Headline

முத்துக்குமார் மறைந்த 100வது நாள் பாரதிராஜா தலமையில் அஞ்சலி!!!



இலங்கை பிரச்சினை தொடர்பாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட முத்துக்குமார் இறந்து நேற்றுடன் 100 நாள் முடிந்தது.


சிவகாசி பாவடி தோப்பு திடலில் திரையுலக தமிழீழ ஆதரவு குழு சார்பில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தின் போது முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.



இதில் தமிழ் திரையுலக இயக்குனர்கள் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.


இதை நினைவு படுத்தும் வகையில் பாரதிராஜா அனைவரையும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி இருக்க கேட்டுக்கொண்டார்.


அதன்படி கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஒரு நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.


அப்போது ஆர்.கே.செல்வமணி,


’’தமிழ்நாட்டுக்கு, தமிழ் இனத்துக்கு துரோகம் செய்பவர்கள் யார் என்று சொல்லத்தான் நாங்கள் இங்கு வந்து இருக்கிறோம்.


நமது ராணுவத்தின் மீது நமக்கு வெறுப்புவர காரணமாக இருந்தது காங்கிரஸ் கட்சிதான். 21/2 லட்சம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ் கட்சியை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்’’என்று பேசினார்.


நன்றி
-நக்கிரன்

1 comments:

Anonymous said...

முத்துகுமார நன்றி மறந்த பதிவுலகம் உன்னைப்பற்றி நினைவு செலுத்த
மறந்து போனது.

முத்துகுமாருக்கு எந்தன் வீரவணக்கம்

மோகன்
நார்வே