Headline

முத்துக்குமார் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி




இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், இலங்கை ராணுவ அரசின் வெறி தனத்தை கண்டித்து வேலூர் நகரில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் பொதுக்கூட்டம் நடத்தினர்.

இந்த கூட்டத்தில் பழ.நெடுமாறன், மருத்துவர் ராமதாஸ், வைகோ, திருமாவளவன், சி.மகேந்திரன், பா.ஜ.க பொது செயலாளர் ராஜேந்திரன் உட்பட தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் இலங்கை அரசை கண்டித்தும், இலங்கையில் கொல்லப்படும் தமிழர்களை காப்பாற்றக்கோரி தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாரின் குடும்பத்தினருக்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்திருந்தது.

அதன் படி வேலூரில் நடந்த கூட்டத்தில் முத்துக்குமாரின் தந்தை குமரேசனை வரவைத்து மேடையில் 3 இலட்ச ரூபாய் நிதியுதவியை மருத்துவர் ராமதாஸ், பழ.நெடுமாறன், வைகோ, திருமா ஆகியோர் வழங்கினர்.

அதன் படி வேலூரில் நடந்த கூட்டத்தில் முத்துக்குமாரின் தந்தை குமரேசனை வரவைத்து மேடையில் 3 இலட்ச ரூபாய் நிதியுதவியை மருத்துவர் ராமதாஸ், பழ.நெடுமாறன், வைகோ, திருமா ஆகியோர் வழங்கினர்.

நன்றி
நக்கீரன்

0 comments: