Headline

ஈழப்பிரச்சனை:தமிழ்நாடு பிராமணர் சங்கம் கோரிக்கை



தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் பழனி கிளை கூட்டம் அடிவாரம் அருள்ஜோதி வீதியில் உள்ள எம்.என்.ஆர். திருமண மண்டபத்தில் நடைபெற்றது.



கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் என்.ஹரி ஹரமுத்து தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில தலைவர் என்.நாராயணன் விடுத்துள்ள கோரிக்கை நகல் வாசிக்கப்பட்டு தீர்மானம் நிறை வேற்றபபட்டது.


தீர்மானத்தில், மத்திய அரசு இலங்கையில் வாழும் அப்பாவி தமிழர்களை காத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசுக்கு உறதியான முறையில் வலியுறுத்தும் வகையில் இந்தியாவின் அதிருப்தியினையும், கண்டனத்தினையும்தெரிவித்து நிலைமைகளை உணர்த்திட வேண்டும்.



மனித நேயமற்ற முறையில் அப்பாவி தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவது, வீடு, வாசல், உடைமைகளை இழந்து அகதிகள் ஆவதும், நம் தமிழ் சகோதரிகளின் கவுரவமும்,மானமும் பாதிக்கப்படாமல் இருந்திடவும், உடனடி அனைத்து நடவடிக்கை களையும் எடுத்திட வேண்டும்.


அப்பாவி தமிழர்களுக்கு உணவு பொருட்களும், மருந்துகளும் ஏனைய தேவையான பொருட்களும் உடனடி அனுப்பி வைக்கப்பட வேண்டும். இரண்டு பக்கத்திலிருந்தும் போர் நிறுத்தம் நிறுத்தம் செயல்பட உடனே மத்திய அரசு முனைப்புடன் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.


நாம் தேச பக்தர்கள், நமது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான எந்த சிந்தனை யினையும் சொல்லினையும், செயலினையும் ஆதரிக்க மாட்டோம்.


அதே சமயம் இலங்கை தமிழர் பிரச்சினை என்றாலே தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளை மனதில் வைத்துக் கொண்டு மட்டுமே கையாளுவது முறையாகாது.


நமது தமிழ் சகோதர, சகோதரிகள் அல்லல் படுவதை, அகதிகளாகப்படுவதினை இனியும் சகித்துக்கொள்ள மாட்டோம் என்கின்ற நமது நிலைபாட்டினை தெள்ளத் தெளிவாக்கிடுவோம்.


இலங்கை தமிழர் நலனுக்காக நமது நாட்டின் இறையாண்மையினை பாதிக்காத வகையில் எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும் நடவடிக்கைகளுக்கும் போராட்டங்களுக்கும் தமிழக மெங்கும் பிராமணர் சங்கம் ஆதரவு தரும்.


என கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

நன்றி
நக்கீரன்

2 comments:

Anonymous said...

ஏதோ அவிங்களுக்குத் தெரிஞ்சத சொல்றாங்க...
அதக் கிண்டல் பண்ணி படம் வரஞ்சது ஏன்.....?

puduvaisiva said...

"ஏதோ அவிங்களுக்குத் தெரிஞ்சத சொல்றாங்க...
அதக் கிண்டல் பண்ணி படம் வரஞ்சது ஏன்.....?"

Hi Anony thank for your visit
and I try to search in iyer image only I got from Google.