Headline

இலங்கை தூதர் ஹம்சாவின் கார் தாக்கப்பட்டது

0 comments

carry car gif Pictures, Images and Photos


இலங்கைக்காக இந்திய துணை தூதர் ஹம்சாவின் வாகனம் நேற்று இரவு அடித்து நொருக்கப்பட்டுள்ளது. ஆந்திரா வர்த்தக சங்கத்தினால் நேற்று இரவு விருந்து உபச்சாரம் வழங்கப்படும் நிகழ்வுக்கு சென்ற சமயமே இந்த தாக்குதல் நடைபெற்று இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

கடந்த பல ஆண்டுகளாக இலங்கைக்கான இந்திய தூதுவராக கடமையாற்றி வரும் ஹம்சா இங்கிலாந்து நாட்டுக்கான துணைத் தூதுவராக பதவி உயர்வு பெற்று செல்ல இருக்கும் இந்த நிலையில் பல்வேறு அமைப்புக்களை சந்தித்து வருகிறார்.






அந்த வகையில் ஆந்திரா அமைப்பினால் ஏற்பாடு செய்யத இரவு விருந்துபச்சாரம் நேற்று சென்னையில் நடைபெற்ற போது இந்த நிகழ்வு தொடர்பாக அறிந்த வழக்கறிஞர்களும் மாணவர்களும் வெளியில் கூடி இருந்துள்ளனர்

இதனை அறிந்த காவற்துறையினர்; பாதுகாப்பு வழங்க முற்பட்ட சமயம் இரு தரப்பினருக்கும் பிரச்சனை முற்ற மாணவர்களும் வழக்கறிஞர்களும் ஹம்சாவின் வாகனத்தினை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்





நன்றி
- பரந்தன்செய்திகள்


கமல் மகளின் பேட்டி & "லக்" சிறப்பு காட்சி- வீடியோ

2 comments



கமல் மகளின் புதிய இந்தி படமான "லக்" படத்தின் நடிப்பின் அனுபவத்தையும் மற்றும் கமலின் "என்னைப்போல் ஒருவனின்" இசை அமைப்பதை பற்றி சுருதி கூறுகிறார்.

பேட்டியை கான இங்கே கிளிக் செய்யவும்

நன்றி
-சிவாஜிடிவி








பிரபாகரனின் பெற்றோர் கடத்தப்பட்டார்களா?

0 comments


வவுனியா மெனிக்பாம் தடுப்பு முகாமில் இருந்த தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது பெற்றோரைக் காணாமல் போயுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களாக இவர்கள் மெனிக்பாம் தடுப்பு முகாமில் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இவர்கள் சிறீலங்காப் படையினரால் இரகசிய இடத்தில் தங்கவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த 17ம் நாள் வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்த நடவடிகையின் போது அரச கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தமை நினைவூட்டத்தக்கது.


நன்றி
-பாரிஸ்தமிழ்


கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18

7 comments

My best side Pictures, Images and Photos

பாலுறவையும், பாலுறவு உணர்ச்சிகளையும் தூண்டக்கூடிய சாக்கலேட், ஸ்டிராபெர்ரி, பல்வேறு வகையான மூலிகைப் பொருட்களுடன் தற்போது நம்பமுடியாத வகையில் இணைந்திருப்பது கழுதைகளின் தோலில் இருந்து தயாரிக்கப்படும் மாத்திரைகள்.

ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம். நம்பித்தான் ஆக வேண்டும்.

சீனாவில் பாரம்பரிய மருந்துகளைத் தயாரிப்பதற்கு கழுதைகளின் தோலை பதப்படுத்தி அதில் இருந்து எடுக்கப்படும் பொருள் பயன்படுத்தப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.

இந்த மருந்தானது, பெண்களின் பாலுணர்வைத் தூண்டுவதாகத் தெரிய வந்துள்ளது.

தற்போது ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு மருந்து நிறுவனம் ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் கழுதை தோல்களை பாரம்பரிய மருந்துகளை தயாரிப்பதற்காக பயன்படுத்தி வருகிறது.

தென் அமெரிக்காவில் நீண்டகாலமாக கழுதை தோலில் இருந்து மருத்து தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவிலும் இந்த தயாரிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

Donkee Pictures, Images and Photos

சிட்னியைச் சேர்ந் தஅ ஏற்றுமதியாளர் ஜான் பிளெமிங், வெளிநாடுகளில் கழுதைகளை விற்பனை செய்வதற்காக கழுதை வேட்டையை விரும்புவதாகக் கூறியுள்ளார்.

மருந்து நிறுவனங்களுக்கு கழுதையின் தோல் தேவைப்படுவதாகவும், அதில் இருந்து வடிகட்டுதல் மூலம் பெறப்படும் ஒருவகைப் பொருளைக் கொண்டு பாரம்பரிய மருந்துகளை அந்நிறுவனங்கள் தயாரிப்பதாகவும் தெரிகிறது.

Donkey 3 Pictures, Images and Photos

கழுதை தோலில் இருந்து எடுக்கப்படும் பொருள் `எஜியாவோ' என்றழைக்கப்படுகிறது. இதில் இருந்து தயாரிக்கப்படும் `நு பாவ்' என்ற மருந்து பெண்களின் பாலுறவு உந்துதலைத் தூண்டுவதுடன், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியைப் போக்க உதவுவதாகவும் தெரிய வந்துள்ளது.

கழுதை தோல் ஒன்று (பதப்படுத்தப்பட்டது) 30 அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

நன்றி
-வெப்துனியா


அபூர்வ சூரிய கிரணம் ஆய்வு - வீடியோ

2 comments

eclipse Pictures, Images and Photos


1925 -ம் ஆண்டு அமெரிக்காவின் சூரிய கிரண ஆய்வு



இந்தோனிஷியாவில் ஏற்பட்ட முழுமையான சூரிய கிரணம்



நாசா வழங்கும் மாணவர்களுக்கான சூரிய கிரணம் விளக்கம்




நாசாவின் ரகசிய செவ்வாய் கிரக மனிதன் ஆய்வு


ராணுவத்தினரின் உடல்களில் வெட்டுக்காயங்கள்

0 comments

Plane GIF Pictures, Images and Photos


நேற்று இலங்கை விமானப்படையால் வன்னிக்காட்டுப் பகுதிக்குள் கடும் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வன்னி வான்பரப்பை நோக்கி நேற்று 2,3தடவைகளிற்கு மேலாக போர்விமானங்கள் பரந்து சென்றதாகவும் அந்த விமானங்கள் வன்னிக்காட்டுப்பகுதியில் குண்டு வீசியதாகவும் தெரிய வந்துள்ளது.

இதே வேளை பல சிங்கள ராணுவத்தினரின் உடல்கள் வவுனியா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அங்கு கொண்டுவரப்பட்ட ராணுவத்தினரின் உடல்களில் வெட்டுக்காயங்கள் தென்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்

நன்றி
-சுவிஸ்தமிழ்


டி.கே.பட்டம்மாள் காலமானார்

7 comments


பிரபல இசை மேதை டி.கே.பட்டம்மாள் காலமானார். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள்.


கர்நாடக இசையில் மேதையான இவர் நாடு தழுவிய புகழ் பெற்றவர். ஆயிரக்கணக்கான மேடைகளில் இசை பரப்பிய இவருக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் இவர் இன்று காலமானார். இவரது மறைவுக்கு இசை கலைஞர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். இவருக்கு வயது 90. பிரபல பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் இவரது பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவரையும் கவர்ந்த காந்த குரல்


நன்றி
-நக்கீரன்


அவர்கள் தப்பி விட்டனர் - கருணாவின் கதறல்!

0 comments


தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்திய தளபதி கேணல் ராம் மற்றும் அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் ஆகியோர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றிருப்பதாக அமைச்சர் வி் முரளிதரன் பி.பி.சி.யின் சிங்கள சேவையான 'சந்தேசிய' வுக்குத் தெரிவித்திருக்கின்றார்.
வன்னியில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் பலர் கொல்லப்பட்டதையடுத்து, அம்பாறைக் காடுகளுக்குள் மறைந்திருந்த ராம், நகுலன் மற்றும் தயாமோகன் உட்பட்ட குழுவினரே இலங்கைப் படையினருக்கு சவாலாக இருந்துவந்தனர்.
இவர்களையும் சரணடையுமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அதனை ஏற்க முடியாது என தயாமோகன் ஊடகப் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதேவேளையில் சரணடைவதற்கு முற்பட்ட விடுதலைப் புலிகளைச் சேர்ந்த சுமார் 10 போராளிகள் அம்பாறையில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இவர்கள் தொடர்ந்தும் அம்பாறை மற்றும் அதனையடுத்துள்ள மொனறாகல காடுகளுக்குள் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவல்களையடுத்து இலங்கைப் படையினர் குறிப்பிட்ட காட்டுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியிருந்தனர். அத்துடன், இவர்களின் நடமாட்டங்களைக் கண்காணிப்பதற்காக சிறப்பு அதிரடிப்படையின் இரண்டு முகாம்களும் அங்கு அமைக்கப்பட்டன.
இந்நிலையிலேயே இவர்கள் அம்பாறைக் காட்டுப் பகுதியில் இருந்து தப்பிச் சென்றிருப்பதாகவும், மலேசியாவுக்கு இவர்கள் சென்றிருப்பதாகவும் அரசுடன் சேர்ந்தியங்கும் இராணுவத் துணைப்படையின் தலைவரும் அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் 'சந்தேசிய'வுக்குத் தெரிவித்திருக்கின்றார்.
இதேவேளையில் தமது ஆதரவாளர்களில் 600 பேர் இராணுவம் மற்றும் காவல்துறையில் இணைந்து பயிற்சி பெற்றுவருவதாகவும் முரளிதரன் மேலும் தெரிவித்தார்.

நன்றி
-சுவிஸ் தமிழ்


ராஜபக்சேவின் மகன் மீது தாக்குதல்

2 comments


வவுனியா அகதிகள் முகாமுக்கு பயணம் செய்த மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச மீது பொதுமக்கள் சேறடிப்பு மற்றும் கல்வீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
நேற்று சனிக்கிழமை வவுனியா மெனிக்பாம் அகதிகள் முகாமுக்கு ஊடகவியலாளர்களுடன் சென்ற நாமல் ராஜபக்ச மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இளையோர்களின் செயற்திட்டம் குறித்த விடயங்களை முன்னெடுப்பதற்காகவே அங்கு சென்றிருந்தார்.

தாக்குதல்கள் சம்பவங்களை அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் ஒளிப்பதிவு மற்றும் புகைப்படங்களை எடுத்திருந்த போதும் அவற்றை நாமல் ராஜபக்ச பறித்து அழித்துள்ளார். இதனால் பல ஊடங்களில் தாக்குதல்கள் தொடர்பான பதிவுகள் வெளிவரவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி
-தமிழ்வின்


போரளி வெளியிட்ட ரகசிய தகவல்!!!

1 comments

Shadows Pictures, Images and Photos

படையினரிடம் சரணடைந்துள்ள புலிகளில் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் பிரபாகரனது மகள் துவாகராவின் உடலை தோண்டி எடுக்க படையினர் விரைவதாக உள்ளகத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. துவாரகா சோதியா படையணியில் லெ.கேணல் தரத்தில் இருந்ததாகவும் கடந்த மே மாதம் 12ம் இடம்பெற்ற தாக்குதலில் ஆட்லறி செல்வீச்சுக்கு இலக்காகி மரணமடைந்ததாகவும், அவரது உடல் புதுமாத்தளனில் உள்ள பிரதேசம் ஒன்றில் புதைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட புலி உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

அவரின் தகவலை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரையும் படையினர் துவாரகாவின் சடலத்தின் எச்சங்கள் எவற்றையாவது கைப்ற்றின் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தி பிரபாகரனது மரபணுவுடன் ஒப்பிட்டு உறுதி செய்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நன்றி
-பரந்தன் இணைய செய்திகள்


ஆவியாக தோன்றிய மைகேல் ஜாக்சனின் - வீடியோ

3 comments








இன்று ஜாக்சனின் பண்ணை வீட்டின் சுவரில் ஜாக்சனின் நிழல் உருவம் தென்பட்டு பின்னர் மறைந்து விட்டதாக ஜாக்சனின் ரசிகர்கள் சி.என்.என் தொலைக்காட்சியின் இன்சைட் நெவர்லன்ட் என்ற நிகழ்ச்சியின்போது தெரிவித்தனர்.

அந்த நிழல் உருவம் சுவரில் தோன்றி பின்னர் பண்ணை வீட்டின் உள் காரிடார் வழியாக நடந்து போனதாகவும். அதன் பின்னர் அந்த ஆவி உருவம் மறைந்து விட்டது.

அது நிச்சயம் ஜாக்சனின் ஆவியாகத்தான் இருக்க வேண்டும் என ஜாக்சனின் தீவிர ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


ஜாக்சனின் உடல் அடக்க பெட்டி $ 25000 - படம்

2 comments




பாப் ராஜா மைக்கேல் ஜாக்சனின் உடல் அடக்கத்தை ஆடம்பரமாக நடத்த அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். ஒவ்வொரு ஏற்பாட்டையும் கிராண்ட் ஆக செய்கின்றனர். சவப்பெட்டி மட்டும் 25 ஆயிரம் டாலர் செலவில் உருவாக்கியுள்ளனராம்.

தி புரோமெதியான் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சவப்பெட்டி தங்க முலாம் பூசப்பட்டதாகும். வெண்கலத்தால் ஆன அந்த சவப்பெட்டியின் உள்ளே வெல்வெட் விரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் இறுதி அஞ்சலிக்காக உடல் வைக்கபோகும் மைதானம்

இந்த ஆடம்பர சவப்பெட்டியை ஜாக்சனின் சொந்த மாகாணமான இன்டியானாவைச் சேர்ந்த பேட்ஸ்வில்லி காஸ்கட் கம்பெனி என்ற நிறுவனம் தயாரித்துக் கொடுத்துள்ளது.

ஜாக்சனின் உடல் அடக்கம் நாளை மறு நாள் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்படைந்துள்ளன.

மையக்கும் படலால் மக்கள் மனதில் புகழ் உச்சி அடைந்த ஜாக்சன்

நன்றி
-தட்ஸ்தமிழ்
*net photo


சீமானின் ஆவேச பேச்சு!!!

0 comments



பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் மதிமுகவினர் கைது செய்ததை கண்டித்து கண்டனப்பொதுக்கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இயக்குநர் சீமான் விடுதலைப்புலிகள் இயக்கத்தினை எவராலும் அழிக்க இயலாது என்று கூறியுள்ளார். கூட்டத்தில் டைரக்டர் சீமான் பேசியதாவது


வீரத்திற்கு பெயர் பெற்றவர்கள் நம் தமிழ் இன மக்கள். தமிழர்கள் வாழும் இலங்கையில் நடைபெற்ற போரில் ஈழத்தமிழர்களுக்காக பல முறை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியும் பயன் இல்லை. அதில் 11/2 லட்சம் இலங்கை தமிழர்கள் குண்டடிப்பட்டும், பசியாலும், மருந்தின்றியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாம் 61/2 கோடி தமிழ் இன மக்கள் வாழ்ந்து என்ன பிரயோஜனம். சீக்கியன் அடிப்பட்டால் நாடே ஸ்தம்பிக்கிறது. தமிழன் அடிப்பட்டால் கேட்க நாதியற்றவனாக அனாதையாக இறக்கிறான்.

இந்தியா, சீனா பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளின் கைக்கூலியாக இலங்கை அதிபர் ராஜபக்சே செயல்பட்டு வருகிறார். 5000 கோடி டாலருக்கு ராஜபக்சே விலை போய்விட்டார் கச்சத்தீவில் ராணுவ முகாம் அமைக்கவும், பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் மறைமுகமாக இலங்கை உதவி செய்தும் வருகிறது.

இந்தியா பேராபத்தை எதிர்நோக்கி உள்ளது. இந்தியாவின் மவுனம் லட்சக்கணக்கான தமிழ் மக்களின் உயிரை குடித்து கொண்டுள்ளது.

அன்று வெள்ளையனுக்கு எதிராக கப்பல் ஓட்டினார் வ.உ.சி. ஆனால் இன்று சிங்களனுக்கு எதிராக விமானம் ஓட்டினார் பிரபாகரன். நாம் தவறு செய்யும் போது நாடு கேட்கும். ஆனால் நாடே தவறு செய்யும் போது தட்டி கேட்டால் எனக்கு தேசிய பாதுகாப்பு சட்டமாம். தமிழர்களின் வரிப்பணத்தில் தமிழர்களையே தாக்குவது என்ன நியாயம்.

விடுதலைபுலி இயக்கம் தடை செய்யப்பட்ட நாடுகளான ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கிறது. ஆனால் இந்தியா முதுகெலும்பு இல்லாமல் முடக்குகிறது. உலகம் முழுக்க பத்து கோடி தமிழர்கள் இருந்தும் நம் ரத்த உறவுகளையும் தாய்மொழியையும் காப்பாற்ற முடியாமல் அவல நிலையில் தவிக்கிறோம். தமிழின மக்களே நம் நாட்டு தலைவர்களை நம்ப வேண்டாம். சூரியன் (பிரபாகரன்) மறையுமே ஒழிய ஒரு போதும் மரணிக்காது மீண்டும் மீண்டும் உதிக்கும் அதுபோல விடுதலை புலி இயக்கத்தை யாரலும் அழிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

நன்றி
பரந்தன் இணையம்


முகாமில் உள்ள மக்கள் கிளர்தெழ தொடங்கி உள்ளனர்

1 comments

eyes crying Pictures, Images and Photos


இலங்கை அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை குறித்து ஆஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் தி ஆஸ்திரேலியர் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. 
 
தொண்டு நிறுவன பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் திரட்டிய தகவலின் அடிப்படையில் இந்த செய்தியை வெளியிட்டு உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:  
 
புல்மொட்டையில் உள்ள அகதிகள் முகாமில் பெண்களை அதிகாரிகளே கட்டாய விபசாரத்தில் தள்ளுகின்றனர். இதுபற்றி மேல் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
 
அகதி முகாம்களில் உள்ள ஒவ்வொரு கூடாரத்திலும் 3 குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். குறுகிய இடத்தில் 3 குடும்பங்கள் தங்கி இருப்பதால் ஒருவருக்கு ஒருவர் இடையூறாக உள்ளது. 
 
அங்கு வரும் ராணுவத்தினர் அகதிகளுக்கு தேவையான இடத்தை ஒதுக்கவும், மற்ற தேவைகளை வழங்கவும் லஞ்சம் வாங்குகின்றனர். 
 
முகாம்களில் உள்ள குடும்பத்தினர் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டு உள்ளனர். விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படும் ஆண்களும், பெண்களும் வேறு இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அவர்களை பற்றிய எந்த விவரங்களையும் குடும்பத்தினருக்கு தெரிவிக்கவில்லை. அவர்களை அழைத்து சென்றவதற்கான ஆதாரம், அடையாள சீட்டு போன்றவையும் வழங்கப்படவில்லை. 
 
முகாமில் இருப்பவர்களை சுதந்திரமாக நடமாட அனுமதிக்கவில்லை. முகாமில் பெரும் நெருக்கடி நிலவுகிறது. இதனால் மக்கள் கிளர்தெழ தொடங்கி உள்ளனர். 
 
குடும்ப உறுப்பினர்கள் தனித்தனியாக வெவ்வேறு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதால் ரத்த உறவுகளை சந்திக்க மற்ற முகாம்களுக்கு செல்ல முயச்சிக்கின்றனர். இதற்கு ராணுவம் மறுப்பதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. 
 
இப்படி கிளர்ச்சியில் ஈடுபட்ட 2 அகதிகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். முகாம்களில் இருப்பவர்களில் 80 சதவீதம் பேர் இந்த வருட இறுதிக்குள் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என அறிவித்து உள்ளன. ஆனால் அதற்கான சாத்தியம் இல்லை என்று தி ஆஸ்திரேலியர் என்ற பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.



துபாய் வாழ் நண்பர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்

5 comments



இன்று சங்கமம் லைவ் தளத்தில் இருந்து நான் பெற்ற மின் அஞ்சல் செய்தி.

துபாய் ம‌ருத்துவ‌ம‌னையில் சுய‌நினைவிழ‌ந்த‌ நிலையில் இந்திய‌ர் ஒருவ‌ர் க‌ட‌ந்த‌ ஒரு மாத‌மாக அவ‌ச‌ர‌ சிகிச்சைப் பிரிவில் இருந்து வ‌ருகிறார்.





இந்திய‌ ம‌க்க‌ளுக்கு ப‌ல்வேறு ச‌முதாய‌ப் ப‌ணிக‌ளை ஆற்றிவ‌ரும் ஈமான் அமைப்பின் குழுவின‌ர் அத‌ன் ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா த‌லைமையில் ம‌ருத்துவ‌ம‌னையில் சிகிச்சை பெற்று வ‌ரும் இந்திய‌ர்க‌ளை வார‌ந்தோறும் ச‌ந்தித்து அவ‌ர்க‌ள‌து தேவைக‌ளை நிறைவேற்றி வ‌ருகின்ற‌ன‌ர்.


அவ்வாறு சென்ற‌ பொழுது இந்திய‌ர் ஒருவ‌ர் க‌ட‌ந்த‌ ஒரு மாத‌ கால‌மாக‌ அவ‌ச‌ர சிகிச்சைப் பிரிவில் நினைவிழ‌ந்த‌ நிலையில் சிகிச்சை பெற்று வ‌ரும் த‌க‌வ‌ல் அறிந்து அவ‌ரைப் பார்த்து வ‌ந்த‌ன‌ர்.

இவ‌ர் யார் என்ப‌த‌ற்கான‌ எவ்வித‌ சான்றுக‌ளும் அவ‌ரிட‌ம் இல்லாத‌ நிலையில் ம‌ருத்துவ‌ம‌னியில் சேர்க்க‌ப்ப‌ட்டுள்ளார். இவ‌ரைப் பார்க்கையில் த‌மிழ‌க‌ம், கேர‌ளா, ஆந்திரா உள்ளிட்ட‌ மாநில‌த்தைச் சேர்ந்த‌வ‌ராக‌ இருக்க‌லாம் என‌ க‌ருத்த‌ப்ப‌டுகிற‌து.

த‌மிழ் பேசும் போது ம‌ட்டும் இவ‌ர‌து பார்வை மேலும் கீழும் வ‌ருகிறது. என‌வே இவ‌ர் குறித்து த‌க‌வ‌ல் தெரிந்தால் ஈமான் ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹாவை 050 467 4399 / 050 51 96 433 எனும் அலைபேசியில் அல்ல‌து muduvaihidayath@gmail.com என்ற‌ மின்ன‌ஞ்ச‌லிலோ தொட‌ர்பு கொள்ள‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

அவ்வாறு த‌க‌வ‌ல் கிடைக்கும் ப‌ட்ச‌த்தில் இவ‌ர் ப‌த்திர‌மாக‌ அவ‌ர‌து குடும்ப‌த்தாரிட‌ம் சேர்ப்ப‌த‌ற்கான‌ ஏற்பாடுக‌ள் செய்ய‌ப்ப‌டும்.

- தகவல்: முதுவை ஹிதாயத்

நன்றி
-சங்கமம் லைவ்


அவர்கள் அகதிகள் இல்லை - தியாகு

0 comments



1.முந்தைய பகுதி

2ஆம் பகுதி

கேள்வி : நீங்கள் சொன்னது போல, போரினால் இடம் பெயர்ந்த ஈழத் தமிழ் மக்களை அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்த வேண்டும். மற்றொன்று, அவர்களுடைய உரிமைப் போராட்டத்தை இதற்குமேல் முன்னெடுப்பதற்கு பல்வேறு நாடுகளில் நடந்து கொண்டிருக்கிற முயற்சிகளுக்கிடையே, இங்கே உள்ள அகதிகளை அங்கே திருப்பி அனுப்புவதற்கான ஒரு திட்டமும் தீட்டப்பட்டுள்ளதாகவும், இங்கு இருக்கக்கூடிய இலங்கை தூதரக அதிகாரிகள் சில முகாம்களுக்குப் போய் உங்களில் யார் யாரெல்லாம் தயாராக இருக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். எனவே, இங்கிருக்கக்கூடிய அகதிகளைக் கூட வற்புறுத்தி அந்த நாட்டிற்கு அனுப்பக்கூடிய ஒரு முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தியாகு: முதலில், இது மக்கள் எழுச்சியின் மூலமாக தடுக்கப்பட வேண்டும். சட்டப்படியும் தடுக்கலாம். ஏனென்றால், சர்வதேச சட்டங்களுக்கு முரணானது இந்த முயற்சி. எந்த அகதியையும் அவர் விருப்பத்திற்கு புறம்பாக அந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடியாது. அப்படி அனுப்புவதென்றால், தலாய் லாமாவை திபெத்திற்கு என்றைக்கோ அனுப்பியிருக்கலாம் அல்லது அவரோடு வந்தவர்களையெல்லாம் அனுப்பியிருக்கலாம். அவர்களையெல்லாம் தங்கவைத்து ஏதோ செய்து கொண்டிருக்கிறார்கள். செய்யட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. அவர்கள் தாய்நாட்டிற்குத் திரும்பிச் செல்லும் சூழல் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் விடுதலை கூட கேட்கவில்லை. சுயாட்சி அதிகாரம்தான் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். விடுதலை கேட்கிற சக்திகள் வேறு இருக்கிறார்கள். அதுபோல எத்தனையோ நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கே வந்து அரசியல் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். தங்கியிருக்கிறார்கள். இதேபோல, வேறு நாடுகளிலும் போய் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். எனவே ஈழத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் அகதிகளாக இல்லை, நம்முடைய உடன்பிறப்புகளாகவே தங்கியிருப்பதற்கும், வாழ்வதற்கும் முழு உரிமை உண்டு. தமிழ்நாடு முழுவதும் எந்தெந்த இனத்தவரோ வந்து பங்கு போட்டு ஊரைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இருக்கிற உரிமை தமிழ் பேசுகிற மனிதர்களுக்கு இல்லை என்று சொன்னால் அது மிகவும் அநியாயம்.


ஆனால், நாம் சந்தேகப்படுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. ஒரு காரணத்தை நான் தெளிவாகச் சொல்கிறேன். தமிழக அரசு மறுக்க வேண்டும் இதை. மறுத்தால்தான் அதை நாம் நம்ப வேண்டும். எந்த தனியார் கல்லூரிகளிலும் ஈழ மாணவர்களைச் சேர்க்க வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பல தனியார் கல்லூரிகளில் இதைச் சொல்கிறார்கள். ஏனென்றால், நாங்கள் அவர்களை திரும்பி அனுப்பப் போகிறோம். அவர்களை கல்லூரிகளில் சேர்க்காதீர்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். இங்கு அகதிகள் முகாம்களுடைய நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது என்பது உண்மை. இதெல்லாம் எதற்கு என்றால், திருப்பி அனுப்புகிற நிர்ப்பந்தத்தை உண்டு பண்ணுவதற்குத்தான். அதிலும் குறிப்பாக, இந்த அகதிகளிலேயே சிறப்பு முகாம்கள் என்று சொல்லி குறிப்பிட்ட போராளி அமைப்புகளோடு தொடர்புடையவர்கள், உதவியவர்கள் என்று சொல்லி சிறப்பு முகாமில் சில பேரை அடைத்து வைத்திருக்கிறார்கள். அதுவொரு ஆண்டுக்கணக்கில்லாத ஆயுள் தண்டனை. எந்த குற்றச்சாற்றும் கிடையாது. ஆனால் அவர்களை அடைத்து வைத்திருக்கிறார்கள். இவர்களை திருப்பி அனுப்புவதாக இருந்தால் அவர்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும். அங்கே மற்ற மனிதர்களுக்கே ஆபத்து நிச்சயம். அதற்கும் மேல், இவர்களைப் பொறுத்தவரைக்கும் குறிப்பிட்ட போராளிக் குழுக்கள், விடுதலைக்கு உதவியவர்களை கொண்டுபோய் நாங்கள் புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று சிங்கள அரசு கேட்கிறது. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், விடுதலை இயக்கம் என்று சொன்னால், அது மக்களின் ஆவலில் இருந்து பிறக்கிற ஒரு இயக்கம். எனவே ஒடுக்குமுறை இருக்கிற இடத்தில் விடுதலை வேட்கை பிறக்கும். அந்த வேட்கைதான் இப்படிப்பட்ட போராளிகளை தோற்றுவிக்கும் என்பதை புரிந்துகொள்வதற்கு பதிலாக, புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களையெல்லாம் ஒழித்துவிட்டால், விடுதலை இயக்கத்தை ஒழித்துவிட முடியும் என்று நினைக்கிறார்கள். எனவே அந்த இயக்கத்தை ஆணி வேர், சல்லி வேர் பார்த்து அடியோடு பிடுங்கி எறிய வேண்டும் என்ற வெறித்தனமான பிடிவாதம் அந்த அரசிற்கு இருக்கிறது.
ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், ஏற்கனவே புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்த காலத்தில், சகலதரப்பட்ட மக்களுக்கும் அவர்கள் ராணுவ பயிற்சி கொடுத்தார்கள். படையில் சேர்பவர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் பொதுவாக கட்டுப்பாடு, ஒழுங்கு என்ற முறையில். அப்படி செய்யும் போது அவர்கள் என்ன செய்தார்கள் என்றால், தானி ஓட்டுநர்களுக்கெல்லாம் பயிற்சி கொடுத்தார்கள். அந்த பயிற்சி கொடுத்ததற்குப் பிறகு என்ன செய்தார்கள் என்றால், வானொலி, தொலைக்காட்சியில் எல்லாம் தோன்றி தாங்கள் பயிற்சி பெற்றது, அதனால் கிடைத்த நன்மை பற்றியெல்லாம் இவர்கள் பேட்டி கொடுத்தார்கள். இதையெல்லாம் எடுத்து பத்திரமாக உளவுத்துறை சேர்த்து வைத்துக் கொண்டார்கள். புலிகள் கையில் இருந்து யாழ்ப்பாணம் கையைவிட்டுப் போன பிறகு அந்த தானி ஓட்டுநர்கள் யார் யாரெல்லாம் பேட்டி கொடுத்தார்களோ, பிடித்துக் கொண்டுபோய் சித்ரவதை செய்து கொலை செய்துவிட்டார்கள். இது நடந்தது. அவர்களுக்கு அந்த கதி என்றால், சாதாரண மக்கள், அந்த இயக்க உறுப்பினர்களோ, அவர்களோடு சேர்ந்து போருக்கெல்லாம் போய்விடவில்லை. பயிற்சி பெற்றுக் கொண்டார்கள், அவ்வளவுதான். சிங்கப்பூரில் எல்லோருக்கும் கட்டாய ராணுவ பயிற்சி என்ற ஒரு திட்டம் இருக்கிறது. ஓராண்டோ, இரண்டாண்டோ பயிற்சி பெற்றுவிட்டு மீண்டும் பழைய வேலைக்கு வந்துவிடுவார்கள். அதனால் ராணுவத்தோடு சேர்ந்துவிடுவதில்லை. பல நாடுகளில் இந்த முறை இருக்கிறது. அந்த மாதிரிதான். ஆனால் அவர்களையெல்லாம் கொன்றுவிட்டார்கள். அப்படி இருக்கும் போது இவர்களையும் அனுப்பினால் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

அவர்களாக யாராவது விரும்பினால் போகட்டும். யாருக்கும் தடையில்லை. ஆனால், அவர்கள் யாருமே விரும்பவில்லை என்பதுதான் உண்மை. அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்றால், வீட்டில் உட்கார்த்திருந்தவர்களையெல்லாம் அகதி முகாமில் கொண்டு சென்று அடைத்து வைத்துவிட்டு, இங்கு அகதியாக வந்தவர்களையெல்லாம் கொண்டுபோய் வீட்டில் விட்டுவிடுகிறோம் என்று சொன்னால் எப்படி நம்புவது என்று கேட்கிறார்கள். கொழும்பு தூதரகத்தில் இருந்து போய் அகதி முகாம்களில் பார்க்கிறார்கள். நீங்கள் எல்லாம் வாங்க. வீட்டுக்கே போய்விடலாம், போர் முடிந்துவிட்டது என்று சொல்கிறார்கள். ஏற்கனவே வீட்டில், அவனவன் வயலில் வேலை பார்த்துக் கொண்டு, மீன் பிடித்துக் கொண்டு, உழவு பார்த்துக்கொண்டு, பள்ளிக்கூடம் நடத்திக் கொண்டிருந்தவர்களையெல்லாம் அடித்து, துரத்திக் கொண்டு

சென்று வேலி அடைத்து முகாம்களுக்குள் அடைத்துவைத்துவிட்டு, உங்களை கொண்டு சென்று வீட்டில் உட்கார வைக்கிறோம் என்று சொன்னால் என்ன அர்த்தம்? முதலில் அதை செய்து காட்டுங்கள். பிறகு எங்களிடம் வாருங்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

எனவே அவர்களை எந்த வகையிலும் நிர்ப்பந்திக்கக்கூடாது, நெருக்கடி கொடுக்கக்கூடாது. சர்வதேச அளவில் ஏதிலியர்களுக்காக இருக்கக்கூடிய சட்டங்கள், ஒப்பந்தங்களின் படி அவர்கள் அனைத்து உரிமைகளோடும் தமிழ்நாட்டில் நடத்தப்பட வேண்டும். இதற்கு எச்சரிக்கையாக இருந்து நாமும் போராட வேண்டும். அவர்களும் போராட வேண்டும். சட்டப்படியும் அதை தடுக்க வேண்டும்.

நன்றி
-பாரிஸ்தமிழ்