பிரித்தானிய அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் நெருக்கமான உறவுகளை கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
பிரித்தானிய பிரதமரின் சிறப்பு பிரதிநிதி டெஸ் பிரவுன் ஐநாவில் இலங்கை விவகாரம் குறித்து விவாதம் ஒன்றை நடத்துவதற்கு அனுப்பப்பட்டமையை தமது அரசாங்கம் வன்மையாக கண்டிப்பதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஐநாசபை மூலம் இலங்கையில் யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த பிரித்தானியா முயற்சிப்பதாகவும் எனினும் அது நடைமுறைச்சாத்தியமற்றது என்றும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே தமது அரசாங்கம் ஐநாவின் யுத்த நிறுத்த கோரிக்கையினை திட்டவட்டமாக நிராகரித்துள்ளதாகவும் எனவே இனி ஒரபோதும் ஐநா யுத்த நிறுத்தம் குறித்து தமது அரசாங்கத்தை கோர முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
புpரித்தானிய பிரதமர் கோடன் பிரவுனின் சிறப்பு பிரதிநிதியான டெஸ் பிரவுன் தழிழ் அமைப்புகளால் நடத்தப்படும் கூட்டங்களில் பங்கேற்று வருவதாகவும் அவ்வாறனவரை சிறப்பு பிரதிநிதியாக தம்மால் அங்கீகரிக்க முடியாது என்றும் அரசாங்க பேச்சாளார் தெரிவித்துள்ளார்.
நன்றி
பதிவு.காம்
Headline
Apr
21,
2009
அவர் வருகைக்கு மிரளும் இலங்கை அரசு
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment