Headline

"பிரபாகரனைப் பிடித்து நாடுகடத்தமாட்டார்களா" - பிரணாப் முகர்ஜி


புலிகளின் தலைவர் பிரபாகரனை இலங்கை அரசாங்கம் கைதுசெய்து இந்தியாவுக்கு நாடுகடத்தாதா என தாம் ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்த்து காத்திருந்ததாக பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். நீயூ டெல்லி டெலிவிசன் என்றழைக்கப்படும் NDTV க்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்திரா காங்கிரஸின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான பிரணாப் முகர்ஜின் இக் கருத்துக்கள் பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. இலங்கையில் சமாதானம் மலரவேண்டும் எனக் கூறி பல தடவை விஜயம் மேற்கொண்ட முகர்ஜி, மற்றும் ராஜீவ் காந்தியின் கொலையை மன்னித்துவிட்டதாக கூறும் காங்கிரஸ் தரப்பினர் மத்தியில் கபடநாடகத்தில் ஈடுபட்டிருந்திருக்கிறார் முகர்ஜி. தமிழர் விரோதப் போக்கை கடைப் பிடிக்கும் காங்கிரசிற்கு தமிழ் நாடு தகுந்த பதிலடிகொடுக்கும் என்பதில் ஜயமில்லை.


நன்றி
அதிர்வு.காம்

news.webindia123.com

spot.lk

0 comments: