Headline

இலங்கைக்கு நிதியுதவி அளிக்கவேண்டாம்: சனல் 4 ஊடகவியலாளர்


சிறிலங்கா அரசாங்கம், வெளிநாட்டு நிதிகளைப் பெறுவதில் குறியாக இருப்பதாக, இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரித்தானிய "சனல்4" ஊடகவியலாளர் நிக் பெட்டன் வோல்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தினால் ஏராளமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். இலங்கையில் ஊடகச் சுதந்திரம் என்பது சுத்தமாக இல்லை.

தம்மை நாடுகடத்தியமை கூட, முறையாக செய்திருக்க வேண்டும். ஆனால் தம்மை சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அழைத்து அச்சுறுத்தியதாக நிக் பெட்டன் குறிப்பிட்டுள்ளார்.


சிறிலங்கா தொடர்பில் எந்த செய்தியினையும் விருப்பப்படி வெளியிட முடியும். ஆனால் அது இலங்கையில் வைத்து இல்லை. வெளிநாடுகளில் வைத்து என தம்மை அவர் அச்சுறுத்தியதாக வோல்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம், முகாம்களை புனரமைக்கவும், பராமரிக்கவும் அதிகரித்த அளவு வெளிநாட்டு நிதிகளை எதிர்பார்த்து இருக்கிறது. அவர்கள் எந்த அளவு நிதிகளை திரட்ட முடியுமோ, அந்த அளவுக்கு திரட்ட முற்படுகின்றனர். ஆனால் உண்மையில் இந்த நிதிகள் அங்குள்ள பொது மக்களுக்கு பயன்படுத்தப்படப் போவதில்லை.

தேசிய பாதுகாப்பு என கூறி, இராணுவ முன்னெடுப்புகளுக்காகவே இந்த நிதிகளை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர், இதனாலேயே இடம்பெயர்ந்த நிலையில் இன்னும் பல வருடங்களாக தமிழ் மக்கள் குடியமர்த்தப்படாமல் இருக்கிறார்கள்.

எனவே தொண்டு நிறுவனங்கள் எதுவும் இலங்கை அரசாங்கத்திற்கு நிதியுதவி செய்யக்கூடாது என பிரித்தானிய ஊடகவியலாளரான வோல்ஸ் கோரியுள்ளார்.

நன்றி
-வன்னிநெட்

0 comments: