Headline

அதிர்வு தளத்தில் இருந்து ஒரு அவசர வேண்டுகோள்


எம் உறவுகளே தேசிய தலைவர் பற்றி பல செய்திகள் தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்களில் வெளிவருகின்றன. இது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிர்வு இனையம் வேண்டி நிற்கிறது. மக்களைக் குழப்பும் நோக்கில் பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

புலம் பெயர் வாழ் எமது உறவுகளே நாம் புரிந்துகொள்ள வேண்டிய விடையம் ஒன்று உள்ளது. நாம் தற்போது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். இது மக்கள் சக்தியாக உருமாறி சர்வதேசத்தின் கதவுகளை தட்டி மெல்லத் திறந்துள்ளோம். அமெரிக்கா, பிரித்தானியா பேன்ற நாடுகள் எமது தொடர்போராட்டம் காரணமாக தற்போது எமது கோரிக்கைகளுக்குச் செவிசாய்கின்றன.

இன் நிலையில் இந்தப் போராட்டங்களை நிலை குலைக்க சில சக்திகள் முணைகின்றன. எமது விடுதலைப் புலிகளின் தலைமை குறித்த நேரத்தில் தகுந்த முடிவை எடுக்கும். அந்த முடிவு இலங்கையில் இருந்து வெளிவரும் என்பதில் ஜயமில்லை. அதுவரை நாம் பொறுமைகாப்போம். மக்கள் சக்தியாக ஒன்றுபட்டு எமது போராட்டங்களை வழமைபோல கொண்டுசெல்வோம்.

நன்றி
-அதிர்வு

1 comments:

உண்மை முகம் said...

இந்த காணொளி வலு சேர்க்கும் என்று நினைக்கிறேன்

இது எதை குறிக்கிறது ? இது 18 ஆம் திகதி காலையில் எடுக்கப்பட்ட காணொளி. இதனைத்தான் இலங்கை அரசாங்கம் வெளியிட்டது சத்தமில்லாமல்.
ஆனால் இதனைப்பார்க்கும்போது விளங்குகிறது அப்போதுதான் கொன்றிருக்கிறார்கள்.
யார் இது ? ஏன் ? எப்படி ? என்ன நடந்தது ?
இதற்கும் விளக்கம் சொல்வாரா பத்மநாதன் ?
http://unmaimukam.blogspot.com/2009/05/blog-post_24.html