Headline

பிரபாகரனுக்கு பில்லி சூனியம் செய்த சோதிடர் கைது!!

ghost Pictures, Images and Photos

அரசாங்கம் விரைவில் கவிழும் எனவும் பிரபாகரனுக்கு பில்லி சூனியம் செய்து, தானே கொலை செய்ததாகவும் அரச தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும் கூறிய பிரபல சோதிடர் ஒருவர் தற்போது நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று ஐ.தே.க. எம்.பியான தயாசிறி விஜயசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கூட்டுப்படைத் தலைமை அதிகாரி சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது:



"பிரபாகரனை கோத்தபாயவோ, சரத் பொன்சேகாவோ கொலை செய்யவில்லை. தானே பில்லி சூனியம் செய்து அவரை கொன்றதாகவும் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என்றும் அரச தொலைக்காட்சியின் ஊடாக ஆரூடம் கூறிய சோதிடருக்கே இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளது. சோதிடர் ஜனாதிபதியை கொலை செய்வதற்கு முயற்சி செய்தார் என்னும் குற்றச்சாட்டில் தடுப்பு உத்தரவின் பேரில் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


சோதிடம் கூறிய சோதிடர் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை இலங்கை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும். இந்த ஆட்சியில் தான் சோதிடர் ஒருவருக்குக் கூட சோதிடம் கூற முடியாதுள்ளது. கிரகங்கள் நன்றாக இருந்தால் தான் ஒருவர் நன்றாக வாழ முடியும். அந்த வகையில் விமல் வீரவன்சவின் கிரகம் நன்றாக இருக்கிறது. அதனால் அவருக்கு நாளைக்கே அமைச்சு பதவி கூடக் கிடைக்கலாம்.

அவருக்கு அன்று கிரகங்கள் சரியாக இல்லாததால் தான் அவரால் சீகிரியாவுக்குச் செல்ல முடியவில்லை. பேராதனை பூங்காவுக்குச் செல்ல முடியவில்லை. ஆனால், தற்போது எங்கும் சென்று வரலாம். யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு மாதம் கடந்து விட்ட போதிலும் தற்போதும் வீதிகள் மூடப்படுகின்றன. வீதியில் இரு பக்கங்களிலும் படை வீரர்கள் இருக்கின்றனர். பாதுகாப்பு வாகனங்கள் பின் தொடரவே செல்கின்றன. இவை யாவும் மக்களைத் துன்பப்படுத்த வைக்கும் செயற்பாடாகும் என்பது மட்டுமல்லாது இவை தவிர்க்கப்பட வேண்டிய விடயங்களுமாகும்."இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி
-வீரகேசரி
*net Photos

0 comments: