Headline

Showing posts with label ஈழத்தமிழர். Show all posts
Showing posts with label ஈழத்தமிழர். Show all posts

வைகோவின் மாவீரர் உரை - வீடியோ

0 comments



தமிழ் இனத்தின் விடுதலைக்காக உயிர் நீத்த எம்முயிர் சகோதர சகோதரிகளுக்கான
அஞ்சலி இழை இது....!

தமிழீழ விடிவின் கனவுகளோடு கல்லறைக் கோவில்களில் துயிலும் எமது ஆண்டவர்களுக்கு
நீங்களும் அகல் ஏற்ற விரும்பினால் இந்த சுட்டியை சொடுக்குங்கள்!! வீரவணக்கம்!

november27.net

உங்கள் அஞ்சலிகளையும் வீரவணக்கங்களையும் இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

மாவீரர் தினத்திற்கான உங்களுடைய ஆக்கங்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

அன்புடன்
சுவாதி.

நன்றி
- தோழி சுவாதி


சென்ற ஆண்டு வைகோ அவர்கள் லண்டனில் ஆற்றிய எழுச்சிமிக்க மாவீரர் உரை










முகாமில் உள்ள மக்கள் கிளர்தெழ தொடங்கி உள்ளனர்

1 comments

eyes crying Pictures, Images and Photos


இலங்கை அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை குறித்து ஆஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் தி ஆஸ்திரேலியர் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. 
 
தொண்டு நிறுவன பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் திரட்டிய தகவலின் அடிப்படையில் இந்த செய்தியை வெளியிட்டு உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:  
 
புல்மொட்டையில் உள்ள அகதிகள் முகாமில் பெண்களை அதிகாரிகளே கட்டாய விபசாரத்தில் தள்ளுகின்றனர். இதுபற்றி மேல் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
 
அகதி முகாம்களில் உள்ள ஒவ்வொரு கூடாரத்திலும் 3 குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். குறுகிய இடத்தில் 3 குடும்பங்கள் தங்கி இருப்பதால் ஒருவருக்கு ஒருவர் இடையூறாக உள்ளது. 
 
அங்கு வரும் ராணுவத்தினர் அகதிகளுக்கு தேவையான இடத்தை ஒதுக்கவும், மற்ற தேவைகளை வழங்கவும் லஞ்சம் வாங்குகின்றனர். 
 
முகாம்களில் உள்ள குடும்பத்தினர் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டு உள்ளனர். விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படும் ஆண்களும், பெண்களும் வேறு இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அவர்களை பற்றிய எந்த விவரங்களையும் குடும்பத்தினருக்கு தெரிவிக்கவில்லை. அவர்களை அழைத்து சென்றவதற்கான ஆதாரம், அடையாள சீட்டு போன்றவையும் வழங்கப்படவில்லை. 
 
முகாமில் இருப்பவர்களை சுதந்திரமாக நடமாட அனுமதிக்கவில்லை. முகாமில் பெரும் நெருக்கடி நிலவுகிறது. இதனால் மக்கள் கிளர்தெழ தொடங்கி உள்ளனர். 
 
குடும்ப உறுப்பினர்கள் தனித்தனியாக வெவ்வேறு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதால் ரத்த உறவுகளை சந்திக்க மற்ற முகாம்களுக்கு செல்ல முயச்சிக்கின்றனர். இதற்கு ராணுவம் மறுப்பதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. 
 
இப்படி கிளர்ச்சியில் ஈடுபட்ட 2 அகதிகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். முகாம்களில் இருப்பவர்களில் 80 சதவீதம் பேர் இந்த வருட இறுதிக்குள் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என அறிவித்து உள்ளன. ஆனால் அதற்கான சாத்தியம் இல்லை என்று தி ஆஸ்திரேலியர் என்ற பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.



உணவுப்பற்றாக்குறை நோய்களால் சிறுவர்கள் அவதி

0 comments



போதிய உணவின்மையால் சிறுவர்கள் ஊட்டச்சத்துகுறைபாடு நோய்களுக்கு உள்ளாவது, முன்பு கணிப்பிட்டிருந்ததைவிட, மிக அதிகமாகவுள்ளது என மனிதாபிமான அமைப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.



தடுப்பு முகாம்களில் உள்ள தமிழர்களில் 13 விகிதமானோர் 5 வயதுக்கு உட்பட்டோர் என்றும், இதில் 10,000 குழந்தைகளும் சிறுவர்களும் தீவிர போஷாக்கு குறைபாட்டால் அவதிப்படுகிறார்கள் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது.




மார்ச் மாதத்தில் கொழும்பில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தால் நடாத்தப்பட்ட கருத்தாய்வின்படி, 6 முகாம்களில், 25.5 விகிதமான சிறுவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்பட்டார்கள், இதில் 5.2 விகிதமானோர் தீவரமான நிலைமையில் இருந்தார்கள், மற்றும் அவர்களுக்கு உடனடியான மருத்துவம் தேவைப்பட்டிருந்தது.

இருப்பினும், இப்போது தடுப்பு முகாம்களின் எண்ணிக்கைகள் கூடியநிலையில், இன்னும் அதிகமான சிறுவர்கள் இந்நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.
“இது தொடர்பாக நாம் மிக அக்கறையாக உள்ளோம், ஆனால் முகாம்களுக்குள் செல்வதற்கு எமக்கு போதிய அனுமதி இல்லாமையால், இப்பிரச்சினையின் அளவைத் அறிய முடியாமல் உள்ளோம்”, என ஒரு சர்வதேச உதவிப் பணியாளர் தெரிவித்துள்ளார்.



நீண்ட நாட்களுக்கு உணவு மற்றும் நீர் இல்லாமல் யுத்தப் பிரதேசத்தில் இருந்து இறுதியாக வந்த மக்களே கூடுதலாக உணவுப்பற்றாக்குறை நோய்களால் அல்லல்படுகிறார்கள் என சிறிலங்காவில் உள்ள மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. அலுவலகம் (O.C.H.A) அறிவித்துள்ளது.

உணவுக்காக 10 மணித்தியாலங்கள் வரை வரிசையில் காத்திருக்க இயலாமையால் வயோதிபர்கள், காயமடைந்தோர்கள், நோயாளிகள் மற்றும் சிறுவர்களே உணவின்மையால் கூடுதலாக அவதிப்படுகிறார்கள், என ஒக்ஸ்வாமினது துணை இணைப்பாளர், டேவிட் வைற், கொழும்பில் தெரிவித்துள்ளார்.



உதவிப் பணி அமைப்புகள் முகாம்களுக்குச் செல்ல உள்ள பல தடைகள் காரணமாகவே, சிறுவர்கள் எதிர்நோக்கும் தீவிர உணவுப்பற்றாக்குறைக்கு எம்மால் உதவி செய்ய முடியாமல் உள்ளது என, யுனிசெவ் நிறுவனத்தின் சிறிலங்கா பேச்சாளர், ஜேம்ஸ் எல்டர், தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல் முக்கியமாக சிறுவர்களைப் பாதித்துள்ள, சுகாதாரம், சத்துணவு, பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பான எதுவித தேவைகளையும் தம்மால் செய்ய முடியாமல் உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


நன்றி
-பதிவு


உலகத் தமிழினத்தின் இன எழுச்சி வரும் யூலை 5-ல்

1 comments


தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆயுதமுனையில் தோற்கடித்திருப்பதாக சிறீலங்கா அரசு மார்தட்டிக் கொள்ளும் இவ்வேளையில், வரும் யூலை மாதம் 5ஆம் நாளன்று ஒரே நேரத்தில் உலகத் தலைநகரங்களில் அணிதிரள்வதற்கு உலகத் தமிழர்கள் தயாராகின்றனர்.

வகை தொகையின்றி வன்னி மக்களை கொன்றுகுவித்தும், வதைமுகாம்களில் சிறைவைத்தும், தமிழ் குருதியில் வெற்றி விழா கொண்டாடும் சிங்கள தேசத்துடன் இனியும் ஈழத்தமிழர்கள் சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லை என்ற அரசியல் யதார்த்தத்தை உலக சமூகத்திற்கு உணர்த்தி, தமிழீழ தனியரசுக்கான இலட்சிய வேட்கையை உலக அரங்கில் ஓங்கியொலிக்கும் ஓர்மத்துடனும், வதை முகாம்களில் சிறைப்பட்டுள்ள வன்னி மக்களை பொறுப்பேற்குமாறு உலக சமூகத்தை வலியுறுத்தியும், ஒரே நாளில், ஒரே நேரத்தில், தமிழீழம் என்றை ஒற்றை முழக்கத்துடன் அணிதிரள்வதற்கு உலகத் தமிழினம் தன்னை தயார்படுத்திக் கொள்கின்றது.


செப்டம்பர் 11இற்குப் பின்னரான உலக ஒழுங்கில் தனியரசு நிலையை ஈட்டிய கிழக்குத் தீமோர், மொன்ரநிக்ரோ, கொசவோ ஆகிய தேசங்களில் வழியில், தனியரசை நிறுவுவதற்கான சகல அரசியல் தகுதிகளையும், சனநாயக உரிமைகளையும் தமிழீழ தேசம் கொண்டுள்ள நிலையில், சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழீழ தாயக மக்களின் குரலாக உலக அரங்கில் வீறுகொண்டெழுவதற்கு உலகத்தமிழர்கள் தயாராகின்றனர்.

அரசியல் சுதந்திரத்திற்கான தமிழீழ தேசத்தின் விடுதலைப் போராட்டத்தைக் கையிலெடுத்துள்ள புலம்பெயர்வாழ் ஈழத்தமிழ் இளைய தலைமுறையினருக்கு உறுதுணையாக, ஒவ்வொரு நாடுகளிலும் இயங்கும் தமிழ் பொது அமைப்புக்களும் ஒன்றிணைந்து, உயிர்த்தெழுவோம் எழுச்சி நிகழ்வை முன்னெடுப்பதற்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டுள்ளன.

நன்றி
-சங்கதி


ஈழத்தில் தினமும் 10 பேராவது பசியால் இறக்கிறார்கள்

0 comments


பிரபாகரன் மர்மத்துடன் முடிந்துவிடுமா ஈழத்தவர் துயரம்? வெள்ளை பாஸ்பரஸ் கொன்ற உயிர்களின் வலி சில வெள்ளை நாடுகளுக்குப் புரியாமல் போகலாம். ரசாயனக் குண்டுகள் தின்ற மக்களின் குரலை ரஷ்யா உள்ளிட்ட கம்யூனிஸ்ட் நாடுகள் கண்டுகொள்ளாமல் போகலாம்.

அடிமை விலங்கை உடைக்கப் பாடுபட்ட ரணத்தை உணராத தலைமுறை இந்தியாவை ஆளலாம். ஆனால், புரட்சியின் அடையாளமாக உலகம் இன்று வரை நினைத்துப் பார்க்கும் கியூபா, அதுவும் ஃபிடெல் காஸ்ட்ரோவின் நாட்டுக்குமா புரியவில்லை ஈழத்தவன் ஓலம்?


தமிழ்ப் பிழைப்புக் கூட்டமும் சர்வதேசச் சமுதாயமும் கைகழுவிவிட்ட தமிழீழச் சமூகம் கம்பி வேலிக்குப் பின்னால் வேதனையில் தவிக்கிறது. உங்களில் யார் எங்களுக்கு உணவு தருவீர்கள்? தண்ணீர் தருவீர்கள்? ஆசை வார்த்தை பேசுவீர்கள்? இப்படிப் பார்வையால் கேட்பது மூன்று லட்சம் மக்கள்! 'அன்புள்ள, அப்பா, தங்கை அறிவது. இங்கு யாவரும் நலமே. உங்கள் சுகம் எப்படி? அம்மாவை வவுனியா வைத்தியசாலைக்குப் போய்ப் பார்த்தீர்களா? இங்கு ஏன் வந்தோம் என்றிருக்கு? சாப்பாடு லைனில் நின்று வாங்க வேண்டும்.


சிலவேளை முடிந்துவிடும். முடிந்தால் கிடைக்காது. திருப்பித் தர மாட்டார்கள். பிள்ளைக்கு மா பெட்டி இல்லை. குழந்தைக்குரிய சாப்பாடு ஏதும் இல்லை. விளக்கு எடுக்க எந்த எண்ணெயும் இல்லை. ஏன்டா வந்தோம் என்றிருக்கு. அங்கு செல்லடி என்றாலும் சமைச்சுச் சாப்பிட்டம். இங்கு சாப்பாடு இல்லாமல் சாகப் போறோம்...'' என்று துயரம் கலந்த வார்த்தைகளால் தொடர்கிறது அந்த இளைஞனின் கடிதம். இது ஒருவனின் கடிதம் அல்ல. ஓர் இனத்தின் கடிதம்.

துயந்தினி, குகந்தினி, துஷ்யந்தினி மூவரும் சகோதரிகள். ''எங்கள் அப்பா பெயர் யோகேஸ்வரன். அம்மா பெயர் சாந்தி. அவர்களைக் காணவில்லை. நாங்கள் தங்கியிருந்த பங்கரில் குண்டு விழுந்ததும், எல்லாரையும் மாதிரி நாங்களும் ஓடினோம். என் அம்மா, அப்பாவுக்குக் காயம். அவங்களை யாரோ தூக்கிக்கொண்டு போனார்கள். அப்புறம் வரவே இல்லை. அவர்கள் எங்காவது மருத்துவமனையில் இருக்கிறார்களா என்று தேடிப் பார்க்கவும் விட மறுக்கிறார்கள். நீங்களாவது கண்டுபிடித்துக் கொடுங்கள்'' என்று கதறுகிறார்கள் மூன்று பேரும்.

ரட்சணம் ராசையா கதை இன்னும் சோகமானது. ''தலைக்கு மேலே குண்டு விழுந்து ஓடி வந்தோம். என் கையில் இருந்த இரண்டு வயது குழந்தைக்குக் காயம் ஆனது. ராணுவ வீரர் ஒருவர் அதை வாங்கிக்கொண்டு என்னைத் துரத்திவிட்டார். என் குழந்தை என்னவானதோ? மருத்துவமனையில் போய்ப் பார்க்க அனுமதி கேட்கிறேன். தரவில்லை'' என்கிறார் ராசையா. சொந்தங்களைப் பார்க்க யாராவது தைரியமாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பகுதியில் இருந்து வந்தால், அவர்களை மட்டும் வேலிக்கு வெளியே நின்று பார்க்க அனுமதிக்கிறது ராணுவம். மற்றபடி, தொண்டு நிறுவனங்களைக்கூடத் துண்டித்துவிட்டார்கள். இது உலகக் கொடுமை.

உச்சந்தலையில் குண்டு விழும்போதும், நெஞ்சுக்கு நேராக அலுமினிய ரவை பாயும்போதும் செஞ்சிலுவைச் சங்கத்துத் தொண்டர்கள் மட்டும் மறுக்கப்படாமல் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். எல்லாப் போர்களிலும் இந்த நியாயம் மட்டும் நிச்சயம் கடைப்பிடிக்கப்படும். பாசிஸ்ட், நாசிஸ்ட்டுகள்கூட இதற்குத் தடை போட்டதில்லை. ஆனால், சிங்களிஸ்ட் அதனினும் கொடூரமானது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மொத்தத்தையும் நாட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டது.

கிளிநொச்சி, கொடிக்காமம், தென் மராட்சி ஆகிய மூன்று இடங்களில் மட்டும் சுமார் 25 முகாம்கள் இருக்கின்றன. இதில் அதிகாரபூர்வமாக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள கணக்கெடுப்பின்படி 2 லட்சத்து 56 ஆயிரத்து 842 பேர் இருக்கிறார்கள். இதில் பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள் கணக்கை வெளியிட மறுத்துள்ளார்கள். ''ஐந்து பேர் தங்குவது மாதிரி உள்ள டென்ட் கூடாரத்தில் 30 பேர் தங்கவைக்கப்பட்டு உள்ளார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு முகாம்களில் இருக்கிறார்கள். இவர்களுக்குத் தினமும் மாலை நான்கு மணிக்கு ஒருவேளை மட்டும்தான் சாப்பாடு வழங்கப்படுகிறது. தண்ணீர் அங்குள்ள தொட்டியில் நிரப்பிவைக்கப்படும். காலியாகி விட்டால், மீண்டும் மறுநாள்தான் தண்ணீர் கிடைக்கும்.

முதியோர், சிறுவர் வாழ்க்கை இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது. தினமும் 10 பேராவது பசியால் இறக்கிறார்கள் என்று நேரில் பார்த்துச் செய்திகள் வெளியிட்ட 'சேனல் 4' என்கிற பிரிட்டன் டி.வி. நிருபர்கள் நான்கு பேர் மறுநாளே வெளிநாட்டுக்கு அனுப்பப் பட்டுவிட்டார்கள் கட்டாயமாக.


இந்த முகாமில் உள்ளவர்களில் பத்தில் ஒரு பங்கினர் ஊனமானவர்கள். கால், கை இழந்து உட்கார்ந்திருக்கிறார்கள். பிரன்ஸ் என்ற சர்வ தேசக் கருணை இல்லம், மட்டக்களப்பில் இருக்கிறது. இவர்கள், இங்குள்ள மக்களுக்குச் செயற்கைக் கால்கள், கைகள் செய்து வழங்குவதற்காக சிறு தொழிற்சாலையை ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இம்முகாம்களுக்குள் வந்து செயல்பட முறையான ஒத்துழைப்பு தரப்படவில்லை. ''செயற்கைக் கால், கை பொருத்துவது மிகுந்த சிரமமான விஷயம். அளவெடுப்பது, அதைப் பொருத் திப் பார்ப்பது, சரியாக இருக்கிறதா என்று கண்காணிப்பது, வேறு பிரச்னை வராமல் கவனிப்பது என்று பல அடுக்குகளைக்கொண்ட மருத்துவம் இது. நான் போய்ப் பார்த்தபோது பலரும் உடல் ஊனமானவர்களாகத் தெரிந்தார்கள். செயற்கைக் கால்கள், சக்கர நாற்காலிகள் இல்லாமல் பலரால் வாழ முடியாது. ஓர் ஆண் வந்தார். அவருக்கு ஒரு கால் இல்லை. தன் மனைவியைக் கொண்டுவந்தார். அவருக்கு இரண்டு கால்களும் இல்லை. அவர்களது எட்டு மாதக் குழந்தைக்குத் தலையில் குண்டுக் காயம் இருந்தது. இதுதான் அங்கு வாழும் மக்களின் நிலை. யுத்த நாடுகளை கடந்த 20 ஆண்டுகளாக நான் பார்த்து வருகிறேன். அதில் இந்த மே மாதம்தான் மிக மோசமானது'' என்கிறார் இந்த நிறு வனத்தின் இணைப்பாளர் சரீஷ் மிஸ்ரா.

வவுனியாவில் இருந்து 35 கி.மீ. தூரத்தில் உள்ள செட்டிக்குளம் பகுதியில் 1,600 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்ட இடத்தில் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு ராமநாதன் நகர், கதிர்காமர் நகர், அருணாசலம் நகர் என்று பெயர். ஜோன் 1, 2, 3 என்று சொல்கிறார்கள். இப்படி முகாமில் அடைக்கப்பட்டவர் களில் புலி இளைஞர்கள் என்று சந்தேகப்படுபவர்களை மட்டும் பிரித்து, நெல்லுகுளத்தில் அடைத்துவைத்து இருக்கிறார்களாம். பெண் புலிகள் கண்டி அம்பே புத்ச என்ற இடத்தில் தனியே அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். சிறுவர்கள், கிழக்கு மாகாணத்துக்குக் கடத்தப்பட்டுள்ளதாக 'சிறார் போராளி கள் ஒழிப்பு முன்னணி' என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இளைஞர்கள், இளம் பெண்கள், சிறுவர்கள் என இதுவரை 13 ஆயிரம் பேரைக் காணவில்லை என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

வவுனியா ஏற்கெனவே வெப்பப் பிரதேசம். காடுகளை அழித்த இடத்தில் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டு இருப்பதால், வெப்பம் இன்னும் அதிகமாக இருக்கிறது. பலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதாம். மேலும் பலருக்கு சின்னமுத்து எனப்படும் அம்மைக் கொப்புளங்கள் வந்திருக்கின்றன. இவர்களைத் தனியாகப் பிரித்து பூவரசங்குளம் என்ற இடத்தில் வைத்திருக் கிறார்கள். இவர்கள் அங்கும் சாதாரண கொட்டடிகளில்தான் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

மொத்தத் தமிழனும் டென்ட்டுகளில் கிடக்க, அவன் வாழ்ந்த பூநகரி, கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, வவுனியா, மாங்குளம் பகுதி வீடுகளில் மனித நடமாட்டங்கள் இல்லை. ராணுவம் மட்டுமே எப்போதாவது ரோந்து போகிறது. வீடுகள், கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டு, விவசாய நிலங்கள் சிதைக்கப்பட்டு, கோயில்கள் இடிக்கப்பட்டு, மொத்த நிலப்பரப்பும் நாசமாக்கப்பட்டுவிட்டது. ''இவர்களை எப்போது அவர்களது வீட்டுக்குக் கொண்டுபோய்க் குடியேற்றப்போகிறீர்கள்?'' என்று சீரியஸாகக் கேட்கிறார் ஐ.நா-வின் பான் கீ மூன். ''180 நாட்களுக்குள் இவர்கள் அவரவர் வீட்டுக்குப் போய்விடுவார்கள்'' எனச் சிரிக்காமல் சொல்கிறார் ராஜபக்ஷே.

பதற்றம் இல்லாமல் கொலைகள் செய்யவும், கூச்சம் இல்லாமல் பொய்கள் சொல்லவும் ராஜபக்ஷேவுக்குச் சொல்லித்தர வேண்டுமா!

நன்றி:விகடன்

நன்றி
-tamilskynews


காங்கிரஸ் செய்த தவறுகள் - தமிழருவி மணியன்

3 comments



ஈழத் தமிழர் தமிழர் விவகாரத்தில் டென்மார்கிற்கு இருக்கின்ற அக்கறையில் சிறிது கூட இந்தியாவுக்கு இல்லை" என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் முன்னாள் பொதுச் செயலாளர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' பிரபல வார இதழிடம் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:


"ஈழத் தமிழர்களுக்கு எதிரான வேலையை 1948 ஆம் ஆண்டிலேயே காங்கிரஸ் ஆரம்பித்துவிட்டது. அப்போது அங்கு தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்ட்டபோது, 'இலங்கை உள்நாட்டு பிரச்னையில் இந்தியா தலையிடாது' என்று நேரு ஒதுங்கிக் கொண்டார்.

சிறிமாவோவின் ஆட்சியில் தமிழர்கள் இன்னல்பட்டபோது அப்போதைய இலங்கை பிரதமர் சிறிமாவோவுடன் ஒப்பந்தம் செய்த லால்பகதூர் சாஸ்திரி இலங்கைத் தமிழ் மக்கள் அகதிகளாக வழி செய்தார்.

ஈழத் தமிழர்களுக்காக இந்திரா காந்தி அக்கறை காட்டியதும், ராஜீவ் காந்தி நடவடிக்கை எடுக்க முனைந்ததும் மறுக்கமுடியாத உண்மைகள். இந்திரா காந்தி ஈழத் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக புலிகளை ஆதரித்தது உண்மை. ராஜீவ் காந்தி புலிகளை வற்புறுத்தி ஒரு ஒப்பந்தத்தை ஜெயவர்த்தனவுடன் உருவாக்கினார். அந்த ஒப்பந்தம் இலங்கை அரசிற்கும் ஈழத் தமிழருக்கும் இடையில்தான் நடந்து இருக்கவேண்டும். அதிலேயும் தவறு.

போனவையெல்லாம் போகட்டும். கடந்த ஜனவரி மாதம் தொடங்கி, ஐந்து மாதங்கள் தமிழ் இனத்தையே முற்றாக ஒழிப்பது என ராஜபக்ச அரசு தன் இராணுவத்தைக் கொண்டு ஒரு ஈவு இரக்கமற்ற போரை நடத்தியபோது மன்மோகன் சிங்கின் இந்திய அரசு அதற்குத் துணை நின்றது. இது எந்த வகையில் நியாயம்?

விடுதலைப் புலிகளுக்காகவோ, பிரபாகரனுக்காகவோ இந்திய அரசு போராடியிருக்க வேண்டியதில்லை. ஆனால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டு அனைத்துலக போர் விதிகளும் மீறப்பட்டு, அரக்கத்தனமாக ஈழத் தமிழர்களை முற்றாக அழிக்க ராஜபக்ச முனைந்தபோது சோனியா காந்தியோ மன்மோகன் சிங்கோ ஒரு வார்த்தைகூட எதிர்த்துப் பேசவில்லை. ராஜபக்சவுடன் தொடர்பு கொண்டு போரை நிறுத்த வழி செய்யவில்லை.

ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள உகாண்டாவில் வணிகம் செய்யச் சென்ற குஜராத்திகளுக்கு எதிராக வன்முறை நடந்த அடுத்த கணமே இந்திய அரசு துடித்தது. பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரிசில் வாழும் சீக்கியர்கள் தலைப்பாகைகள் அணியக் கூடாது என்று ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டபோது, பிரான்ஸ் அதிபரை நேரில் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங் அந்த ஆணையை உடனடியாக இரத்து செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.

இன்று வியன்னாவில் சீக்கியர் கூட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் விளைவாக செய்தி வந்து சேர்ந்த அந்தக் கணமே பஞ்சாப் எரியத் தொடங்கியது. ஜலந்தர், சண்டிகர், லூதியானா போன்ற நகரங்கள் போராட்டக் களமாக மாறின. உடனே பிரதமர் மன்மோகன் சிங் அமைதி காக்க வேண்டுமென்று சீக்கியர்களுக்கு வேண்டுகோள் கொடுக்கிறார்.

புதிதாக வெளிவிவகாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிற எஸ்.எம்.கிருஷ்ணா அவசர அவசரமாக ஒஸ்திரியாவிலிருக்கும் இந்தியத் தூதரகத்தோடு தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க ஆலோசனை நடத்துகிறார்.

வியன்னாவில் ஒரு உயிர் பறிக்கப்பட்டது. 30 பேர் படுகாயம் அடைந்தார்கள். அதற்கே மத்திய அரசு துடிதுடிக்கிறது.

ஆனால் தமிழகத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் இலங்கைத் தீவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். உறுப்பு இழந்தார்கள். உறவு இழந்தார்கள். ஈழப் பகுதியே மயானம் ஆகிவிட்டது. எங்கும் தமிழர்களின் பிணக்குவியல். திசையெல்லாம் தமிழர்களின் மரண ஓலம்.


ஐக்கிய நாடுகளுடைய செயலாளர் பான் கீ மூன் நேரில் சென்று இலங்கை நிலவரங்களைக் கண்டு நெஞ்சம் துடித்தார். இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் உணவு, தண்ணீர், மருந்து எதுவும் இன்றி மரணத்தோடு போராடுகிற நிலையையும், வன்னிப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதையும் கருத்தில் கொண்டு இலங்கை அரசு போர் குற்றச் செயல்களுக்காக தண்டிக்கப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை ஐ.நா. சபையில் மனித உரிமை அமைப்பின் சிறப்பு விவாதத்தில் கொண்டு வர வேண்டுமென்று பிரித்தானியாவும், டென்மார்க்கும் செயல்பட்டன. இந்த சிறப்பு விவாதத்தைத் தடுப்பதற்காக சீனாவும், பாகிஸ்தானும், ரஷ்யாவும், கியூபாவும் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவாக நிற்கிறது இந்தியா. என்ன அநியாயம்?

நமது தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்காமல், ராஜபக்ச அரசுக்குத் துதி பாடுகிறது காங்கிரஸ் அரசு. மனித உரிமை சபையில் சிறப்பு விவாதம் நடக்க வேண்டுமென்றால் 16 நாடுகளின் ஆதரவு தேவை. இந்த ஆதரவைத் திரட்டுவதற்கு சோனியா காந்திக்கும், மன்மோகன் சிங்கிற்கும் மனசாட்சி ஒன்று இருந்தால் காங்கிரஸ்காரர்களுக்கு தமிழ் இனத்தின் மீது பற்றும் பாசமும் இருந்திருந்தால் இந்த ஆதரவை இந்தியா முன்னின்று திரட்டியிருக்கவேண்டும்.

ஆனால், எங்கேயோ இருக்கும் டென்மார்க் தன் சொந்த முயற்சியால் பிற நாடுகளின் ஆதரவைத் திரட்டி சிறப்பு விவாதம் நடப்பதற்கு வழிவகுத்து இருக்கிறது. இதைத் தடுக்க இந்தியா எல்லா வகையிலும் பாகிஸ்தானோடு சேர்ந்து இலங்கைக்கு ஆதரவாக செயற்படுகிறது.

பெற்ற தாயாக நினைத்து காங்கிரஸை தமிழர்கள் நேசிக்கின்றனர். ஆனால் மாற்றான் தாயாக தமிழர்களை காங்கிரஸ் புறக்கணித்து வருகிறது. தமிழக மக்கள் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும்'' என்று ஆவேசமாய் தெரிவித்தார் தமிழருவி மணியன்.

நன்றி
-புதினம்


அவர்கள் போராட்டமும் வீறு கொண்டெழும் !!!

0 comments


மதிப்புக்குரிய நெடுமாறன் ஐயா அவர்களே!-ஒரு மடல்

இது ஒரு சபிக்கப்பட்ட ஈழத்து குரல். யாருமேயில்லாத அனாதைகளாக செத்துக் கொண்டு இருக்கிறோம். தாய் தமிழகம் எங்களை காப்பாற்றும் என்று நம்பி நம்பி லட்ச கணக்கில் அநியாயமாக செத்துக் கொண்டிருக்கிறோம்.

எங்கள் பெண்கள் எல்லாம் கேட்பாரற்று கெட்டு சீரழிகின்றார்கள். பாவப்பட்ட பெற்றவர்கள் தடுக்க வழியின்றி செய்வதறியாது கண்ணீரிலேயே கரைந்து கொண்டிருக்கிறார்கள். எங்கள் பிள்ளைகள் முடமாக்கப்பட்டுள்ளார்கள். பஞ்சப் பரதேசிகளாக, பிச்சைகாரர்களாக கையேந்தி கொண்டிருக்கிறோம். முட்கம்பிக்குள்ளே முடக்கப்பட்டு முடமாகி போனோம்.
எங்கள் குரல் நசுக்கப்பட்டு விட்டது. ஆனால் எங்கள் தொப்புள் கொடிகள் என் மவுனமாகி போனார்கள்? காவட் துறைக்கு பயந்து விட்டார்களா இல்லை அரசின் மாயாஜால கதைகளில் நம்பி உறங்கி விட்டார்களா? நாங்கள் தவித்துக் கொண்டு இருக்கும் போது எங்கே போனார்கள் எங்கள் உறவுகள்? வீறு கொண்டு எழுந்தீர்கள். அப்போது நம்பிக்கை கொண்டோம்.

ஆனால் இன்று ஒரு சத்தத்தையும் காணவில்லையே! ஏன்? உங்கள் கண் முன்னால் எங்கள் அழிவுகள் காட்டப்பட்டால் மட்டுமா துடிப்பீர்கள்? சத்தமில்லாமல் சாட்சிகள் இன்றி சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோமே அது உங்கள் நெஞ்சங்களை நெருக்கவில்லையா? நாளை எங்கள் கதி என்னவாக போகின்றது என்று உங்கள் மனதுக்கு புரியவில்லையா? ஏன் மவுனித்து போனீர்கள்?

ஐநாவில் இலங்கைக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தார்கள் வெள்ளை இனத்தவர்கள். ஆனால் அந்த சட்டத்தையும் செல்லக் காசாக்கி விட்டார்கள் நெஞ்சிரக்கமில்லாத படு பாவி நாடுகள். அதற்கு இந்தியா அன்றிலிருந்து இன்று வரை துணை போகிறது. ஓரிரு குரல்கள் இந்தியாவிற்கு எதிராக தாய் தமிழகத்தில் எழுந்தன. பல முத்துக்குமாரார்கள் தன்னையே தியாகம் செய்துமே மதியாத இந்தியா இந்த கண்டனக் குரல்களை எப்படி கணக்கெடுக்கும்?

தமிழனின் உரிமைக்குரலும், தியாகங்களும் பாரத மாதாவிற்கு ஏன் இப்படி செல்லாக் காசாகி போனது? ஏன் என்றால் நாம் உறுதியில்லாதவர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். நம் தாய் தமிழக உறவுகள் மீது எந்த நம்பிக்கையில் முத்துக்குமாரர்கள் உயிரை கொடுத்தார்களோ தெரியவில்லை. அவர்களின் விலை மதிக்க முடியாத உயிர்கள் போனதும், ஈழத்தில் நாம் செத்து மடிவதும் தான் வரலாற்றில் மிஞ்சப் போகிறதா?

அப்பாவி மக்கள் எங்களுக்கு ஒரு வழியும் தெரியவில்லை. உலகத்தை நம்பினோம். ஏமாற்றப்பட்டோம். தமிழக மக்களையும், கூடவே தமிழக தேர்தலை நம்பினோம். அதுவும் பொய்த்து விட்டது. ஐநாவை நம்பினோம். அங்கும் இந்தியாவின் கபட நாடகம் தான் அரங்கேரியிருகின்றது. இந்தியாவுக்கு சீனாவும் பாகிஸ்தானும் பகை நாடுகள். ஆனால் ஈழத்து தமிழனை அழிப்பதில் எல்லோரும் நேச நாடுகள். எங்கு போய் சொல்வது எங்கள் வேதனையை? கடவுள் கூட அதர்மத்துக்கு கூட்டாகி போய் விட்டார். தலைவர் இருக்கிறார் என்பதால் கொஞ்சம் மானத்தோடு வாழ்ந்தோம். அவரும் கொல்லப்பட்டு விட்டதாக அறிவித்தப் பின் நாயை விட கேவலமாகி போனோம். சிங்களவனில் பிச்சைக்காரன் கூட எங்களை ஏறி மிதிக்க போகிறான். ஆண்டியில் இருந்து அரசன்வரை எங்களை கேவலப்படுத்தப் போகிறான். வன்னியில் எங்கள் அழிவுகள் சாட்சியமில்லாமல் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலக நாடுகள் குட்டி தூக்கத்தில் இருந்து விழித்து தனது பொறுப்பை உணரும் போது, அங்கு எதுவுமே மிஞ்சப் போவதில்லை, எங்கள் நியாயங்களும் வெளியில் தெரியப்போவதில்லை.

மதிப்புக்குரிய ஐயா நீங்களும், வைகோ அவர்களும், திருமாவளவன் அவரகளும் மருத்துவர் ஐயா அவர்களும், வீரமணி அய்யா, சீமான் அவர்கள், சுபா வீரபாண்டியன் அவர்கள், மற்றும் இங்கு குறிப்பிடாத தமிழின பற்றாளர்கள் என்றுமே விடாது எங்களுக்கு ஆதரவு குரல் கொடுத்து வருகின்றீர்கள். எங்களுக்காக எத்தனையோ துன்பங்களை அனுபவித்தீர்கள். அதனையெல்லாம் இந்த அல்லல்படும் நெஞ்சங்கள் என்றும் மறக்கப் போவதில்லை. ஆனால் ஐயா அவலத்தின் உச்சத்தில் இருக்கும் இந்த பாவப்பட்ட தமிழினத்துக்கு உங்களின் பணி இன்னும் தேவை என்பது தாங்களுக்கு நன்றாகவே தெரியும்.

வீறு கொண்டு எழுந்த மாணவா சமுதாயம், சட்டத்தரணி சமுதாயம், திரைப்பட துறையினர் மற்றும் நம் மக்கள் எல்லோரும் மீண்டும் எழுந்து வாருங்கள். அடங்காத போராட்டம் நடத்தி எங்களை காப்பாற்ற வாருங்கள். மத்திய அரசின் இந்த தர்மமற்ற செயலை கண்டித்து தடுத்து நிறுத்துங்கள். தமிழனின் உறுதி, ஒற்றுமை, உணர்வு எல்லாம் உலகத்துக்கு தெரிய வேண்டும். எங்கள் ஒட்டுமொத்த தமிழ் மானம் காக்கப் படவேண்டும். நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் நாங்கள் அதாள பாதாளத்துக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை மறவாதீர்கள். தமிழனின் புல் பூண்டு கூட ஈழத்தில் மிஞ்சப் போவதில்லை. மீண்டும் ஒரு அடிமை சாசனம் எழுதப்பட்டு கொண்டிருக்கிறது.
give a peace Pictures, Images and Photos
ஐயா அணி திரட்டுங்கள் எங்கள் மக்களை! அவர்கள் எங்களுக்காக நிச்சயம் பாசத்தோடும் உரிமையோடும் போராடுவார்கள். எங்களுக்காக உயிர் கொடுத்த முத்துகுமரன்களை தந்த இந்த தமிழக மண் எங்கள் துயர் துடைக்க பின் நிற்க மாட்டாது. ஆனால் அவர்கள் ஒற்றுமையான ஒரு தலைமையின் தூண்டுதலையும் அதன் வழிநடத்தலையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தலைமைகளின் ஒற்றுமை மேலோங்கும் போது மக்களின் ஒற்றுமையும் சீர்குலையாது. அவர்கள் போராட்டமும் வீறு கொண்டெழும். போராட்டம் வெற்றியும் பெறும்.

ஆவன செய்வீர்களா ஐயா? உங்கள் சொல் கேட்டு அணித்திரள எங்கள் தமிழின உணர்வாளர்கள் என்றும் பின் நிற்பதில்லை. தேர்தலுக்காக இடம் மாறினாலும் எங்கள் இன வெற்றியில் அவர்களுக்கு மாற்று கருத்துக்கள் இல்லை. தமிழின உணர்வாளர்களே கட்சி மறந்து, பேதங்கள் மறந்து தயவு செய்து தமிழின வெற்றிக்காக ஒன்று திரளுங்கள். தமிழ் மானம் காக்க ஒன்று திரளுங்கள். ஈழம் விடிய ஒன்று திரளுங்கள். எங்கள் கண்ணீர் துடைக்க ஒன்று திரளுங்கள். எங்கள் உரிமை வென்றெடுக்க ஒன்று திரளுங்கள். எங்களின் வாழ்வும் சாவும் தமிழ் உறவுகளே உங்கள் கைகளில் மட்டும் தான் இருக்கின்றது. வேறு யாரும் நமக்காக இங்கில்லை என்பது தான் நிதர்சனம்.

லக்ஷ்மி

நன்றி
தமிழ்ஸ்கைநியுஸ்


தடுப்பு முகாம்களில் இன்னும் 2 ஆண்டுகள்

0 comments


சிறிலங்காவில், முள்கம்பிகளால் சுற்றிவளைக்கபட்ட தடுப்பு முகாம்களில் வைத்திருக்கும் 250,000 வரையிலான தமிழ் மக்கள் இரண்டு வருடங்கள் வரை முள்கம்பிகளுக்குப் பின்னேயே இருப்பார்கள் என அரசு அதிகாரி ஒருவர் இன்று குறிப்பிட்டதை, பிரித்தானியா கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இத்தடுப்பு முகாம்களின் சூழலின் நிலை குறித்து சர்வதேசம் வைத்திருந்த கவலையையும் புறம்தள்ளி, எவ்வளவு காலத்துக்குத் தடுத்து வைத்திருப்பது குறித்து ஐ.நா. தங்களுக்கு முறையிடவிட சிறிலங்கா ஆயத்தமாகவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் லக்ஸ்மன் குலுகல கூறியுள்ளார்.

சிறிலங்கா அரசின் முந்திக் கொடுத்த நிச்சயங்களில் இருந்து மிகவும் மாறுபட்ட இம்முடிவையிட்டு ஐ.நா. பேச்சாளர், கோர்டன் வெய்ஸ், தான் அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசானது இவ்வருட முடிவுக்குள் 80 விகிதமான மக்களை அவர்களது வதிவிடங்களுக்கு திரும்ப அனுப்பிவிடும் அல்லது குறைந்தது அதற்கு முயற்சி எடுக்கும் என்றே நாம் விளங்கியிருந்தோம். என்று கோர்டன் வெய்ஸ் கூறியுள்ளார்.

முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் மக்களை வெளியேறவிடுமாறு ஐ.நா., பிரித்தானியா மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தார்கள். ஆனால், இது தொடுத்து ஐ.நா. எங்களுக்கு முறையிட முடியாது என்று குலுகல கூறியுள்ளார்.


அவர்கள் வேண்டுகோள் விடுக்கலாம் ஆனால் ஐ.நா. மக்களை வெளியேவிடுமாறு எங்களைக் கேட்கவில்லை என்றும் குலுகல மேலும் கூறியுள்ளார். மேலும் “மக்களை மீண்டும் குடியேற்ற எங்களுக்குத் திட்டம் உள்ளது, அது 2 வருடங்கள் எடுக்கும், அதற்கு இவ்வமைப்புகள் வந்து எம்மோடு சேர்ந்து கொள்ளலாம்” என்று குலுகல தெரிவித்துள்ளார். மேலும், இம்மக்கள் விடுதலைப் புலிகளா இல்லையா என்று நிலைநாட்டும் வரை அவர்களைத் தடுத்துவைத்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அத்தோடு, முகாம்களின் நிலைமைகள் குறித்த குற்றச்சாட்டுக்கு பதில் அழிக்கையில் “நட்சத்திர விடுதியின் உபசரிப்பை அங்கு ஒருவரும் எதிர்பார்க்க முடியாது என்றும், அடிநிலையைத்தான் கொடுக்க முடியும், ஒக்ஸ்வோர்ட் கல்லூரியை அவர்கள் எதிர்பார்க்க முடியாது” என்றும் கார்டியன் பத்திரிகைக்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கூறியுள்ளார்.

நன்றி
-பதிவு


எங்கள் வாழ்நாளில் பார்காத துயரங்கள் - பிரெஞ்சு மருத்துவர்கள்

0 comments


வன்னி மக்களை ஆயிரக்கணக்கில் கொன்றுகுவித்துக் கொண்டிருக்கும் சிங்கள இராணுவமானது பல தரப்பட்ட தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை ஏவிவருவது இப்பொழுது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.


எரிசக்தி இரசாயன போர்கருவிளால் படுகாயமடைந்த மக்களுக்கு சிகிச்சையளித்த செட்டிகுளம், வவுனியா வைத்தியசாலை பிரெஞ்சு மருத்துவர்கள் இதை உறுதி செய்துள்ளனர். சர்வதேச மரபின்கீழ் இந்த இரசாயன ஆயுதமானது மக்கள் வாழும் இடங்களில் பாவிப்பது என்பது தடைசெய்யப்பட்டது என்று இங்கு மீண்டும் குறிப்பிடத்தக்கது.
இதுஇவ்வாறிருக்க, சிறிலங்கா அரசாங்கம் மீட்பு நடவடிக்கை இடம்பெறுவதாக கூறுகின்றது. ஆனால் தமிழ் பொதுமக்கள் செலுத்தியிருக்கும் அதிகவிலையை அங்கு நினைவாற்றல் இழந்தவர்களும், காயமடைந்தவர்களும் வெளிப்படுத்துவோராக காணப்படுகின்றனர் என்று செட்டிகுளத்தில் பிரான்ஸ் கள மருத்துவமனையில் பணியாற்றும் மைக்கேல் ஓர் செல் மருத்துவர் ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.


இந்தத் தமிழ் மனிதரின் இதயத்திற்குப் பக்கத்தில் சன்னம் ஒன்று இருப்பதை 'எக்ஸ்ரே' காட்டியது. வன்னியில் மோதல் பகுதியிலிருந்து வெளியேறிய பல்லாயிரக்கணக்கானவர்களில் இவரும் ஒருவர். 6 மாதங்களுக்கு முன்னர் மார்பில் தனக்கு சூடு விழுந்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால் இதனை எங்களால் அகற்றமுடியாது.
ஏனெனில் முழுமையாக இருதய சத்திர சிகிச்சை செய்யவேண்டியுள்ளது. என்று செட்டிகுளத்தில் பிரான்ஸ் கள மருத்துவமனையில் பணியாற்றும் மைக்கேல் ஓர் செல் மருத்துவர் ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சத்திர சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், தாதியர், ஏனைய அலுவலர்கள் 72 பேர் அடங்கிய குழுவினர் சுமார் 700 பேருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இவர்களில் சுமார் 100 பேருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

சிறிலங்கா அரசாங்கம் மீட்பு நடவடிக்கை இடம்பெற்றதாக கூறுகின்றது. ஆனால் தமிழ் பொதுமக்கள் செலுத்தியிருக்கும் அதிகவிலையை அங்கு நினைவாற்றல் இழந்தவர்களும், காயமடைந்தவர்களும் வெளிப்படுத்துவோராக காணப்படுகின்றனர்.

கசப்பான இனமோதலானது இறுதிக்கட்டத்தை நெருங்கியபோது சாதாரண கிராமவாசிகள் ஆண்கள், பெண்கள், இளைஞர், முதியவர் சுடப்பட்டும் குண்டு, எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகியும், எரிகாயப்பட்டும் இருப்பதை அவர்களின் காயங்கள் வெளிப்படுத்துகின்றன.

தப்பிவந்த பொதுமக்களின் உடல்களில் இருந்த இயந்திரத் துப்பாக்கிச் சன்னங்கள், சிதறல்களைக் கண்டு தான் திகிலடைந்ததாக டானியல் சோஜொக்ஸ் என்ற மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

பத்து நாட்களில் 30 சன்னங்களை நாம் அகற்றியுள்ளோம். அவற்றில் 10 சன்னங்கள் சிறுவர்களின் தோள்பட்டையிலும் கால்களிலும் இருந்தன. ஒரு முதிய பெண்ணின் முழங்காலில் கூட ஒன்று இருந்ததென்று பிரான்ஸ் அரசின் நிவாரணக் குழுவில் இடம்பெற்றிருந்த பிரேட்ரிக் வாவ்டின் என்பவர் கூறினார்.

மற்றொரு காயமடைந்தவரான சுரேந்திரன் திரேசம்மா வயது 36 தனது மார்பு, தோள்களில் மருந்து கட்டியுள்ளார். இரு வாரங்களுக்கு முன்பு தான் இரசாயனக் குண்டினால் தான் எரிகாயமடைந்ததாக அவர் கூறியுள்ளார்.

இதேமாதிரியான காயங்களை தாங்கள் பார்த்ததாக பிரான்ஸ் மருத்துவர்கள் கூறுகின்றனர். சிலர் கைகளில் வெள்ளையாக உள்ளது. பொஸ்பரஸால் எரியுண்ட சாத்தியமாக இருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

கள மருத்துவமனையிலுள்ள மருத்துவர்கள் எந்தவொரு தரப்பையும் சுட்டிக்காட்ட தயங்குவதாக ஏ.எவ்.பி. கூறியுள்ளது.

நன்றி
-தமிழ் செய்தி


அடுத்த கட்ட நடவடிக்கை 48 மணி நேரத்திற்குள் - கோத்தபாய

0 comments


முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் அனைத்தும் அடுத்துவரும் 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அறிவித்திருக்கின்றார்.
களமுனையில் உள்ள இராணுவத் தளபதிகளின் தகவல்களை அடிப்படையாக வைத்தே இந்தக் கருத்தை வெளியிடுவதாகவும் தெரிவித்த கோதாபாய ராஜபக்ச, அந்தப் பகுதி மீது அடுத்த 48 மணி நேரத்துக்குள் பாரிய தாக்குதல் ஒன்றுக்கு படையினர் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த கோத்தபாய ராஜபக்ச, ஏப்ரல் 20 ஆம் நாள் நடத்தியதைப் போல புலிகளின் கட்டுபபாட்டுப் பகுதிக்குள் பிரவேசிப்பதற்கும் அதன் மூலம், அங்குள்ள மக்களை வெளியே கொண்டு வருவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் கவனம் முழுமையாக தேர்தலின் பக்கம் திரும்பியிருக்கும் நிலையைப் பயன்படுத்தி மிகவும் குறுகிய நிலப்பரப்பாக இருக்கும் பாதுகாப்பு வலயத்தின் மீது பாரிய தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு அரசாங்கப் படைகள் தயாராகி வருகின்றன. இந்தப் பகுதியில் தற்போது ஒன்றரை இலட்சத்துக்கு அதிகமான மக்கள் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

நன்றி
-புதினம்


அவசர உதவி

21 comments


இலங்கைப் பிரச்சினையில் சர்வதேசம் தலையிட வேண்டுமா? எனசி.என்.என் வாக்குப் பதிவு நடத்துகின்றது.
இதில் தமிழ் மக்களும் கலந்துகொண்டு உங்கள் வாக்குகளை அளிக்கலாம். சிறீலங்காவிற்கு ஆதரவானவர்களின் வாக்குகள் அதிகமாக உள்ளதால் தற்போது சர்வதேசம் தலைலயிடத் தேவையில்லை என்ற கருத்திற்கே அதிகம் பேர் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிப்பதற்கு இங்கு அழுத்தவும்

பதிவுலக நண்பர்களே ஒரு வேண்டுகொள் இதை அனைவருக்கும் இந்த செய்தியை உங்கள் பதிவின் மூலம் \ மின்அஞ்சல்\ கைபேசி
வழியாக தெரிவிக்கவும்.

இந்த ஒட்டு எடுப்பில் பல சிங்கள கை கூலிகள் நமக்கு எதிரக வாக்கு மற்றும் பின்னோட்டம் இட்டுயுள்ளனர் எனவே ஈழதமிழருக்கு ஆதரவாக ஒட்டும் பின்னோட்டமும் இடும்படி அன்புடன் வேண்டுகிறேன் நன்றி


நன்றி
-சங்கதி


இலங்கைக்கு ஐ.நா. கடும் கண்டனம்!!!

0 comments


வன்னியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்ட சிறார்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ள ஐ.நா. சபை, இத்தாக்குதலுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கொழும்புக்கான ஐ.நா. செய்தித் தொடர்பாளர் கார்டன் வெய்ஸ் கூறுகையில், மிகப் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட சிறார்கள் இதில் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சிறார்களின் மரணத்திற்கு யார் காரணம் என்பது தெரியவில்லை.

மிகக் குறுகிய இடத்திற்குள் மக்கள் சிக்கியிருப்பதால் தாக்குதல் நடந்தால் மிகப் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் என ஏற்கனவே ஐ.நா. எச்சரித்து வருகிறது.
srikanka tamil children death Pictures, Images and Photos
ஆனால் நாங்கள் சொன்னதை யாருமே கேட்கவில்லை. இப்போது நூற்றுக்கணக்கான சிறார்கள் உள்பட பெருமளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது கவலை தருவதாக உள்ளது.

மீட்புப் பணியில் மக்களே ஈடுபடும் அவலம்..

இதற்கிடையே இலங்கை இராணுவம் நடத்திய இரத்தவெறியாட்டத்தில் சிக்கி பலியானவர்களின் உடல்களை அப்புறப்படுத்துவதிலும், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியிலும் பாதிக்கப்பட்ட மக்களே ஈடுபடும் அவலம் ஏற்பட்டுள்ளது.


இடிபாடுகளையும், தீயினால் கருகிய பொருட்களையும் அப்புறப்படுத்தும் பணியிலும் மக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களில் பெண்களும், குழந்தைகளும்தான் அதிகம். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருந்துகள் இல்லாததால் உயிரிழப்பு கூடிக் கொண்டே போகிறது.

இதற்கிடையே, விடுதலைப் புலிகள்தான் இத்தனை பேரின் சாவுக்குக் காரணம் என இராணுவம் வழக்கம் போல குற்றத்தை திசை திருப்ப முயன்றுள்ளது.

நன்றி
-தமிழ்வின்


மக்கள் பாதுகாப்பு சரியாக இல்லை பிரிட்டனின் பிரதிநிதிகள் கவலை

2 comments


பிரிட்டனின் இலங்கைக்கான விசேட பிரதிநிதியும் அண்மையில் கொழும்புக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் குழுவின் தலைவருமான டெஸ் பிறவுண் அவசரமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக அவர் இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து பேச்சு நடத்தினார்.

பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள 50 ஆயிரம் மக்களின் பாதுகாப்பே மிகவும் முன்னுரிமைக்குரிய விடயம். தற்போது இலங்கையில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் விதத்தைக் கண்காணிப்பது அவசியம்.


அதேவேளை, இடம்பெயர்ந்துள்ள 2 இலட்சம் மக்கள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும். மேலதிக வளங்கள் தேவை, சர்வதேச மனிதாபிமான அமைப்புகளுக்கு விசா வழங்கப்படவேண்டும் என்று பேச்சுக்களின் பின்னர் அவர் கருத்துத் தெரிவித்தார்.

மேலும் நலன்புரி நிலையங்களில் பிரிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் சேர்க்கப்பட வேண்டும், இடம்பெயர்ந்த மக்களை சோதனையிடும் நடவடிக்கைகள் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த மக்கள் குறுகிய விரைவில் தமது பகுதிகளுக்குத் திரும்புவதற்கான திட்டமொன்று வகுக்கப்படவேண்டும் என்றும் பிறவுண் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு வெளிப்படைத் தன்மையையும் பகிரங்க செயற்பாடுகளையும் விரும்பவில்லைப்போல் தென்படுகிறது; தயங்குகிறது. அவர்கள் சர்வதேச சமூகத்தை உள்ளே அனுமதித்தால் இலங்கை நிலைவரம் குறித்து சமநிலையான பக்கச்சார்பற்ற கருத்து உருவாகலாம் என்றும் டெஸ் பிறவுண் தெரிவித்துள்ளார்.


இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்கள் பாதுகாப்பானவையாகக் காணப்பட்டாலும் அனைத்தும் அங்கு சரியாக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயங்கள் தொடர்பாக இந்தியத் தலைவர்களுடன் தாம் பேச்சு நடத்தினார் என்று பிறவுண் மேலும் கூறினார்.

இலங்கை விவகாரங்களில் பிரிட்டனின் விசேட தூதுவராக டெஸ் பிறவுணியை அந் நாட்டின் பிரதமர் நியமித்திருந்ததும், இலங்கை அரசு அவரது நியமனம் தேவையற்றது என்று நிகாரரித்திருந்தமையும் தெரிந்தவையே.

நன்றி
-தமிழ்வின்


கொழும்பில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது

1 comments


*net photo
கொழும்பின் பல பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலில் தமிழர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, தெஹிவளை, கொச்சிக்கடை, மட்டக்குளி, முகத்துவாரம் உட்பட பல பகுதிகளிலேயே இந்த திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த தேடுதல் சுற்றிவளைப்பின் போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பு தரப்பினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களில் தமது பதிவை உறுதிப்படுத்தத் தவறியவர்களே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சுற்றிவளைப்புத் தேடுதலின் போது கொழும்பின் பிரதான வீதிகளில் பயணித்துக்கொண்டிருந்த பஸ்கள் இடைமறித்து அவற்றில் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு பலத்த சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் பலர் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இதேவேளை முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உட்பட அனைத்து வாகனங்களும் இதன்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

சோதனையின் போது கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். உரிய விசாரணைகளை அடுத்து அவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

நன்றி
-வீரகேசரி


பட்டினியின் அவல நிலை -ஈழதமிழருக்கு தவிடுதான் உணவு

0 comments



விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக மக்கள் பாதுகாப்பு வலயத்தில் இடமபெயர்ந்து வாழும் மக்கள் பட்டினி அவலத்தை எதிர்நோக்கியுள்ளனர் என வன்னியிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

உணவுத் தட்டுப்பாட்டு நிலையிலும் உமிக்குள் நெல் பொறுக்கி மக்கள் இன்று தவிட்டை மட்டும் கரைத்துக் குடிக்கின்ற மிக மோசமான பட்டினி அலவத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

வன்னி மீது சிறீலங்கா சிறீலங்கா அரசு உணவையும், மருந்தையும் போர் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றமை நிலைமையில் அந்த மக்கள் ஒரு வேளையேனும் கஞ்சியை உணவாக எடுத்துக்கொண்டனர். அதனையும் இன்று இழந்து தவிட்டைக் கரைத்துக் குடிக்கும் நிலை வன்னி மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.

நன்றி
- பதிவு