வின்பரை அம்மையார் வழிநடத்தும் ‘ஒபரா’ எனப்படும் உலகப்புகழ் பெற்ற செவ்வி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒரு வாய்ப்பளிக்குமாறு அவரிடம் வேண்டுகோள் விடுத்து, ஈழத்தமிழ் மக்களின் மனிதாபிமான பிரச்சினைகளை சர்வதேச கவனத்திற்கு கொண்டு வர முயற்சிக்கும் 4 தமிழ் இளைஞர்கள், கனடாவின் டொறொண்டோவில் இருந்து, சிகாகோ நகர் வரை நடைபயணத்தை
தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்!
இந்நிலையில் இவ் ஒபரா நிகழ்ச்சியில் மேற்குலகின் பிரபல இசை நட்சத்திரமும், இலங்கை தமிழ் பெண்ணுமான மாயா அருள் பிரகாசம் கலந்துகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒஸ்கார் விருதுகளை அள்ளிக்குவித்த ஸ்லம்டோக் மில்லியர் திரைப்படத்திலும், ஏ.ஆர் ரகுமானின் இசையில் இவர் பாடிய ஒரு பாடல் படுபிரபல்யம் ஆனது! இவர் இலங்கை தமிழ் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இன ஒடுக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக மாயா அருள் பிரகாசம் அண்மையில் பகிரங்க அறிவிப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர் இவ் ஒபரா நிகழ்ச்சியில் கலந்து கொள்வாராயின், சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலை பற்றி அனைத்துலக வெளிச்சத்திற்கு கொண்டு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாயா அருள் பிரகாசத்தின் இச்செவ்வியை ஒளிபரப்பு செய்யக்கூடாது என சிறீலங்கா அரசிற்கு ஆதரவு தெரிவிக்கும்,அமெரிக்காவில் வாழ் இலங்கையர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உலகப்பயங்கர வாத அமைப்புக்களில் ஒன்றான தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆதரவான வகையில் மாயா செயற்பட்டு வருவதாக எதிர்ப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நன்றி
பாரிஸ்தமிழ்.காம்
டிஸ்கி
நண்பர்களே அவர் நிகழ்ச்சி மாபெறும் வெற்றி அடைய அவருக்கு உங்கள் மேலான ஆதரவை அவருடைய MIA தளத்தில் சென்று பதியும்மாறு தோழமையுடன் அன்பு வேண்டுகோள். நன்றி!!!
Headline
தோழி மாயாவின் நிகழ்ச்சியை தடை செய்ய சதி!!
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
தகவலுக்கு நன்றி சிவா
//ஆதரவை அவருடைய MIA தளத்தில் சென்று பதியும்மாறு தோழமையுடன் அன்பு வேண்டுகோள். நன்றி!!!//
தள வடிவமைப்பு படிக்க சிரமமாக உள்ளது
வாங்க கிரி
வணக்கம் நலமா?
"தள வடிவமைப்பு படிக்க சிரமமாக உள்ளது"
கீழ் உள்ள மாயாவின் மைபேஸ் முகவரி மூலம் தகவல் அனுப்பலாம் கிரி.
http://www.myspace.com/mia
Post a Comment