Headline

இலங்கை ராணுவத்திற்கு புதிய வீரர்கள் சேர்க்க முடிவு - சரத் பொன்சேகா



இலங்கை ராணுவத்தின் செயல்பாடுகள் அதிகரித்து வருவதால், ராணுவத்திற்கு மேலும் ஏராளமான வீரர்கள் சேர்க்கப்படுவர் என்று ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

கொழும்பு அம்பேபுஸ்ஸா என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ராணுவத்தின் பலம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளில் பல்வேறு வெற்றிகள் கிடைத்துள்ளன.

இதன் காரணமாக ராணுவத்திற்கு மேலும் பலரை எடுக்கவுள்ளோம்.

நாட்டின் பாதுகாப்புக்கு விடுக்கப்படும் எந்தவித மிரட்டலையும் சமாளிக்கும் வகையிலான ராணுவமாக இலங்கை ராணுவம் திகழும்.

கடந்த காலங்களில் போர்க்களத்தில் வீரர்கள் ஆற்றிய பணி, சேவை மகத்தானது. ஓய்வுக்குப் பின்னர் அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்க அரசு உதவும். ராணுவத்தினர் மீதான மக்களின் எண்ணமும் கூட பெருமளவில் மாறியிருக்கிறது.

வீரர்களின் ஓய்வூதியத்தை, அவர்களது சம்பளத்தின் 85 சதவீதமாக உயர்த்திட நடவடிக்கை எடுத்துள்ளார் அதிபர் ராஜபக்சே என்றார் பொன்சேகா.

ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கப் போவதாக கூறுகிறார் பொன்சேகா. ஆனால் வடக்கில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் உயிரிழந்திருப்பதால்தான் ஆள்பற்றாக்குறையை சமாளிக்க மேலும் பல வீரர்களை இலங்கை ராணுவம் எடுப்பதாக கருதப்படுகிறது.

நன்றி
-தட்ஸ்தமிழ்

2 comments:

greatlover said...

"இது வரை எத்தனை வீர்கள் இறந்தனர் ?எத்தனை வீரர்கள் அங்கம் இழந்தனர்? எத்தனை வீரர்கள் காணாமல் போயினர்? பணம் கிடைக்காத வீரர்களின்/குடும்பங்களின் புகார் எத்தனை நிலுவையில் இருக்கிறது? அரசாங்கத்தின் வருமானம் என்ன? கடன் என்ன? பிச்சை எவ்வளவு கிடைக்கிறது? எந்த எந்த நாடுகள் பிச்சை போடுகின்றன?" போன்ற விபரங்களையும் தெரிவித்தால் நல்லது

puduvaisiva said...

""இது வரை எத்தனை வீர்கள் இறந்தனர் ?எத்தனை வீரர்கள் அங்கம் இழந்தனர்? எத்தனை வீரர்கள் காணாமல் போயினர்? பணம் கிடைக்காத வீரர்களின்/குடும்பங்களின் புகார் எத்தனை நிலுவையில் இருக்கிறது? அரசாங்கத்தின் வருமானம் என்ன? கடன் என்ன? பிச்சை எவ்வளவு கிடைக்கிறது? எந்த எந்த நாடுகள் பிச்சை போடுகின்றன?" போன்ற விபரங்களையும் தெரிவித்தால் நல்லது"


வாங்க கிரேட்லவ்வர்.
உங்கள் கருத்துக்கு நன்றி
சொந்த மக்களிடமே பொய் செய்தியை பரப்புவர்களிடம் என்ன? உண்மையை எதிர்பார்க்க முடியும்.