"மருமகளை மாமியார் காலால் உதைப்பது வன்கொடுமை ஆகாது" என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறி இருக்கிறது. "மாமியார் என்னை காலால் எட்டி உதைத்தார். தன் மகனிடம் கூறி என்னை விவாகரத்து செய்து விடுவதாக மிரட்டினார். கணவரும் நாத்தனார்களும் கொடுமைப்படுத்தினர். அவர்களை தண்டிக்க வேண்டும்" என்று கீழ் நீதிமன்றத்தில் மருமகள் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், மாமியாருக்கும் கணவருக்கும் தண்டனை விதித்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கணவர் மேல் முறையீடு செய்தார்.
அதை நீதிபதிகள் எஸ்.பி. சின்ஹா, சிரியாக் ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வழங்கிய தீர்ப்பு
மருமகளை மாமியாரோ நாத்தனாரோ உதைப்பது, விவாகரத்து செய்து விடுவேன் என்று மிரட்டுவது, மனைவிக்கு எதிராக மகனிடம் குற்றம்சாட்டுவது, போன்ற செயல்களை வன்கொடுமையாக கருதி இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498-ஏ யின் கீழ் தண்டனை வழங்க முடியாது. அதே நேரம், திருமணத்தின் போது மணமக்களுக்கு பரிசாக அளிக்கப்பட்ட பொருட்களை மாமியார் எடுத்துக் கொண்டால் அது நம்பிக்கை மோசடியாக கருதப்பட்டு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 406 படி தண்டிக்கலாம்.
நன்றி
-பரந்தன்
Headline
Aug
6,
2009
மருமகளை மாமியார் அடிப்பது தவறில்லை - நீதிபதி எஸ்.பி. சின்ஹா
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
http://tamil498a.blogspot.com/2009/08/blog-post_06.html
Thanks for your comment and for your link sorry for the delay..
Post a Comment