Headline

கலைஞருக்கு நோபல் பரிசு கிடைக்க தடையாக இருப்பது - துரைமுருகன்

Kalaignar Pictures, Images and Photos

இன்று ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் அமைந்த சந்திரபுரத்தில் 1 கோடியே 98 லட்ச ரூபாய் செலவில் நூறு வீடுகள் கொண்ட சமத்துவப்புரத்தை தளபதி மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதன் பின் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன்:

"ஜாதிகளை ஒழிக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூட தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு ஆலய பிரவேசம் செய்தார். இப்படி பல தலைவர்கள் ஜாதியை ஒழிக்க வேண்டும் என ஒவ்வொரு விதத்தில் போராடி விட்டு அவர்கள் தங்களது இடங்களுக்கே திரும்பி சென்று விட்டனர்.

ஆனால் தமிழக முதல்வர் கலைஞர் மட்டும்தான் இதிலிருந்து வித்தியாசமாக யோசித்து சமத்துவபரம் என்ற உன்னத திட்டத்தை கொண்டு வந்து எல்லா ஜாதி மக்களையும் ஒரே இடத்தில் குடியமர்த்தி ஜாதி ஒழிக்க பாடுபடுகிறார்.

Photobucket

இதற்காக தமிழக முதல்வர் கலைஞருக்கு நோபல் பரிசு தர வேண்டும். ஆனால் தரமாட்டார்கள். காரணம் இவர் தமிழன் என்பதால்தான். ஏன். இந்தியாவில் தரப்படும் சாகித்ய அகடாமி விருதுக்கு கூட தகுதியானவர். கலைஞர் எழுதாத இலக்கியங்களா, தம்பிக்கு எழுதும் கடிதங்கள் புகழ்ப் பெற்றவை. திரைப்படங்களுக்கு எழுதிய வசனங்கள், திரைக்கதைகள் அறியா புகழ்ப் பெற்றவை. இதுபோல் வேறு யார் எழுதியிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட தலைவருக்கு அவ்விருது கூட வழங்கப்படவில்லை. காரணம் இவர் தமிழன். அதனாலேயே புறக்கணிக்கப்படுகிறது என்றார்" என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

யானையின் ஆசிர்வாதம் சிரிப்பு

0 comments: