Headline

ஐகோர்ட்டு அருகே போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்



சென்னை ஐகோர்ட் அருகே போலீஸ்காரர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று பிற்பகல் 3.30 மணியளவில் சென்னை உளவுப்பிரிவு ஏட்டு கவுரி வளவன் (வயது 40) சென்னை ஐகோர்ட்டு அருகே என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் ஒரு டீக்கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது நான்கைந்து பேர் இவன் போலீஸ்காரன்டா, இவனை அடித்து உதைங்கடா என்று கூச்சல் போட்டுக்கொண்டே ஓடி வந்து ஏட்டு கவுரி வளவனை சரமாரியாக அடித்து உதைத்தார்கள் என்று கூறப்படுகிறது.

வலி தாங்க முடியாத கவுரி வளவன் கீழே விழுந்ததும், தாக்குதல் நடத்தியவர்கள் ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. தாக்குதலில் காயம் அடைந்த ஏட்டு கவுரி வளவன் சிகிச்சைக்காக அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அவர் சட்டக்கல்லூரி போலீசில் வழக்கறிஞர்கள் மீது புகார் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

நன்றி
நக்கீரன்

0 comments: