Headline

Feb
21,
2009

சுப்பிரமணியசாமியை கைது செய்ய வேண்டும்: திருமா

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமியை கைது செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் போலீசார் அத்து மீறி நுழைந்து வக்கீல்களை தாக்கியது திட்டமிட்ட செயல் இதற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். ரவுடிகள் நீதிமன்ற வளாகத்தில் நுழைந்து வன்முறை நிகழ்த்த தூண்டி விட்டது சுப்பிரமணியசாமிதான். அவரது ஆட்கள் வக்கீல்கள் வேடத்தில் நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டு வந்து கலவரம் செய்த சுப்பிரமணியசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார்.

0 comments: