Headline

ரணில் விக்கிரமசிங்கயின் அவசர வேண்டுகோள்


தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும். இன்றேல் தமிழ் மக்கள் இந்த பாராளுமன்றத்தில் நம்பிக்கை இழந்து விடுவதுடன் பாராளுமன்றத்தின் மீது நம்பிக்கை வைக்காத மற்றுமொரு குழு உருவாக வழிவகுக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு பாராளுமன்றத்தினூடாக தீர்வுகாண முடியும் என்ற நம்பிக்கையில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளனர். எனவே, கூட்டமைப்பினரை பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பாராளுமன்ற உறுப்பினர்களாக சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும். அதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பாராளுமன்ற உறுப்பினர்களை சுதந்திரமாக உரிமையுடன் செயல்படுவதற்கு அனுமதிக்காவிடில் பாராளுமன்றம் ஊடாக தமது பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாதென்ற நிலைப்பாட்டிற்கும் முடிவுக்கும் தமிழ் மக்கள் வந்து விடுவர். அத்துடன், பாராளுமன்றத்தின் மீது நம்பிக்கை கொள்ளாத புதியதோர் குழு உருவாகக் கூடிய சூழ்நிலையும் ஏற்படும்


நன்றி
-சங்கதி

0 comments: