Headline

நடிகை த்ரிஷாவின் தொந்தரவு: ஓட்டல் ஊழியர்கள் கண்டிப்பு

Photobucket
நடிகை த்ரிஷா தெலுங்கு படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்று இருந்தார். அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்.

அவர் ரூமுக்குள் இருந்து டெலிவிஷன் சத்தமும் ஓ வென ஊளையிடும் சத்தமும் தொடர்ந்து கேட்பதாகவும் இது தங்களுக்கு தொந்தரவாக இருப்பதாகவும் பக்கத்து அறைகளில் வசித்தவர்கள் ஓட்டல் ஊழியர்களிடம் புகார் செய்தனர்.


இதனால் ஊழியர்கள் த்ரிஷாவை கண்டித்ததாக தகவல் வெளியானது.


இதுபற்றி த்ரிஷா,


’’நான் டெலிவிஷனில் ஆஸ்கார் விருது விழாவை பார்த்துக்கொண்டு இருந்தேன். ஏ.ஆர். ரகுமான் விருது வாங்கியதும் சந்தோஷத்தில் துள்ளி குதித்தேன்.


அப்போது ஓட்டல் ஊழியர்கள் கதவை தட்டினார்கள். பக்கத்து அறையில் இருப்பவர்களுக்கு தொல்லையாக இருப்பதால் டி.வி. சவுண்டை குறைக்கும் படி கூறினார்கள்’’ என்றார்.

2 comments:

Anonymous said...

இதுக்கு மேல கொறைக்க என்ன இருக்கு...

puduvaisiva said...

"இதுக்கு மேல கொறைக்க என்ன இருக்கு..."

:-))))))))))))))))

Thank for your vist Mr.Anonoy