணாவிருதத்தில் சத்தியராஜின் வீடியோ பேச்சு!!

2 comments









சினிமா பாடலாசிரியை தாமரை பேசுகையில், கலைஞர்கள் எந்தக் கட்சி ஆட்சி வந்தாலும் ஆளுங்கட்சிக்கு ஆதரவான நிலையையே எடுக்கின்றனர்; நான் அப்படியில்லை; எதையும் வெளிப்படையாக பேசுவேன். தமிழ் ஒரு இனம்; மலையாளி ஒரு இனம். இந்தியன் எப்படி ஒரு இனமாகும்? இதைக் கேட்டால் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுகிறேன் என்கின்றனர்.

சின்னதாகக் கூட உணர்வுகளை வெளிப்படுத்த முடியவில்லை. இலங்கைப் பிரச்சனை பற்றி பேசும்போது "ஜெயலலிதா எதிர்க்கட்சியில் இருப்பதால் எப்படி வேண்டுமானாலும் பேசலாம், ஆட்சியிலிருப்பவர்கள் அப்படி பேச முடியாது'' என்று கருணாநிதி கூறுகிறார். முதல்வராக இருக்கும் கருணாநிதி "என்னால் முடியாது'' என்று சொல்லலாமா? பதவியை ராஜினாமா செய்துவிட்டு மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தால் உங்கள் மதிப்பு மக்கள் மனதில் உயர்ந்திருக்கும்.

ஈழப் பிரச்னையை பொறுத்தவரை ஜெயலலிதா அமாவாசை என்றால் கருணாநிதி அமாவாசைக்கு மறுநாள். சோனியா தான் எல்லாவற்றுக்கும் சூத்திரதாரி என்றார்.

கவிஞர் புலமைப்பித்தன் பேசுகையில், ஒரு ராஜிவ் உயிருக்கு இன்னும் எத்தனை லட்சம் ஈழத் தமிழர்கள் இரையாக வேண்டும்?. புறத்தே வெளுத்து அகத்தே கருத்துள்ள சோனியாவே சொல்லிவிடுங்கள் என்றார்.

நன்றி
-தட்ஸ்தமிழ்


கருணாவுக்கு கூலி கிடைத்தது

0 comments


தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுத்நதிரக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டதாக சிரேஷ்ட அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருணா விடுதலைப்புலிகளின் அமைப்பில் இருந்து விலகி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற கட்சியை ஆரம்பித்திருந்ததுடன் அண்மையில் அதில் இருந்து விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இணைந்துகொணடமை குறிப்பிடதக்கது. கருணா ஆரம்பித்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவராக கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் செயற்பட்டு வருகிறார்.

நன்றி
-குளோபல்தமிழ்நியூஸ்


பழ.நெடுமாறனின் எச்சரிக்கை!!!

0 comments


இலங்கையில் போர் நிறுத்தத்தை இந்திய அரசு வலியுறுத்த மறுத்து வருவதின் பின்னணியில் 'றோ' இருப்பது அம்பலமாகியிருக்கின்றது என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் படுகொலை செய்ய 'றோ' உளவுத்துறைச் சதித் திட்டம் தீட்டியுள்ளது என மிக நம்பகமானத் தகவல் கிடைத்திருக்கிறது.

போர் நிறுத்தத்தை இந்திய அரசு வலியுறுத்த மறுத்து வருவதின் பின்னணி இதுதான் என்பது அம்பலமாகியிருக்கின்றது.

கடந்த காலத்திலும் பல முறை பிரபாகரனை ஒழித்துவிட 'றோ' உளவுத்துறை செய்த பல முயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதைப் போலவே இம்முறையும் இச்சதித் திட்டத்தை விடுதலைப் புலிகள் முறியடிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே, இச்சதியில் ஈடுபட்டுள்ள 'றோ' அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பிரதமர் மன்மோகன் சிங் முன்வர வேண்டும்.

இல்லாவிட்டால் இந்தச் சதிக்கு அவரும் உடந்தை என்ற முடிவுக்குத் தமிழ் மக்கள் வர நேரிடும். இதன் விளைவாக வரலாறு காணாத வகையில் பெரும் கொந்தளிப்பு தமிழகத்தில் ஏற்படும் என்று நான் எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி
- புதினம்.காம்


ஈழதமிழருக்காக பாரதிராஜாவின் புது முடிவு!

0 comments


old video

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிடாததை கண்டித்து, மத்திய அரசு தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்புவதாக தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிவித்துள்ளார்.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து போராடுவதற்காக, தமிழ் திரையுலகினர் சார்பில் 'திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் சார்பில் திரைப்பட வர்த்தகசபை (சென்னை பிலிம் சேம்பர்) வளாகத்தில் இன்று 'தொடர் முழக்க போராட்டம்' நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் இன்று இரவு 7 மணிவரை நடைபெற்றது.

இப்போராட்டத்தில் திரைப்பட நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், வழக்கறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள், மாதர் சங்கத்தினர், இலக்கியவாதிகள், ஓவியர்கள், கலைஞர்கள், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர்.

இக்கூட்டத்தின் இறுதியில், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், இயக்குனர்கள் அமீர், சேரன் ஆகியோர் பேசினர். கூட்ட முடிவில் இயக்குனர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா பேசினார். அப்போது, அவர் கூறுகையில், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிடாத மத்திய அரசு, தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை மீண்டும் மத்திய அரசுக்கே திருப்பி அனுப்புவதாக அறிவித்தார்.

Padma Shri award



இலங்கை தமிழர் பிரச்சனைக்காக தாம் மனம் நொந்து இருக்கும் இந்த சூழ்நிலையில், போர் நிறுத்தம் செய்யாத மத்திய அரசு வழங்கிய இந்த பத்மஸ்ரீ விருது, தனது மிகப்பெரிய உறுத்தலாக இருப்பதாகவும், அதனால் அந்த விருதை திருப்பி அனுப்புவதாகவும் குறிப்பிட்டார் பாரதிராஜா.

நன்றி
-வெப்துனியா.


தமிழ் தெரிந்த ஒருவரை தூதராக நியமிக்காததே இந்த பிரச்சினைக்கு முடிவு காணமுடியவில்லை

0 comments


-net photo
பிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மனநிலை பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை காணமுடிந்தது. இவ்வாறு வவுனியாவில் தங்க வைத்துள்ள இடம்பெயர் தமிழ் மக்களை பார்வையிட்ட வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முல்லைத்தீவு, வவுனியா பகுதிகளில் தமிழர்கள் தங்கவைக்கப்பட்டு உள்ள முகாம்களை பார்வையிட்டு விட்டு நேற்று சென்னை திரும்பிய வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், ஆன்மீகவாதியுமான ஸ்ரீரவிசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி, வீடு வாசல்களை இழந்து, ஆங்காங்கே அமைக்கப்பட்டு உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். ஏறக்குறைய 8 இலட்சம் தமிழர்கள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என்று கருதுகிறேன்.

நான் நேற்று முல்லைத்தீவு, வவுனியா பகுதிகளில் செட்டிகுளம், அருணாசலா உள்பட 8 முகாம்களை சென்று பார்வையிட்டேன்.

மனதை கல்லாக்கிக்கொண்டுதான் அங்கு செல்ல முடியும். மனிதனாக போகமுடியாது என்றுதான் சொல்லவேண்டும். இந்த முகாம்களில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். என்ஜினீயர்கள், டாக்டர்கள், வர்த்தகர்கள் என பல்வேறு தரப்பினர் அங்கு தங்கி உள்ளனர்.

பிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அவர்களுடன் பேசியபோது, இப்படியே விட்டுவிட்டால் அவர்களில் பெரும்பாலானோர் மனநிலை பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை காணமுடிந்தது. அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த தமிழர்களுக்கு வேட்டி, சேலை போன்றவற்றை வழங்கினோம்.

முகாம்களில் தங்கி உள்ளவர்கள் இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் இருக்கிறார்கள். இராணுவத்தால் எந்த தொல்லையும் இல்லை என்று சொல்கிறார்கள்.

இந்திய அரசு எங்களுக்கு உதவும் என்று ரொம்ப நம்பினோம். கைவிட்டு விட்டார்களே என்று வேதனையுடன் தெரிவித்தார்கள். இந்த விஷயத்தில் இந்திய அரசு மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டதாக கருதுகிறோம்.

தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் அளவுக்கு தமிழ் தெரிந்த ஒருவரை தூதராக நியமிக்காததே இந்த பிரச்சினைக்கு முடிவு காணமுடியவில்லை என்று கருதுகிறேன். அத்துடன், இலங்கை பிரச்சினை தீராததற்கு இங்கும் சரி, அங்கும் சரி தமிழர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாததும் ஒரு காரணம் ஆகும்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக இங்கு பந்த் அல்லது உண்ணாவிரதம் போன்றவற்றை மேற்கொள்வதால் அங்கு பிரச்சினை சரியாகிவிடும் என்று சொல்லமுடியாது.

பந்த் நடத்தினோம். உண்ணாவிரதம் இருந்தோம் என்று திருப்தி அடையலாமே தவிர அங்கு பிரச்சினை தீர்ந்துவிடாது. உணவு, உடை என்று நிவாரண உதவிகளைப் பெறும் நிலையில் முகாம்களில் தங்கி இருந்தாலும், தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்லவேண்டும் என்றே விரும்புகிறார்கள்.

இது குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் நேற்று நான் பேசினேன். முகாம்களில் தங்கி இருப்பவர்கள் சொந்த வீடுகளுக்கு உடனடியாக செல்ல முடியாத அளவுக்கு வீடு, வாசல்கள் தரை மட்டமாகி உள்ளன. அவற்றை உடனடியாக சீரமைக்க முடியாது என்று ராஜபக்சே தெரிவித்தார்.

தீவிரவாதத்தை வேரோடு அழித்த பின்பே அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்று ராஜபக்சே தெரிவித்தார். இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்த்து இருக்கலாம்.

நானே பிரபாகரனிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பல முறை முயன்றேன். அதற்கு பலன் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.
ஆனாலும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்து ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள முடியாதபடி நிலையில் உள்ளனர். தங்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்ற பயத்தில் உள்ளனர் என்று தெரிவித்தார்

நன்றி
-வன்னி.நெட்


பெண்கள் கைதால் கொந்தளிப்பான சூழல் நிலவியது.!!!

2 comments

/>
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 5 பெண்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து மருத்துவமனையில் மருத்துவத்திற்குச் சேர்த்துள்ளனர். காலை நேரத்தில் தங்களை கைது செய்ய வந்த காவல்துறையினருடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிங்கள இனவெறி படையினரால் நச்சுக்குண்டுகள் வீசி கொல்லப்பட்டு வரும் அப்பாவித் தமிழ் மக்களை பாதுகாக்கவும், உடனடியாக போர் நிறுத்தம் ஏற்படுத்தவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த 20 பேர் கடந்த 13 ஆம் நாள் முதல் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கைத் தமிழருக்காக உயிர்த் தியாகம் செய்த முத்துக்குமாரன் இல்லம் அருகே கொளத்தூரில் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடக்கிய இவர்கள், காவல்துறையின் கெடுபிடி காரணமாக ம.தி.மு.க. தலைமையகமான தாயகத்திற்கு வந்து அங்கு தொடர்ந்து உண்ணாநிலை மேற்கொண்டு வருகின்றனர்.
/>

10 ஆவது நாளாக நேற்றும் உண்ணாநிலைப் போராட்டம் தொடர்ந்தது.

கைது

நேற்றுக் காலை 5:30 நிமிடமளவில் மத்திய சென்னை காவல்துறை இணை ஆணையர் ரவிக்குமார், துணை ஆணையர் கணேசமூர்த்தி, உதவி ஆணையர்கள் இளங்கோ, சிறீதர்பாபு உள்ளிட்டோர் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் தாயகம் அருகே குவிக்கப்பட்டனர்.

எழும்பூர் ஆதித்தனார் வளைவில் இருந்து இராஜரத்தினம் விளையாட்டுத்திடல் வரையிலான சாலையில் போக்குவரத்தை நிறுத்தினர். காலை 6:00 மணியளவில் தாயகத்திற்குள் காவல்துறையினர் அத்துமீறி நுழைந்தனர். இதனை அறிந்த ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஜீவன், எழும்பூர் பகுதிச் செயலாளர் நிசார் உள்ளிட்ட அந்தக் கட்சியினர் அங்கு விரைந்து வந்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.




பின்னர் காவல்துறை அதிகாரிகள் உண்ணாநிலை இருந்த பெண்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்போவதாக கூறினர். அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உயிர் போனாலும் பரவாயில்லை, போர் நிறுத்தம் வரும்வரை இந்த இடத்தை விட்டு செய்யமாட்டோம் என்று அவர்கள் உறுதியாகக் கூறினர்.

இதனையடுத்து கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி›மருத்துவமனை முதல்வர் கனகபை மற்றும் மருத்துவர்கள் உண்ணாநிலை இருந்த பெண்களை மருத்துவ ஆய்வு செய்தனர். அவர்களின் உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.


ஆனால், அந்தப் பெண்கள் மருத்துவமனைக்கு வரமாட்டோம் என்று உறுதியாகக் கூறிவிட்டனர். அப்போது அவர்களைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சித்தனர். இதனால் காவல்துறை அதிகாரிகளுக்கும் உண்ணாநிலை இருந்த பெண்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சிறிது நேரம் கொந்தளிப்பான சூழல் நிலவியது. இதைத் தொடர்ந்து திருவான்மியூரையடுத்த பாலவாக்கத்தைச் சேர்ந்த தங்கமணி (வயது 45), கொளத்தூரைச் சேர்ந்த ஜெயமணி (வயது 42), லோகநாயகி (வயது 45), திருவண்ணாமலையைச் சேர்ந்த மதி (வயது 32), தேனியைச் சேர்ந்த சித்ராதேவி (வயது 43) ஆகியோரை காவல்துறை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக கைது செய்து ஊர்தியில் ஏற்றிச் சென்றனர்.


பின்னர் அவர்களை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. 5 பெண்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 15 பேர் தொடர்ந்து உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நன்றி
- புதினம்.காம்
-வக்தா.டிவி


கவர்ச்சி கழுதை நடனம் +18

2 comments

dominic the donkey dance


மூன்று இளமங்கைகளின் உல்லாச நடனம்
பார்க்கும் போது ஏற்படும் மனம் சலனம்
கண்கள் ஒன்றி போகும் லயனம்
வாழ்கை என்பதே மகிழ்சியின் பயணம்.



photo just for fun..


ஈழதமிழர் மீது சீனாவின் நயவஞ்சக செயல்!!!

25 comments



- net photo
இலங்கையில் இடம்பெற்று வரும் யுத்த நிலைவரம் குறித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் விவாதிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட ஐந்து நாடுகளில் இந்த மூன்று நாடுகளும் அடங்கியுள்ளன.
சிறிலங்கா அரசாங்கம் யுத்த சூனிய பிரதேசத்தில் இராணுவ நடவடிக்கையை விஸ்தரிக்கப் போவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை, திங்கட்கிழமை நடத்திய அந்தரங்க கூட்டத்தில் செயலாளர் நாயகம் பான்கீ மூனின் தூதுவர் விஜய் நம்பியாரிடமிருந்து அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்வது பற்றி ஆராய்ந்தது.

இலங்கை பற்றிய அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிரித்தானியாவின் கோரிக்கையை ஆதரிப்பதாக அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி அலெஜான்றோ வூல்வ் தெரிவித்திருக்கிறார்.இலங்கை பற்றிய அறிக்கையை பிரான்சே அந்தரங்க கூட்டத்தில் முதலில் கோரியுள்ளது.

இதன்போது மோதல் தவிர்ப்பு வலயத்தில் சிறிலங்கா அரசாங்கத்தினால் நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து ஆராயப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இலங்கை சூழ்நிலையை ஒரு விசேட சூழ்நிலையாகக் கருதி பாதுகாப்புப் பேரவையில் விவாதிக்கப்பட உள்ளதாக பாதுகாப்புப் பேரவையின் தலைவர் குளோட் ஹெலர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவிற்கான பிரித்தானியாவின் விசேட தூதுவர் டேஸ் பிறவுண் நியூயோர்க் சென்றிருக்கிறாரா? என்று பிரித்தானியாவின் நிரந்தர பிரதிநிதி ஜோன் சவேர்ஸிடம் கேட்டபோது அவர் ஆம் என்று பதிலளித்தார். திங்கட்கிழமை மதியமளவில் பிறவுண் பாதுகாப்பு சபைக்கு செல்லவில்லை. ஆனால், நம்பியாரிடமிருந்து அறிக்கையை பெறுவது என்பதே சபை உறுப்பினர்களின் பொதுவான நோக்கமாக இருந்தது என்று பாதுகாப்பு சபைத் தலைவரான மெக்ஸிகோவை சேர்ந்த குளோட் ஹெலர் தெரிவித்தார்.

இலங்கை விவகாரம் மிக விசேடமானது என்பது எங்களுக்கு தெரியும் என்று குறிப்டபிட்ட அவர், அது பற்றி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற ஆர்வம் உண்டு என்றும் கூறினார். இலங்கை விவகாரத்தை விசேடமானது என்று கோடி காட்டியமை வட இலங்கையின் கரையோரத்தில் இரத்தக் களரிக்கு பாதுகாப்புச் சபை கொடுக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

மேற்கு சூடான் பிராந்தியமான தர்பூரில் இடம்பெறும் சிறுசிறு சண்டைகள் பற்றி பாதுகாப்பு சபையில் பல கூட்டங்களை நடத்தி ஆராயும் போது இலங்கையில் சிவிலியின்கள் நிறைந்து காணப்படும் பகுதிகளில் பாரிய அளவிலான இராணுவ நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் பாதுகாப்பு சபையின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலிருந்து விலக்கப்பட்டுள்ளன.

திங்கட்கிழமை விடுதலைப் புலிகளை விமர்சித்து பான் கீ மூன் விடுத்த அறிக்கையில் யுத்த சூனிய பிரதேசத்தில் யார் பயங்கர எறிகணை, ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துவதென தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கட்கிழமை நடைபெற்ற அந்தரங்க ஆலோசனைகளின் போது உரையாற்றிய சீனப் பிரதிநிதி, விடுதலைப் புலிகள், சபைக் கூட்டத்தில் தங்கள் விவகாரம் எடுத்துக் கொள்ளப்படுவதை பயன்படுத்தி தங்களை சட்டபூர்வ அமைப்பு என்று கூற முயல்வார்கள் என்றும் சபை அது பற்றி எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தார்.

இது சிறிலங்கா அரசாங்கத்தின் நேரடிவாதமாகும். உதாரணமாக, சூடான் நீதியையும் சமத்துவ இயக்கத்தையும் பலப்படுத்துவது தொடர்பாக வெற்றி பெறாமல் முன்னேறியுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதேவேளை, தூதுவர் ஹெலர் குறிப்பிட்டது போன்று இலங்கை விவகாரம் மிக விசேடமானது என்று கூறினார்.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் படை நடவடிக்கையை சீனா முழுமையாக ஆதரிக்கின்றது என சீனாவின் வெளியுறவுத்துறை பேச்சாளர் ஜியாங் யூ தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு சிறிலங்கா அரசாங்கம் 24 மணிநேர அவகாசம் கொடுத்துள்ளது பற்றி கேட்கப்பட்டபோது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: நேபாளமும், சிறிலங்காவும் சீனாவின் நண்பர்கள், அந்த அரசுகளின் பாதுகாப்பிற்கு நாம் ஆதரவுகளை வழங்குவதுடன், அவற்றின் தேசிய ஒருமைப்பாட்டையும் நாம் பாதுகாப்போம்.

இந்த இரு நாடுகளினதும் அரசியல் உறுதித்தன்மையை பேணுவது சீனாவின் கடமை. சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகள் மீது மேற்கொண்டுவரும் படை நடவடிக்கையை சீனா முழுமையாக ஆதரிக்கின்றது. விடுதலைப் புலிகளை அழித்து, அவர்களது தலைவர் வே.பிரபாகரனை அகற்றுவதற்கு சிறிலங்கா அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கும் சீனா ஆதரவுகளை வழங்கும் என்றார் அவர்.

இதுஇவ்வாறிருக்க, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மூடிய கதவு கூட்டத்தின் போது பாதுகாப்புப் பேரவை விவாதங்களின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சட்ட அந்தஸ்து வழங்கப்படக் கூடாதென சீனா கோரிக்கை விடுத்திருந்ததாக இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, நம்பியார் திரும்பும் வரை பாதுகாப்பு சபையில் அறிக்கையை வெளியிட முடியாததால் நம்பியார் எங்கே இருக்கிறார் என்று இன்னர் சிற்றி பிறெஸ் வினவியது. நம்பியார் நியூயோர்க் திரும்பும் வழியில் இந்தியாவில் தரித்து நிற்பதாக இன்னர் சிற்றி பிறெஸ்ஸுக்கு தெரிவிக்கப்பட்டது.

நம்பியார் செவ்வாய் காலையில் நியூயோர்க் திரும்பிவிடுவார் என்று பான் கீ மூனின் அலுவலகம் தெரிவித்த போதிலும் புதன்கிழமைக்கு முன் அவர் திரும்ப மாட்டார் என்று பாதுகாப்பு சபை வட்டாரங்கள் தெரிவித்தன. அதன் பின்னர், இலங்கை அரசாங்கத்தின் காலக்கெடு முடிவடைந்து 24 மணித்தியாலத்தின் பின்னரே இலங்கை பற்றிய அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

நன்றி
தமிழ்வின்


கலைஞர்- ஈழத்தமிழருக்காக 23ல் பொதுவேலைநிறுத்தம்!

6 comments



இலங்கையில் நிரந்த போர் நிறுத்தம் கோரி வரும் 23ம் தேதி தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.


மேலும் இப்பொது வேலை நிறுத்தத்தில் அனைத்து கட்சியினரும் அமைதியான முறையில் கலந்துகொள்ள வேண்டும்.


மத்திய அரசு உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் இன்று எழுதியுள்ள உடன்பிறப்புகளுக்கான கடிதத்தைத் தொடர்ந்து இலங்கை அரசுக்கு நமது கண்டனத்தைத் தெரிவிக்கவும்.

ஈழத்தில் மாண்டு மடிந்து கொண்டிருக்கின்ற தமிழர்களைக் காப்பாற்றவும் மத்திய அரசு ஒரு நொடியும் தாமதிக்காமல் இலங்கையில் போர் நிறுத்தத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக,

தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழ் பெருங்குடி மக்கள் அனைவரும் அவர்களாகவே முன்வந்து 23.4.2009 வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அமைதியான முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இது இலங்கை அரசுக்கான கண்டனம் மாத்திரமல்ல, இலங்கையில் செத்துக் கொண்டிருக்கிற தமிழ் இனத்துக்காக விடுகின்ற கண்ணீரும்கூட என்கிற உணர்வோடு இந்த வேலைநிறுத்தத்தில் அனைவரும் கலந்து கொள்ள மீண்டும் வேண்டுகிறேன் என்று குறீப்பிட்டுள்ளார்.

நன்றி
- நக்கீரன்


வேண்டுகோள் - அவர்கள் ஆன்மா சாந்தி அடைய....

0 comments

Black Flag 2 Pictures, Images and Photos


இலங்கையில் வன்னியின் பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்த வெளியேறிய ஆயிரக்கணக்கான தமிழர்களைப் பணயக்கைதிகளாக முன்னிறுத்தி சிங்கள இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 2000 க்கும் மேற்பட்டத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 3000 க்கும் மேற்பட்டத் தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

மக்கள் இருக்கும் பகுதிகளில் தொடர்ந்து கொத்துக் குண்டுகளை சிங்கள இராணுவம் வீசி வருகிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஒரே நாளில் இவ்வளவு பெருந்தொகையான மக்கள் எந்த நாட்டிலும் படுகொலை செய்யப்பட்டதில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

ஐ. நா. பேரவை உட்பட உலக நாடுகள் பலவும் போர் நிறுத்தம் செய்புமாறு விடுத்த வேண்டுகோளை கொஞ்சமும் மதிக்காமல் சிங்கள் அரசு தமிழர்களை அடியோடு அழிக்க முயலுகிறது. 2000 க்கும் மேற்பட்ட தமிழர்களைப் படுகொலை செய்ததை மறைக்கவும் திசை திருப்பவும் பிரபாகரன் இருப்பிடத்தை சுற்றி வளைத்து விட்டதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்கிறது.

25 ஆண்டுகாலத்திற்கு மேலாக மக்கள் துணையுடன் போராடி வரும் விடுதலைப்புலிகள் தங்கள் போராட்டத்தை வெற்றிகரமாக தொடர்வார்கள் என்பதில் ஐயம் இல்லை.

இந்த மனிதப் பேரழிவைத் தடுத்து நிறுத்த இந்திய அரசு முன் வராததைக் கண்டிக்கும் வகையிலும் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்துகிற வகையிலும் வருகிற ஏப்ரல் 24 ந் தேதி வெள்ளிக்கிழமையன்று மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை தமிழகமெங்கும் கறுப்புக்கொடி ஊர்வலங்களை நடத்துமாறும் சரியாக 6 மணிக்கு அனைவரும் ஒன்று கூடி அமைதி அஞ்சலி செலுத்துமாறு பழ.நெடுமாறன் வேண்டுகோள்.


அமைதி அஞ்சலி செலுத்தும் வேளையில் சகலப் போக்குவரத்தையும் நிறுத்தி அவரவர்கள் இருந்த இடத்திலிருந்தும் வீடுகளில் இருப்போர் வீட்டுக்குள்ளேயும் ஐந்து நிமிட நேரம் அஞ்சலி செலுத்துமாறு வேண்டிக்கொள்கிறேன்.


நன்றி
பதிவு.காம்