Headline

ஆசிய மனித உரிமைப் பேரவையின் அதிர்ச்சி தகவல்!



இலங்கை காவல் நிலையங்களில் பல்வேறு சித்திரவதைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக ஆசிய மனித உரிமைப் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக பரவலகாக குற்றம் சுமத்தப்பட்ட போதிலும், அதனைவிடவும் காவல் நிலையங்களில் சித்திரவதைச் சம்பவங்கள் அதிகமாக பதிவாவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
குறிப்பாக மோதல் சம்பவங்கள் இடம்பெற்ற வடக்கு கிழக்கை விடவும் தெற்கில் அதிகளவு சித்திரவதை சம்பவங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சித்திரவதைச் சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டுமாயின் சித்திரவதைச் சம்பவங்கள் குறித்த முறைப்பாடுகள் உரிய முறையில் விசாரணை செய்து தண்டனை வழங்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக காவல்துறை திணைக்களம் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களம் ஆகியவற்றிலேயே அதிக குறைபாடுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.



கடந்த காலங்களை விடவும் தற்போது காவல் நிலையங்களில் சித்திரவதை மற்றும் உரிமை மீறல் சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக ஆசிய மனித உரிமைகள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

சித்திரவதைகளினால் பாதிக்கப்பட்டோரை பாதுகாக்கும் சர்வதேச தினத்தை முன்னிட்டு ஆசிய மனித உரிமைகள் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நன்றி
-உலக தமிழ்ச் செய்திகள்

0 comments: