புதுச்சேரி மாநிலத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.கவுக்கு துணை போனதாகக் கூறி முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 27 பேர் காங்கிரசிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நடந்து முடிந்த புதுச்சேரி தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் ஓட்டு வித்தியாசங்களை புதுச்சேரி காங்கிரஸ் ஒப்பிட்டு பார்த்தனர். இதில் முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமியின் தொகுதியான தட்டாஞ்சாவடி, கதிர்காமம், இந்திரா நகர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை விட பா.ம.க வேட்பாளர் அதிக ஓட்டு பெற்றிருந்தார்.
இந்த தொகுதிகள் முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமிக்கு ஆதரவான தொகுதிகள் என்பதால் காங்கிரஸ் கட்சிக்குத்தான் அதிக ஓட்டு விழுந்திருக்க வேண்டும். ஆனால் ரங்கசாமி மறைமுகமாக பாமகவை ஆதரித்து இருந்தால் மட்டுமே பா.ம.க அதிக ஓட்டு வாங்க முடியும் என்று புதுச்சேரி காங்கிரஸ் தலைமை கருதியதாக கூறப்படுகிறது.
Headline
Jun
25,
2009
புதுவை முன்னாள் முதல்வர் ரங்கசாமியை கட்சியில் இருந்து நீக்கம்?
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment