Headline

நாஞ்சில் சம்பத் விடுதலை!!!


மதிமுகவின் கொள்கை பரப்புச்செயலாளர் நாஞ்சில் சம்பத், கடந்த மாதம் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரை பார்ப்பதற்காக அவரது மனைவி சிறைக்கு சென்றபோது அனுமதி மறுக்கப்பட்டது. இதை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்நிலையில் நாஞ்சில் சம்பத்தின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது கணவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தார்.


இவ்வழக்கில் வைகோ நேரில் ஆஜராகி இரண்டு முறை வாதாடினார். இன்றும் அவர் நேரில் ஆஜராகி வாதாடினார். அப்போது, தேர்தல் பிரச்சார நேரத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார் நாஞ்சில் சம்பத். அவரை கைதில் எந்தவித நியாயமுமில்லை என்று வாதிட்டார்.

இவ்விவாதத்தை நன்கு கேட்டறிந்த நீதிபதி, நாஞ்சில் சம்பத்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது செல்லாது. அவரை உடனே விடுதலை செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்.

நன்றி
- நக்கீரன்

0 comments: