Headline

பெரிய நெருக்கடி ஏற்பட வாய்ப்பு - கொபி அனான்


இலங்கையின் பிரச்சினைக்குப் போர் வெற்றிகள் ஒரு தீர்வாக அமையாது என ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் கொபி அனான் ஊடகம் ஒன்று வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளதாக ஏ.பி. செய்தி வெளியிட்டுள்ளது.


யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் இழப்புகளை ஈடுசெய்வதன் மூலமும், அந்த மக்களை நல்ல நிலைமைக்கு கொண்டு வருவதன் வழியாகவுமே பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண முடியும் எனவும், இலங்கை அரசாங்கம் அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் எனவும் கொபி அனான் மேற்படி செவ்வியில் மேலும்
தெரிவித்துள்ளார்.

நன்றி
-வீரகேசரி

0 comments: