தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் பிரிவுப் பொறுப்பாளராகப் பணி யாற்றியவர் என்று கூறப்படும் தமிழினி (சிவசுப்பிரமணியம் சிவாதை) நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.
சந்தேகநபரான தமிழினி, வவுனியா அகதி முகாமில் வைத்து படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விசாரணை நடவடிக்கைகளுக்கென தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்தது.
குறித்த சந்தேகநபர் கடந்த 1991ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டவரெனவும் பின்னர் 1993ஆம் ஆண்டில் பூநகரி இராணுவ முகாம் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளோடு நெருங்கிய தொடர்புடையவர் என்பது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் குற்றப்புலனாவுப் பிரிவினர் தெரிவித்தனர்.
கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவரை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதியை நீதிவான் நிஷாந்த ஹப்பு ஆராய்ச்சி முன்னிலையில் வழங்கினார்.
நன்றி
-தமிழ்வின்
Headline
Jun
19,
2009
தீவிர தொடர் விசாரனையில் தமிழினி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment