Headline

வைகோவின் மாவீரர் உரை - வீடியோ

0 comments



தமிழ் இனத்தின் விடுதலைக்காக உயிர் நீத்த எம்முயிர் சகோதர சகோதரிகளுக்கான
அஞ்சலி இழை இது....!

தமிழீழ விடிவின் கனவுகளோடு கல்லறைக் கோவில்களில் துயிலும் எமது ஆண்டவர்களுக்கு
நீங்களும் அகல் ஏற்ற விரும்பினால் இந்த சுட்டியை சொடுக்குங்கள்!! வீரவணக்கம்!

november27.net

உங்கள் அஞ்சலிகளையும் வீரவணக்கங்களையும் இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

மாவீரர் தினத்திற்கான உங்களுடைய ஆக்கங்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

அன்புடன்
சுவாதி.

நன்றி
- தோழி சுவாதி


சென்ற ஆண்டு வைகோ அவர்கள் லண்டனில் ஆற்றிய எழுச்சிமிக்க மாவீரர் உரை










நாளை தமிழர்களுக்கு பாரிய ஆச்சரியம் ஒன்று ஏற்படும்

0 comments


கொல்லப்பட்டதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை உலகமே எதிர்பார்த்திருப்பதாக இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

நாளை தமிழர்களுக்கு பாரிய ஆச்சரியம் ஒன்று ஏற்படும் சாத்தியம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் கே பத்மநாதனுக்கு ஆதரவான குழுவுக்கும், எதிரான குழுவுக்கும் இடையில் உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வருடம் இந்த நாளை யுத்தத்தில் பலியான தலைவர்களை நினைவு கூரும் வகையில் விமரிசையாக அனுஷ்ட்டிக்க ஏற்கனவே கே. பத்மநாதனுக்கும், மற்றுமொரு தலைவரான நெடியவனுக்கும் இடையில் நோர்வேயில் இந்த உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், கே. பத்மநாதன் கைது செய்யப்பட்ட ஒருசில தினங்களில் கே. பி. க்கு எதிரான குழுவின் தலைவர் நெடியவன் தலைமறைவானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நாளை மறுநாள் விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் அனுஷ்ட்டிக்கப்படுகின்ற போதும், அவர்களின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளாரா இல்லையா என்பதில் குழப்பத்துடன் உள்ளது.

இதற்கு காரணம் கே. பத்மநாதன், பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்த போதும், நெடியவன் இதனை மறுதலித்து அவ்வாறான அறிவிப்பை வெளியிடுவதை தவிர்த்தார்.
இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டால் இயக்கத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் துச்சமாக்கப்படும் என்ற அடிப்படையிலேயே அது தவிர்க்கப்பட்டது.

இதன் காரணமாக பிரபாகரனின் பிறந்தநாள் வரையில் அதனை இரகசியமாக பேணி, நாளை அதனை வெளியிட நெடியவனும் அவரது குழுவினரும் திட்டமிட்டனர்.
இதன் பின்னர் புலிகளின் அடுத்த காய் நகர்த்தலை மேற்கொள்ள அவர்கள் தீர்மானித்திருந்தனர்.

அவர்கள் அனைவரும் பிரபாகரன் நாளை தமது முகத்தை காட்டுவார் எனவும், நாளை மறுநாள் மாவீரர் தின உரையை நிகழ்த்துவார் எனவும் நம்புகின்றனர்.

இதே நம்பிக்கையை தமிழகத்தின் அரசியல் தலைவர்களான நெடுமாறன் மற்றும் வைகோ ஆகியோர் கொண்டுள்ளமையும் இதற்கான காரணமாக கொள்ளலாம்.

தமிழீழத் தலைவர் நாளை மறுநாள் அதாவது 27ம் திகதி எங்கிருந்தேனும் தமது மாவீரர் நாள் உரையை நிகழ்த்துவார் என நெடுமாறன் நம்பிக்கை வெளியிட்டார்.
அது தமிழர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், தற்போது தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை தெளிவாக விளங்குகிறது.

அதற்கு காரணம் பிரபாகரன் இருக்கும் போது, ஒருவாரத்துக்கு முன்னதாக மாவீரர் தின ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும். இந்த நிலையில் இந்தவருடம் விடுதலைப்புலிகளுக்கு சார்பான இணையத்தளங்கள் மாவீரர் வாரம் தொடர்பான எந்த அறிவித்தலையும் விடுக்கவில்லை.

எனவே புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பது சந்தேகத்திற்கு இடமானதாக இருந்தாலும் ஒரு சில நம்பிக்கைகைகள் நிலவத்தான் செய்கின்றன.

இந்த நிலையில் உலகமே எதிர்பார்த்துள்ள நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்களில் யாரை யார் ஆச்சரரியப்படுத்துவர் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


நன்றி
- kavishan.blogspot.com


நாளை பிரபாகரன் பிறந்த நாள்: பெரும் ஆச்சரியம் நிகழும்
- நக்கீரன்


2010 ஜனவரி முதல் நிலையான செல் போன் எண்கள் ரூ 19 - ல்

2 comments

Nice titties; cell phone Pictures, Images and Photos
செல்போன் வாடிக்கையாளர்கள் அடிக்கடி வெவ்வேறு நிறுவனங்களுக்கு மாறி வருகிறார்கள். இதனால் மொபைல் எண்ணையும் மாற்றும் நிலமை இருந்தது. இனி அவர்களுக்கு அக்கவலை இல்லை. எந்த செல்போன் நிறுவனத்துக்கு மாறினாலும் ஒரே டெலிபோன் எண்ணை பயன்படுத்தும் திட்டம் விரைவில் வரவிருக்கிறது.


செல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தகவல் தொடர்பு துறையில் அரசு நிறுவனம், பி.எஸ்.என்.எல். தவிர தனியார் நிறுவனங்கள் ஏர்டெல், ரிலையன்ஸ், வோடாபோன், ஏர்செல் போன்ற நிறுவனங்கள் உள்ளன.


ஒரு நிறுவனத்தில் செல்போன் சந்தாதாரராக உள்ள ஒருவர் அதில் இருந்து விலகிதான் விரும்பும் வேறு நிறுவனத்துக்கு மாறி போக வேண்டும் என்றால் அந்த எண்ணை ரத்து செய்தவிட்டு அதன் பிறகு அந்த நிறுவனத்தில் புதிய எண் பெறவேண்டும். இந்த முறை தற்போது நடைமுறையில் உள்ளது.



ஆனால் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் எந்த செல் நிறுவனத்திலும் சேர்ந்து பயன்பெற விரும்பினால் அதற்கு தடை விதிக்க கூடாது. அவர்கள் ஏற்கனவே வைத்துள்ள போன் எண்ணையே பயன்படுத்தியவாறு வேறு நிறுவனத்துக்கு மாறிக் கொள்ளலாம் என மத்திய தகவல் தொடர்பு ஆணையம் (டிராய்) அறிவித்துள்ளது.

எந்த மொபைல் போன் ஆபரேட்டர்களிடமும் மாறிக்கொள்ளலாம். இதற்கு ரூ.19 மட்டும் கட்டணம் நிர்ணயித்துள்ளது. ஒரு வாடிக்கையாளர் தான் பயன்படுத்தும் அதே செல்போன் எண்ணை வேறு நிறுவனத்துக்கு மாறினாலும் பயன்படுத்தும் வசதி 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அறிமுகம் செய்யப்படுகிறது.

ஏர்டெல் நிறுவனம் 60 சதவீத ரோமிங் கட்டணத்தை குறைத்துள்ளது. 115 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட ஏர்டெல் ரோமிங் சமயத்தில் செல்போன் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் டர்போ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல் அனைத்து ரோமிங் அழைப்புகளுக்கும் நிமிடத்துக்கு 60 காசு வீதமும் வேறு நெட்ஒர்க் எண்களை தொடர்பு கொள்ள 80 காசு வீதமும் வசூலிக்கப்படும் என்று தலைமை செயல் அதிகாரி ராஜீவ் ராஜ்கோபால் தெரிவித்தார்.

செல்லில் வந்த வில்லங்கம் - சிரிப்பு


நன்றி
- சங்கமம் லைவ் செய்திகள்


கலைஞர் கருணாநிதியை கண்டித்து கண்டனச் சுவரொட்டிகள்

0 comments



விடுதலைப் புலிகள் தொடர்பாக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்களுக்குக் கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் சில பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விடுதலைப் புலிகள் இயக்கம் அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படவில்லை. அதனால்தான் இன்று நாடு நாடாக இலங்கைத் தமிழர்கள் அலையும் நிலை ஏற்பட்டு விட்டது என்று முதல்வர் கருணாநிதி, யாருக்குத் தெரியும் இந்த மெளன வலி என்ற தலைப்பில் முரசொலியில் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் தமிழின உணர்வாளர்கள் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், ஈழ விடுதலைப் போரை கொச்சைப்படுத்தும் கலைஞரே, உங்கள் அறிக்கை மெளனத்தின் வலியா, துரோகத்தின் மொழியா என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

தமிழின உணர்வாளர்கள், மதுரை என்ற பெயரில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போஸ்டரில் பெரியார் படமும் இடம் பெற்றுள்ளது.

இந்தப் போஸ்டர்களை பெரியார் தி.க. அல்லது நாம் தமிழர் அமைப்பினர் ஒட்டியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த போஸ்டர்களை போலீஸார் உடனடியாக அகற்றி விட்டனர்.

நன்றி
- தட்ஸ்தமிழ்


கைய புடிச்சி இழுத்தியா


சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்தின் முக்கிய அறிவிப்பு !

0 comments


வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2008-ம் ஆண்டு தங்கள் பதிவை புதுப்பிக்கத் தவறிய சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு சிறப்பு சலுகையை அரசு அறிவித்துள்ளது.

ஜனவரி மாதம் 2008 முதல் டிசம்பர் மாதம் 2008 வரை புதுப்பிக்கத் தவறிய சென்னை மாவட்ட பதிவுதாரர்கள் இப்போது புதுப்பித்துக் கொள்ளலாம்.

புதுப்பித்துக் கொள்ள விரும்புபவர்கள், தாங்கள் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சென்று புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

இதற்கான கடைசி தேதி நவம்பர் 23 ஆகும். கடைசி தேதிக்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் திரு
த. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.


சென்னை வேலைவாய்ப்பு அலுவலக தொடர்புக்கு

அயல்நாட்டு வேலைவாய்ப்புகளை பற்றி தெரிந்து கொள்ள

(a+b)2 சிரிப்பு


பறவைகள் விரும்பும் நவீன செல் போன் டவர்கள்

0 comments

Blending in...or not...Tempe cell phone tower Pictures, Images and Photos
இயற்கையுடன் இனைந்து வாழ விரும்பும் அயல்நாடுகளில் இன்று செல் போன் டவர்கள் அனைத்தையும் அழகிய மரங்கள் வடிவில் அமைத்து வருகிறார்கள் இதனால் பார்வையாளர்களின் மனதை இந்த வடிவமைப்பு வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும் பறவைகளும் ஓய்வுக்காக இதில் விரும்பி அமர்கின்றன.



வடிவேலின் செல் சிரிப்பு


ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் புதிய கண்டு பிடிப்பு !

0 comments


இலங்கையில் உள்ள முகாம்கள், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களைவிட அனைத்து வசதிகளுடன் சிறப்பாக உள்ளன. இலங்கைத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட இந்திய அரசின் முயற்சிகளினால்தான், இவை அனைத்தும் அரங்கேறியுள்ளன.

மேலும் முழு செய்தியை படிக்க

தமிழகத்தில் உள்ள முகாம்களை விட இலங்கையில் உள்ள அகதி முகாம்கள் சிறப்பாக உள்ளன: EVKS இளங்கோவன்


நன்றி
- நக்கீரன்

வண்டு முருகன் சிரிப்பு


''ஈழம்: மௌனத்தின் வலி'' - புத்தகம் வெளியீட்டின் - புகைப்படம்

0 comments

mermaid causing storm Pictures, Images and Photos

''ஈழம்: மௌனத்தின் வலி'' என்ற புத்தகம், சென்னை எழும்பூர் காசா மேஜர் சாலையில் உள்ள டான் போஸ்கோ அரங்கில் சனிக்கிழமை மாலை வெளியிடப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்



நன்றி
- சிவாஜி டிவி


அர்ச்சகரின் காம லீலை சிடியால் காஞ்சிபுரத்தில் பரபரப்பு !

0 comments

CD=03 Pictures, Images and Photos
காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்தவர் தேவநாதன்.

6 பெண்களுடன் கோவில் கருவறையில் இவர் காமலீலைகளை அரங்கேற்றியது தெரியவந்தபோது பெரும் அதிர்ச்சி பரவியது.


தேவநாதன் தனது செல்போன் மூலம் படமும் பிடித்துள்ளார். செல்போன் பழுதானபோது அதை வெளியில் ரிப்பேர் செய்யக் கொடுத்தபோது அந்தக் கடைக்காரர் இந்தக் காட்சிகளைப் பார்த்து விட்டு பதிவு செய்து வெளியே விட்டு விட்டார். இதன் மூலமே தேவநாதனின் அசிங்கம் அம்பலத்திற்கு வந்தது.

தற்போது தேவநாதனின் அசிங்கம் அடங்கிய காட்சிகள் சிடிக்களாக போட்டு படு சூடாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்த சிடிக்கள் படு வேகமாக விற்பனையாகிறதாம். ஒரு சிடிக்கு ரூ. 100 விலை வைத்து விற்று வருகின்றனர்.

மேலும் முழு செய்தியை படிக்க

நன்றி
- தட்ஸ்தமிழ்


குழைந்தைகள் தினமும் மறந்து போன நேருவின் கொள்கையும்

0 comments





இந்திய அயலுறவுக் கொள்கை தவறான பாதையில் செல்கின்றது

நெடுமாறன் பேட்டி

தென்னாபிரிக்காவில் நிறவெறி அரசு மற்ற கறுப்பின மக்களை ஒடுக்கியபோது தென்னாபிரிக்காவை உலக நாடுகள் புறக்கணிப்புச் செய்யவேண்டும் என்பதற்காக ஐ.நா. பேரவையில் தீர்மானம் கொண்டுவரச் செய்து நிறைவேற்றி,தென்னாபிரிக்க நிறவெறி அரசை ஒதுக்கி வைக்கும் கொள்கையைக் கடைபிடித்து நேரு வெற்றியும் பெற்றார்.

ஆக, உலகெங்கும் அடிமைப்பட்ட மக்கள் எங்கெங்கே சுதந்திரம் பெறப் போராடினார்களோ அவர்களுக்கெல்லாம் நேரு பகிரங்கமாக ஆதரவு கொடுத்தார். ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக ஆதரவு கொடுத்தார் என்பதுதான் முக்கியமானது. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைக்கு அடிநாதமாகவும் அது இருந்தது.

உலகெங்கும் அடிமைப்பட்ட மக்கள் விடுதலை பெறவேண்டும். அதற்கு இந்தியா உதவவேண்டுமென்பதும் அவரது கொள்கையாக இருந்தது

அதனால்தான் அதன் பின்னால் வந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியினாலும்,ஜனதாக் கட்சி ஆட்சியினாலும் பாரதீய ஜனதா ஆட்சியாயிருந்தாலும் அந்தக் கொள்கையிலிருந்து எவராலும் விலகிச் செல்ல முற்படவில்லை. ஆங்காங்கே சிறு சிறு மாற்றங்கள் செய்திருக்கலாமே ஒழிய அடிப்படையில் அணிசேராக் கொள்கையில் உருவாக்கப்பட்ட இந்திய வெளியுறவுக் கொள்கையிலிருந்து எந்தக் கட்சியும் விலகிச் செல்ல முடியவில்லை.

அதேபோல ஸ்பெயின் நாட்டில் பிராங்கோ என்ற சர்வாதிகாரியை எதிர்த்து அந்த நாட்டு இளைஞர்கள் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்குப் போராட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்திற்கு உதவ வேண்டும் என்று அன்றைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்தது.

ஐரோப்பாவில், பிரிட்டனில் ஏராளமான இந்திய இளைஞர்கள் அந்தப் பேராட்டத்தில் உதவி செய்வதற்காகத் தங்கள் பெயரை எல்லாம் பதிவு செய்தார்கள். அதிலே ஒருவர் இந்திராகாந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

16 வயது மாணவியாக இந்திராகாந்தி இருந்தபோது படையில் சேர்ந்து ஸ்பெயினில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துகிற போரில் உதவுவதற்கு முன் வந்தார். ஜவஹர்லால் நேருவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தனது தூதராக அனுப்பியது. அவர் ஸ்பெயின் நாட்டின் எல்லையில் போய் அங்கு திரண்டிருந்த பல்வேறு நாட்டுத் தொண்டர்களிடம் பேசி உற்சாகப்படுத்தி ஜனநாயகப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தார்.

இப்படி காங்கிரஸ் கட்சி ஆரம்பத்திலிருந்தே வெளியுறவுக் கொள்கையிலே தீவிரமாக கவனம் செலுத்தியது. அது படிப்படியாக வளர்ந்து நேரு அவர்களே பிரதமராகப் பொறுப்பேற்றவுடன் அதிகாரப்பூர்வமாக அதை அமுலுக்குக் கொண்டுவரமுடிந்தது.

ஆனால், ஜவகர்லால் நேருவின் பேரன் ராஜீவ்காந்தி 1985 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்பு அவர் தன்னுடைய பாட்டனாரும் தன் தாயாரும் எத்தகைய வெளிவிவகாரக் கொள்கையைக் கடைப்பிடித்தார்கள் என்பதை உணரவில்லை.

அதிகாரிகள் அவரை தவறாக வழிநடத்தினார்கள் என்பதுதான் உண்மை. அன்றைக்கு இந்தியாவின் தூதுவராக இருந்த தீட்சித், இந்தியாவின் வெளிவிவகாரத்துறைச் செயலாளராக இருந்த பண்டாரி போன்ற அதிகாரிகள் அவரை வழிமாற்றி நடத்தினார்கள்.

அப்பொழுதுதான் முதன்முதலாக நேரு அமைத்த பாதையில் இருந்து இந்திய அரசு விலகிச் செல்லத் தொடங்கியது. அப்பொழுதுதான் உலகம் முழுவதும் அடிமைப்பட்ட மக்கள் எங்கு போராடுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிக்கிற இந்தியாவின் கொள்கையிலிருந்து தலைகீழான மாற்றம் ஏற்பட்டது. இலங்கையில் சுதந்திரம் பெறுவதற்காகப் போராடிக் கொண்டிருந்த ஈழத்தமிழர்களை ஒடுக்குவதற்கு சுதந்திர இந்தியாவின் படை அங்கு அனுப்பப்பட்டது.

இந்திய வரலாற்றில் கறைபடிவதற்கு காரணமானவர் ராஜீவ்காந்திதான். வேறுயாருமல்லர். அவருடைய தாயாரும் அவருடைய பாட்டனாரும் கடைப்பிடித்து வந்த கொள்கைக்கு நேர்மாறான திசையில் ராஜீவ்காந்தி சென்றார். அதில் வெற்றிபெறவில்லை. படுதோல்வியடைந்தார்.


நெடுமாறன் பேட்டி முழுமையாக படிக்க

நன்றி
-yarl.com

லா படிக்க விரும்பும் சிறுவன் - சிரிப்பு


திரை துறையில் பணியாற்ற விருப்பமா? அறிய வாய்ப்பு

0 comments

Future Film Director Pictures, Images and Photos
இத் தளம் வெள்ளி திரை மற்றும் சின்ன திரைக்கான நடிகர், நடிகை, இயக்குனர், இனை இயக்குனர் வில்லன் நடிகர் கதை ஆசிரியர், கேமராமேன், ஒளிபதிவு துறை,நடன அமைப்பாளர், இசை அமைப்பாளர், கீ போர்டு வாசிப்பவர்கள், டப்பிங் குரல் கொடுபவர்கள், பாடல் ஆசிரியர், பின்னணி பாடகர் ,என அனைத்து துறைகளுக்கான விபரங்களை பதிவதற்கு வாய்ப்புக்ளையும் தருகிறது.
Camera Pictures, Images and Photos
உங்களுக்கு எந்த துறையில் தனி தன்மை உள்ளதோ அந்த துறையை தேர்வு செய்து உங்கள பற்றிய அனைத்து விபரங்களையும் இத் தளத்தில் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.

எனவே புதிய திரை படம் அல்லது சின்ன திரைக்குள் நுழைய இது ஒரு அறிய வாய்ப்பாக அமைகிறது.

1. தளத்திற்கு செல்ல

2. துறைகளின் விபரங்களுக்கு

3. உங்களைப்பற்றி விபரங்களை பதிவு செய்ய

காதநாயகன் தேர்வு சிரிப்பு


எளிய முறையில் தொப்பையை குறைக்க யோகா தெரப்பி - வீடியோ

0 comments

belly Pictures, Images and Photos

முன்பு எல்லாம் உடல் உழைப்புக்கு என்று தினம் பல வேலைகள் செய்தனர் இதனால் அவர்கள் உடலும் மனமும் மிக ஆரோக்கியமாக இருந்தன.

ஆனால் இன்று நாகரீகத்தின் மாற்றத்தால் வீட்டு வேலைகளில் பெரும் பகுதிகளை இயந்திர மையமானது போக்குவரத்துக்கு பயன் பட்ட மிதிவண்டிகள் மறைந்து வாகன மையமானது.

பள்ளிகளில் விளையாடுவதற்கு என்று ஒதுக்கியநேரம் என்று பல பள்ளிகளில் இல்லை ஏன் பல பள்ளிகளில் விளையாட்டு திடலே இல்லாத நிலை உள்ளது.

இதற்கு அடுத்த நிலை உணவு முறைகளில் மாற்றங்களின் காரணமாக இளம் வயதினிலே பலருக்கு இன்று தொப்பை பிரச்சனையை எதிர் கொண்டுள்ளனர்.

கீழ் உள்ள விடியோவை நன்கு புரிந்து கொண்டு தினம் நீங்கள் செய்வதன் மூலம் படி படியாக அழகிய மற்றும் இளமையான தோற்றம் பெறலாம்.

நம் நாட்டு யோக கலையை (யோகா ஆசிரியை) சின்டி நன்கு தேர்ச்சி பெற்றவர்







Just for Fun Belly Dance


எதிர்ப்புகளை கண்டு இலங்கைக்கே சென்றுவிட்டார் ராஜபக்சே தங்கை

0 comments


போலீசாருக்கும், புதிய தமிழகம் கட்சியினருக்கும் வாக்குவாதம்-தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன் பிறகு 30 பேரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.

திருச்சியில் புதிய தமிழகம் கட்சியினர் எதிர்ப்பால் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு நிருபமா ராஜபக்சே செல்ல வில்லை. திருச்சி விமான நிலையத்தில் விமானம் மூலம் இலங்கை செல்ல புறப்பட்டார்.

மேலும் முழு செய்தியை படிக்க

நன்றி
- நக்கீரன்


"இந்த பையல (கமல்) நம்பி எந்த ரகசியமும் சொல்ல கூடாது" - சிவாஜியின் பேச்சு - வீடியோ.

0 comments



வெள்ளி திரை மற்றும் சின்ன திரை நடிகரான மோகன்ராம் அவர்கள் தமிழ் திரை பட வரலாற்று முன்னோடிகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அஞ்சல் தலை வெளீயிட்டு நிகழ்ச்சியின் போது நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் கமலஹாசனுக்கு சொல்லிய ரகசியத்தை அதை கமல் மேடையில் அனைவருக்கும் கூறியாதல் ஏற்பட்ட சுவையான மற்றும் பசுமையான வீடியோ பதிவு.




இதன் தொடர் வீடியோ பகுதி - 3

வீடியோ பகுதி - 4

அபூர்வ சகோதர்கள் தீம் இசை


மிஸ்ட் கால் கொடுத்தவரை கண்டு பிடிப்பது எப்படி?

8 comments

One Missed Call Pictures, Images and Photos

உங்கள் செல்லுக்கு அறிமுகம் இல்லாத அழைப்பு வந்து சில நேரங்களில் தொல்லை கொடுக்கும் அப்பொழுது அந்த எண் எங்கு இருந்து வந்தது என்று கண்டு பிடிப்பது எப்படி?

What?! Pictures, Images and Photos

பயனுள்ள சில தளங்களின் முகவரி

http://trace.bharatiyamobile.com/

http://informationmadness.com/cms/missed-call-finder.html

http://www.hacktrix.com/trace-mobile-phone-location-and-service-provider-details/

http://en.wikipedia.org/wiki/Mobile_telephone_numbering_in_India

அயல் நாடுகளுக்கு

http://www.tp2location.com/

பல நாள் திருடன் செல்லால் (ஒரு நாள் )அகப்படுவான் + 18


கலைஞருக்கு நோபல் பரிசு கிடைக்க தடையாக இருப்பது - துரைமுருகன்

0 comments

Kalaignar Pictures, Images and Photos

இன்று ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் அமைந்த சந்திரபுரத்தில் 1 கோடியே 98 லட்ச ரூபாய் செலவில் நூறு வீடுகள் கொண்ட சமத்துவப்புரத்தை தளபதி மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதன் பின் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன்:

"ஜாதிகளை ஒழிக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூட தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு ஆலய பிரவேசம் செய்தார். இப்படி பல தலைவர்கள் ஜாதியை ஒழிக்க வேண்டும் என ஒவ்வொரு விதத்தில் போராடி விட்டு அவர்கள் தங்களது இடங்களுக்கே திரும்பி சென்று விட்டனர்.

ஆனால் தமிழக முதல்வர் கலைஞர் மட்டும்தான் இதிலிருந்து வித்தியாசமாக யோசித்து சமத்துவபரம் என்ற உன்னத திட்டத்தை கொண்டு வந்து எல்லா ஜாதி மக்களையும் ஒரே இடத்தில் குடியமர்த்தி ஜாதி ஒழிக்க பாடுபடுகிறார்.

Photobucket

இதற்காக தமிழக முதல்வர் கலைஞருக்கு நோபல் பரிசு தர வேண்டும். ஆனால் தரமாட்டார்கள். காரணம் இவர் தமிழன் என்பதால்தான். ஏன். இந்தியாவில் தரப்படும் சாகித்ய அகடாமி விருதுக்கு கூட தகுதியானவர். கலைஞர் எழுதாத இலக்கியங்களா, தம்பிக்கு எழுதும் கடிதங்கள் புகழ்ப் பெற்றவை. திரைப்படங்களுக்கு எழுதிய வசனங்கள், திரைக்கதைகள் அறியா புகழ்ப் பெற்றவை. இதுபோல் வேறு யார் எழுதியிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட தலைவருக்கு அவ்விருது கூட வழங்கப்படவில்லை. காரணம் இவர் தமிழன். அதனாலேயே புறக்கணிக்கப்படுகிறது என்றார்" என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

யானையின் ஆசிர்வாதம் சிரிப்பு


சிதம்பரத்தின் மீது ஷூ வீசியவருக்கு "லயன் ஆப் டெல்லி" - விருது !

0 comments



டெல்லியில் இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்கள் மீது காங்கிரஸார் நடத்திய வெறியாட்டத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது ஷூ வீசி எதிர்ப்பைக் காட்டிய சீக்கிய பத்திரிக்கையாளர் ஜர்னைல் சிங்குக்கு கனடாவில் சீக்கியர்கள் அமைப்பு விருதளித்து கெளரவித்துள்ளது.

டெல்லியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது ப.சிதம்பரம் மீது தனது இரண்டு ஷூக்களையும் கழற்றி அடுத்தடுத்து வீசினார் ஜர்னைல் சிங். இருப்பினும் அது ப.சிதம்பரம் மீது படவில்லை.


இந்த சம்பவம் நடந்தபோது அவர் டைனிக் ஜாக்ரன் என்ற இந்தி நாளிதழில் பணியாற்றி வந்தார். இச்சம்பவத்திற்குப் பின்னர் அவர் அதிலிருந்து விலகி விட்டார். தற்போது ஐ அக்யூஸ்ட் என்ற நூலை ஜர்னைல் சிங் எழுதியுள்ளார்.

ப.சிதம்பரம் சம்பவத்திற்குப் பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார் ஜர்னைல் சிங்.

சமீபத்தில் அவர் கனடா சென்றிருந்தார். அங்கு நடந்த சீக்கியர்கள் குறித்த திரைப்படங்கள் கலந்து கொண்ட வீல்ஸ் திரைப்பட விழாவின்போது, ஜர்னைல் சிங்குக்கு லயன் ஆப் டெல்லி என்ற விருதினை சீக்கியர்கள் வழங்கிக் கெளரவித்தனர்.

இதுகுறித்து ஜர்னைல் சிங் கூறுகையில், தொடர்ந்து பல கூட்டங்களில் பங்கேற்று வருகிறேன். சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் 25வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி வான்கூவரில் நடந்த மெழுகுவர்த்தி நிகழ்ச்சியில் தலைமையேற்றேன்.

இந்தூர், லூதியானா, சஹரன்பூர், டெல்லியில் நடந்த கூட்டங்களில் நீதி கேட்டுப் பேசினேன்.

எனக்கு அரசியல் ஆர்வம் கிடையாது. அதற்காக நான் இவ்வாறு பேசி வரவில்லை. 1984ம் ஆண்டு நடந்த சம்பவத்திற்கு இதுவரை சீக்கியர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அதற்காகத்தான் குரல் கொடுத்து வருகிறேன்.

இந்த அநாகரீகச் சம்பவத்திற்குக் காரணமான குற்றவாளிகளை குற்றம் சாட்டி தற்போது நூல் எழுதியுள்ளேன். அரசியல் ரீதியாக அவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் மீதான வழக்குகளை விட்டு விடக் கூடாது. சட்ட ரீதியாக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார் சிங்.

நன்றி
- தட்ஸ்தமிழ்

சார்லி சாப்ளின் ஷூ சாப்பிடும் சிரிப்பு


அமிதாப்பின் "பா" இந்த ஆங்கில பட தழுவலா? - வீடியோ

0 comments

Hindi movie

டிசம்பர் மாதத்தில் வெளிவரவிருக்கும் 'பா' படத்தில் அமிதாப் மன வளர்ச்சி குன்றிய நபராக படத்தில் நடிக்கிறார். இது வரை அவர் வாழ்நாளில் இது போன்ற உருவ மாறுபாடுடைய தோற்றத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. இதற்காக பல மணிநேரம் ஒப்பனைக்கு செலவிடுகிறார.

இதனால் பாலிவூட்டின் அமிதாப் பச்சனும், அபிஷேக்பச்சனும்இணைந்து கலக்கும் இந்த புதிய திரைஅனுபவம், இதற்குமுன் இந்தியத் திரைப்படவரலாற்றில் கண்டிருக்கமுடியாதது எனச் சொல்கின்றார்கள்.


benjamin button Pictures, Images and Photos

பெஜ்ஜமின் பூடோன் பட டிரைலர்


பெஜ்ஜமின் பூடோன் பட ஒப்பனை


Benjamin Pictures, Images and Photos

Benjamin Button Pictures, Images and Photos


உங்கள் பிரியமானவர்களின் புகைப்படத்துடன் 2010 நாள்காட்டி

0 comments

gif- happy new year Pictures, Images and Photos

2010 வருட ஆங்கில வருட பிறப்புக்கு உங்கள் மனம் கவர்ந்தவர்களின் புகைப்படத்துடன் இனைத்து புதிய அழகிய மாத நாள்காட்டி அமைப்பது எப்படி என்பதே இப் பதிவு

Miss July Pictures, Images and Photos

சில தளங்களின் முகவரி

1.http://www.calendarlabs.com/photo-calendar.php

2.http://www.makephotocalendar.com/

3.http://www.freephotocalendar.net/free-printable-photo-calendar.php

4.http://bighugelabs.com/calendar.php

அதிக மனங்களை கவர்ந்த ஆபாவின் பாடல்



இவர்களின் இசையின் சுகம்


சிக்கன் 65 உடலுக்கு கேடு உஷார்......

1 comments


மாலை நேரங்களில் உணவுக்காக மக்கள் அதிகம் கூடும் இடமாக இன்று நடை பாதை கடைகளில் முக்கிய பங்கு தறுவது துரித உணவு கடைகள் முன்பு நகர் பகுதியில் மட்டும் காணப்பட்ட இந்த கடைகள் இன்று அனைத்து சிறு கிராமங்களில் கூட இந்த கடைகள் வந்து விட்டன.

சிக்கன் 65 சாப்பிடுவதல் ஏற்படும் கேடுகளும் பக்க விளைவுகளும்
குமுதம் இதழில் வந்த மறு மீள் பதிவு.

ராகவனுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போனது. காரணம் ராகவனிடம் மது, புகை என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பிறகு எப்படி கேன்சர்?

தலையைப் பிய்த்துக்கொண்ட மருத்துவர்கள் கடைசியாக அவரது உணவுப் பழக்கத்தை ஆராய்ந்தபோதுதான் உண்மை தெரியவந்தது. அசைவப்பிரியரான ராகவன் தினமும் சாப்பாட்டில் சிக்கன் 65 இல்லாமல் சாப்பிடவே மாட்டாராம். அதுவும் செக்கச் சிவந்த நிலையில் மொறு மொறுவென்று இருக்கும் சிக்கன் 65ஐத்தான் விரும்பிச் சாப்பிடுவாராம்.

cancer Pictures, Images and Photos


அதுதான் அவரது கேன்சருக்குக் காரணமாம். எப்படி? பளிச்சென்று தூக்கலாகத் தெரிவதற்காக சிக்கனுடன் சேர்க்கப்படும் அந்த சிவப்பு நிற கெமிக்கல் பவுடர்தான் அந்த கேன்சருக்கு முழுக்காரணம். இந்த கெமிக்கல் கலந்த சிக்கன் 65 சாப்பிடுவதால் வயிற்றில் கேன்சர், சிறுநீரகக் கோளாறு. மரபணுக்களில் பாதிப்பு போன்ற நோய்கள் உண்டாவதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

உணவுப் பொருட்களில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள் பற்றியும், பயன்படுத்தக்கூடாத நிறங்கள் பற்றியும் நெல்லை மாநகராட்சியின் உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் பேசும்போது : உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள், பயன்படுத்தக்கூடாத செயற்கை நிறங்கள் என உண்டு. இந்தியாவில் 8 வகையான செயற்கை நிறங்களை மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறங்களும் குறிப்பிட்ட அளவு. அதாவது 10 கிலோ உணவுப் பொருளுக்கு 1 கிராம் மட்டுமே சேர்க்க அனுமதி.

ஆனால் இதை யாரும் கடைப்பிடிப்பதில்லை. அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் செயற்கை நிறங்களைச் சேர்த்தால் உடலுக்குக் கேடுதான். எடுத்துக்காட்டாக, உணவில் சிவப்பு நிறம் கொடுக்க பயன்படுத்தப்படும் எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோய் (goItre) வரும். இந்த செயற்கை நிறங்களும் இனிப்பு வகைகளில் மட்டுமே சேர்க்க அனுமதி. கார வகையான உணவுகளில் சேர்க்க அனுமதி கிடையாது. பொன்சியூ4.ஆர்., எரித்ரோசின் பயன்படுத்தினால் சிவப்பு நிறம் கிடைக்கும். பிரில்லியண்ட் புளூ, இண்டிகோ கார்மைன் பயன்படுத்தினால் ஊதா கலர் கிடைக்கும்.

இந்த மாதிரியாக கிடைக்கக் கூடிய எட்டு வகையான கலர்களை ஐஸ்கிரீம் ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என ஏழு வகையான உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி. கார வகையான உணவுப் பொருட்களில் செயற்கை வண்ணங்களை கண்டிப்பாகச் சேர்க்கக்கூடாது.
Chicken butt Pictures, Images and Photos
ஆனால் நமது மக்களின் மனதில் உணவைவிட உணவின் கலர்தான் பளிச்சென்று பதிந்து இருக்கிறது. சிக்கன் 65 என்றால் சிவப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது சிக்கன் 65 என்ற முடிவில் மக்கள் இருக்கிறார்கள். மக்களின் மனதிற்கேற்ப வியாபாரிகளும் சிக்கன் 65 நிறத்தைக் கூட்டி, ஆபத்தை அறியாமலேயே வியாபாரம் செய்கின்றனர். சிக்கன் 65-ல் செயற்கை வண்ணங்களைச் சேர்ப்பதே தவறு. அதிலும் அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்களை அளவுக்கு அதிகமாக சேர்க்கின்றனர்.

எடுத்துக்காட்டாக சூடான் டை, மெட்டானில் எல்லோ கெமிக்கல்களைச் சேர்த்து துணிகளுக்கு சாயம் ஏற்றுவார்கள். இன்று இதனை சிக்கன் 65யுடன் சேர்த்து விடுகின்றனர். இப்படி சேர்ப்பதால் சிக்கன் 65 ரெட் கலரில் பளிச்சென்று தூக்கலாகத் தெரியும். இதைச் சாப்பிடுவதால் குடல்கேன்சர், சிறுநீரகக் கோளாறு, மரபணுக்களில் கோளாறு என கொடிய நோய்களை உண்டாக்கி விடுகிறது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சூடான் டையை உணவில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர்.

செயற்கை நிறம் கொடுக்கக் கூடிய சூடான் டை கலந்த உணவை எலிகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் எலிகளின் சிறுநீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகியதாம். இப்படி உணவுப் பொருளில் கலப்படம் செய்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் உணவு தடைச்சட்டத்தின் பிடியிலிருந்தும் ஈஸியாகத் தப்பி விடுகின்றனர்.

உணவுக் கலப்பட வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் காந்திமதிநாதன் கூறும்போது: ஃபுட்கலர்ஸ் விற்பவர்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அந்த ஃபுட்கலர்ஸ் உணவுப் பொருட்களில் கலந்து உணவுப் பொருட்களுக்கு நிறத்தைக் கொடுத்த பின்புதான் அது குற்றமாகிறது. கலப்பட உணவுப் பொருட்களின் மீது வழக்குத் தொடரவேண்டுமானால் முதலில் தயாரித்து வைத்த உணவுப் பொருட்களை மூன்று பாகங்களாக சாம்பிள் எடுக்க வேண்டும்.

முதல் பாகத்தை உடனடியாக கெமிக்கல் லேபுக்கு அனுப்பி கலப்படத்தை உறுதி செய்து, ரிப்போர்ட் வாங்கி அந்த அடிப்படையில் வியாபாரியின் மீது வழக்குத் தொடரவேண்டும். மீதமுள்ள இரண்டு பாகமும் சுகாதார அதிகாரியின் கட்டுப்பாட்டில் வைத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது சுகாதார அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ள உணவுப் பொருளின் இரண்டு பாகங்களை நீதிமன்றம் மூலம் மத்திய பகுப்பாய்வுக் கூடத்திடம் ரிசல்ட் கேட்கவேண்டும். அந்தச் சூழ்நிலையில் கண்டிப்பாக உணவுப் பொருள் கெட்டுப்போய்த்தான் இருக்கும். மத்திய பகுப்பாய்வுக் கூடத்தால் சரியான ரிசல்ட்டை கொடுக்க முடியாது. இதனால் வழக்கு நிற்காமல் அடிபட்டு விடும்.

எடுத்துக்காட்டாக சூடான்டையால் நிறம் ஊட்டப்பட்ட சிக்கன் 65ஐ சாம்பிள் எடுத்து கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் என்ற கெமிக்கலை சிக்கன்-65 மீது ஊற்றி வைப்பார்கள். அந்த கெமிக்கல் சிக்கன் 65யின் முழுப்பகுதியையும் அடைய வாய்ப்புக் குறைவு. அப்படி கெமிக்கல் படாத இடம் முதலில் கெட்டுப்போய் மொத்த சிக்கன் 65ஐயும் கெட்டுப்போகச் செய்து விடுகிறது. அதனால் அதிலிருந்து சரியான ரிசல்ட் எடுக்க முடியாமல் போய் விடுகிறது. உணவுக் கலப்பட சட்டத்தைப் பொறுத்தமட்டில் வியாபாரிகளுக்கும், சில பங்களிப்பு இருப்பதால் வியாபாரிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர்' என்கிறார்.

அதனால் தேவையற்ற கெமிக்கல் கலர் பொடிகள் சேர்த்த சிக்கன்களைத் தவிர்ப்பது ஒன்றே இதற்குத் தீர்வு?

doctor Pictures, Images and Photos

இது குறித்து சென்னையைச் சேர்ந்த பிரபல குடல்நோய் நிபுணர் டாக்டர் சதீஷிடம் கேட்டபோது: ``சிக்கன் 65ல் சேர்க்கப்படும் நிறத்தால் உடனடி பாதிப்பாக நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பால் இரைப்பை அழற்சி ஏற்படும். நீண்ட நாட்கள் அதைச் சாப்பிட்டு வந்தால் பெருங்குடலில் கேன்சர், சிறுநீரகப் பாதிப்பு உண்டாகும். தொடர்ந்து சிறுநீரகத்திலிருந்து ரசாயன நச்சுப் பொருட்கள் ரத்தத்தோடு கலந்து சிறுநீர்ப் பைக்கும் செல்லும். அங்கே ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப் பையில் புற்றுநோய் வரும் ஆபத்து உண்டு. கழுத்தில் கழலை, மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது'' என்று எச்சரிக்கிறார்.

நன்றி - குமுதம்

வடிவேலின் கோழி 65 சிரிப்பு


அருட்தந்தை ஜெகத்கஸ்பரும் ஆயா சுட்ட வடையும் !

0 comments




இடிந்த வீடுகள்

ஒடிந்த தீக்குச்சிக்ள்


ஓணாய் ஒலங்கள்

மனித அவலங்கள்

Blood Moon Wolf Pictures, Images and Photos

மரண கிடங்கில்

மனித சந்தோசம்


விழிக்கிற்றின் சாரளாங்களில்

மனித நேயத்தின் விழுப்புன்கள்


பல் விழுந்த கிழவியின்

பார்வையின் அகோரங்கள்

இழவு வீட்டின்

ஒப்பாரிகள்


கற்பிழந்த இழந்த

காமனின் பார்வையில்

மனிதததன்மையின்

விதவைக்கோலங்கள்


வெற்றிலை பாக்கின்

எச்சங்கள்

எங்களின் கனத

இதயததில் விழும்

நெருப்பு துண்டங்கள்.............


ஒடிவராமல் ஒட்டு போட்ட

எங்கள் உறவுக்ளின்

உண்ர்வுகளுக்கு வேட்டு வைத்த

ஒற்றுமை பந்தல்


ஒடிந்து போன கண்ணாடி

துண்டு

உருவத்தை காட்ட மறுக்கின்றன


முடிந்து போன இரவுகள்

எங்கள் மரணத்தை பற்றி

கவலை படுவதில்லை...


அன்பு சாசனத்தில்

இரத்த காட்டேறியின்

கை எழுத்து.....


விழ்ந்தது

இந்த உலகம்

இராவணின் கையில்.....


ஏய்॥

கேடுகெட்ட மனித....

இதற்கு என்ன

சொல்ல போகிறாய்.....


அன்பை போதி

அகிம்சையை போற்று

ஒரு கன்னததை காட்டினால்

மறு கன்னதை காட்டு॥

தன் உயிரை போல்

மன்னூயுரை நேசி...


பாழாய் போன

பழகி போன

இந்த

வார்த்தைகளுக்கு

மறு விசாரனை தேவை....


மனித நேய அகரதியில்..........

நன்றி
- கவிதை மனோகரன் கிருட்ணன்

குழலியின் சிறப்பு பதிவு
ஜெகத்கஸ்பர் அருட்தந்தையா? புளுகுமூட்டையா?