Headline

தீ ...தீ ...வதந்தி...


இலங்கைப் பாதுகாப்பு படையினர் விடுதலை புலிகளிடமிருந்து நாட்டை விடுவித்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அதேவேளை இன்றுகாலை இடம்பெற்ற மோதல்களின் போது விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் உயிரிழந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
fire breathing gif Pictures, Images and Photos


பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தேடுதல்களின் போது எரியுண்ட நிலையில் சடலமொன்றை மீட்டதாகவும், இது விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனுடையதாக இருக்கலாமென சந்தேகிப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட சடலங்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று இடம்பெற்ற மோதல்களில் விடுதலை புலிகளின் புலனாய்வு பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான், கடற்புலித் தலைவர் சூசை ஆகியோரும் உயிரிழந்துள்ளதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை விடுதலை புலிகளின் தலைவர் முல்லைத்தீவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட மோதல்களில் உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி
-வீரகேசரி

1 comments:

கலையரசன் said...

நெஞ்சம் பொருக்குதில்லையே, இந்த அவதூறு பரப்பும் நிலைகெட்ட மானிடரை நினைத்துவிட்டால்...
www.kalakalkalai.blogspot.com