Headline

நாஞ்சில் சம்பத் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகவழக்கு பதிவு



மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் மீது, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 1ஆம் தேதி அனைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பில் திருப்பூரில் இலங்கைத் தமிழர் பாது காப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பேசிய நாஞ்சில் சம்பத், இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை கைது செய்ய திருப்பூர் போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நாஞ்சில் சம்பத் சென்னையில் இருப்பதாகவும், அவரை கைது செய்ய திருப்பூர் போலீசார் சென்னைக்கு விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நன்றி
நக்கீரன்

0 comments: